Saturday, April 30, 2011

ஸர்க்கம் 25 கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸர்க்கம் 25
கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸாபநீய தமாயஸம் உபஸ்ப்ருச்ய ஜலம் ஸூசி: !
சகார மாதா ராமஸ்ய மங்களாநி மநஸ்விநீ: !!

தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு, தான் அதுவரையில் அழுது கொண்டிருந்ததால் உண்டாண அசுத்தத்தைப் போக்க ஆசமனம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு கௌசல்யை, "ரகுகுல திலக, காட்டிற்குப் போகாமல் உன்னைத் தடுக்க முடியவில்லையே. ஆகையால் போய் வா. பதிநான்கு வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வந்து முன்னோர்களின் ஆசாரப்படி ராஜ்யாபிஷேகம் செய்து கொள். எந்த தர்மத்தை நீ ப்ரீதியுடன் பூர்ணமாக அனுஷ்டிக்கிறாயோ, அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றட்டும். நாற்சந்திகளிலும் தேவாலயங்களிலும் நீ நமஸ்கரிக்கும் தேவதைகளும் மஹரிஷிகளும் காட்டில் உன்னை ரக்ஷிக்கட்டும். விசுவாமித்திர மஹரிஷியால் உனக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்திரங்கள் யாவும் உத்தம குணங்களுள்ள உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். நீ பெற்றோர்களுக்குச் செய்யும் சிச்ரூஷையும் நீ பேசும் சத்தியமும் உன்னைக் காப்பாற்றட்டும். உனக்குத் தீர்க்காயுசைக் கொடுக்கட்டும். சமித்துகள், தர்பங்கள், அக்னி குண்டங்கள், தேவ பூஜாஸ்தானங்கள், குன்றுகள், மரங்கள், செடிகள், குட்டையான மரங்கள், மடுக்கள், பக்ஷிகள், சர்ப்பங்கள்,சிம்மங்கள் உன்னைக் காப்பாற்றட்டும். சாத்யர்கள், விச்வேதேவர்கள், மருத்துவர்கள், மஹரிஷிகள், தாதாவிதாதா பூஷா பகன் அர்யமா முதலிய பன்னிரண்டு ஆதித்யர்கள், இந்திரன், யமன், வருணன், குபேரன் முதலிய லோகபாலர்கள், பக்ஷங்கள், மாஸங்கள், ருதுக்கள், வருஷங்கள், பகல், ராத்திரி, முகூர்த்தங்கள் முதலியவைகளின் அதிஷ்டான தேவதைகளும் உனக்கு எப்பொழும் மனகளைச் செய்யட்டும். தியானமும் யோகமும் வேத சாஸ்த்திரங்களில் சொல்லப்படும் தர்மமும் உன்னை நான்கு புறங்களிலும் காப்பாற்றட்டும். சனத்குமாரரும் சோமனும் பிருஹஸ்பதியும் சப்த ரிஷிகளும் நாரதரும் உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். மஹாப்பிரசித்தியுள்ள திக்பாலர்களும் நான் செய்யும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷித்து உன்னைக் காப்பாற்றட்டும். கடற்கரையில் இருக்கும் மலைகளும் சமுத்திரமும் குபேரனும் வருணனும் சொர்க்கமும் ஆகசமும் பூமியும் நதிகளும் நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் கிரஹதேவதைகளும் ராத்திரி பகல்களுக்கு அபிமானி தேவதைகளும் இரண்டு சந்தியா தேவதைகளும் உன்னைக் காப்பாற்றட்டும். ருதுக்கள், மாதங்கள், வருஷங்கள் கலைகள், காஷ்டைகளின் அதிஷ்டான தேவதைகள் உனக்கு ஷேமத்தைக் கொடுக்கட்டும். காட்டில் நீ தபஸ்வீயாக வசிக்கும் பொழுது ஆதித்யர்களும் சாத்யர்களும் உனக்குச் சுகத்தைக் கொடுக்கட்டும். ராக்ஷர்களாலும், பிசாசங்களாலும், குரூர நடத்தை உள்ளவர்களாலும், மாம்சத்தைப் புசிக்கும் ஜந்துக்களாலும் உனக்கு பயமுண்டாக வேண்டாம். வானரங்கள், தேள்கள், காட்டு ஈக்கள், கொசுக்கள், ஊரும் ஜந்துக்கள், புழுக்கள் காட்டில் உனக்குக் கெடுதி செய்யாமல் இருக்கட்டும். பெரிய யானைகள், சிம்மங்கள், புலிகள், கரடிகள், பன்றிகள், எருமைகள், பயங்கரமான காட்டுமாடுகள் இவை உனக்குத் தீங்கு செய்ய வேண்டாம். நரமாமிசத்தை தின்னும் மற்ற பிராணிகளும் நான் செய்யும் பூஜையால் திருப்தி அடைந்து உனக்குக் கெடுது செய்ய்யாமலிருக்கட்டும். நீ போகும் வழிகளில் உனக்கு க்ஷேமமுண்டாகட்டும். உன் பராக்கிரமம் வீணாகாமல் நீ உத்தேசித்த பிரயோஜனத்தை அடைவாய். நீ விரும்பும் சகல பொருள்களும் உனக்கு வனத்தில் கிடைக்கட்டும். பூமியிலும் ஆகாசத்திலும் உனக்கு உனக்கு விரோதிகளாக இருக்கும் தேவதைகளும் உனக்கு க்ஷேமத்தை உண்டாக்கட்டும். பிருஹஸ்பதி, சோமன், சுரியன், குபேரன், யமன், அக்னி,வாயு, ஹோமப்புகை, ரிஷிகளிடத்திலிருந்து நீ அப்ஸியத்த மந்திரங்கள் இவையெல்லாம் வனத்தில் நீ ஸ்*நானம் செய்யும் காலத்தில் உன்னைக் காப்பாற்றட்டும். சகல லோகத்திற்கும் பிரம்மாவும், சகல பிராணிகளையும் போஷிக்கும் நாராயணனும், மற்ற ரிஷிகளும் வனத்தி உன்னை ரக்ஷிக்கட்டும்," என்று சொன்னபின் மாலைகளாலும் கந்தங்களாலும், அவர்களுக்குத் தகுந்த ஸ்தோத்திரங்களாலும் தேவதைகளைப் பூஜித்தாள்.

பிறகு மஹாத்மாவான ஒரு பிராம்ணனால் அகியை மூட்டி ஹோமத்திற்காக நெய், சமித்துகள், வெள்ளைக் கடுகு, வெள்ளை மாலைகள் முதலியவைகளை சம்பாதித்து, ராமனுக்கு க்ஷேமம் உண்டாவதற்காக அதில் விதிப்படி ஹோமம் செய்தாள். உபாத்தியாயரும் ராமனுக்கு சகல உபத்திரவங்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாக வேண்டுமென்று ஹோமம் செய்து, மிகுந்த ஹவிஸால் ஹோமகுண்டத்திற்கு வெளியில் லோகபாலர் முதலியவைகளுக்கு பலி வைத்தார். பிராம்மணர்களுக்குத் தேன், நெய், தயிர், அக்ஷதை முதலியவைகளைக் கொடுத்து, ராமனுக்கு வனத்தில் க்ஷேம உண்டாகும்படி ஸ்வஸ்தி வாசனம் செய்வித்தாள். பிறகு உபாத்தியாயருக்கு வேண்டியவரையில் தக்ஷிணையைக் கொடுத்துக் கௌசல்யை, "குழந்தாய், தேவந்திரன் விருத்ராஸூரனைக் கொன்று சகல தேவதைகளாலும் வணங்கப்பட்ட பொழுது, அவனுக்கு உண்டான க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். கருடன் அமிருதத்தைக் கொண்டு வரப் புறப்பட்ட பொழுது அவருடைய தாயான வினதை அவருக்கு எந்த க்ஷேமத்தைப் பிரார்தித்தாளோ அது உனக்கு உண்டாகட்டும். அமிருதத்திற்காக சமுத்திரத்தைக் கடையும்பொழுது தைத்யர்களை நாசம் செய்யும் பொருட்டு இந்திரனுக்கு அதிதி எந்த க்ஷேமத்தை அனுக்ரஹித்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவற்ற தேஜஸூள்ள மஹாவிஷ்ணு லோகங்களை மூன்றடியால் அளக்கப் போகையில் அவருக்கு நேர்ந்த க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். ருதுக்களும் சமுத்திரங்களும் உனக்குப் பரம மங்களத்தைச் செய்யட்டும்", என்று அவருடைய தலையில் அக்ஷதைகளைப் போட்டு, நேர்த்தியான கந்தத்தை அவருடைய தேகத்தில் பூசி, பிரசித்தமான வீரியத்துடன் கூடின விசல்யகரணி என்ற மூலிகையை ரக்ஷையாகக் கையிற்கட்டி, அதற்குத் தகுந்த மந்திரங்களை ஜபித்தாள்.

மனத்தி மிகுந்த துக்கமிருந்தாலும் சந்தோஷித்தவளைப் போல் காட்டிக் கொண்டு, ராமனைத் தன் அருகில் அழைத்து உச்சி முகர்ந்து ஆலிங்கனம் செய்து தழதழத்த வார்த்தைகளால், "நீ உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற சௌக்கியமாகப் போய் வா. உன் எண்ணங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து நோயில்லாமல் மறுபடியும் அயோத்யைக்கு வந்து நீ நமது முன்னோர்கள் அனுஷ்டித்த க்ஷத்திரிய தர்மத்தைக் கைக்கொண்டு நீ சுகமாய் இருப்பதைப் பார்ப்பேன். காட்டில் என் மகனுக்கு என்ன நேருமோ என்ற கவலை தீர்ந்து, உன்னை மறுபடியும் பார்த்த சந்தோஷத்தால் முகம் மலர்ந்தவளாக, உதயமான பூர்ண சந்திரனைக் காண்பது போல் உன்னை மறுபடியும் காண்பேன். தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, காட்டிலிருந்து வந்து, சிம்மாசனத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதையும் பார்ப்பேன். வனவாசம் செய்து திரும்பி வந்து உன் பதவிக்குத் தகுந்த அலங்காரங்களுடன் எனக்கும் சீதைக்கும் சகல மனோரதங்களையும் பூர்த்தி செய். என்னால் பூஜிக்கப்பட்ட தேவதைகளும் சிவன் முதலியவர்களும், மஹரிஷிகளும் பூதங்களும் அஸூரர்களும் உரகர்களும் திக்குகளும் நீ வனத்திற்குப் போகும்பொழுது உனக்கு சகல மங்களங்களையும் கொடுக்கட்டும்," என்று கண்களில் நீர் ததும்ப விதிப்பிரகாரம் ஆசிர்வாதம் செய்து முடித்து, ராமனுக்கு ரக்ஷையாக அவரைப் பிரதிக்ஷணம் செய்து, மிகுந்த பிரீதியுடன் அடிக்கடி ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

ராமன் ஸ்வபாவத்திலேயே மஹாதேஜஸ்வி. கௌஸல்யையின் ஆசிர்வாதத்தாலும் ரக்ஷையினாலும் அவருடைய தேஜஸ் விருத்தியாயிற்று. பிறகு எந்த ஆபத்திலும் தர்மம் தவறாமல் நடந்து கொண்டதனால் மஹா கீர்த்தியை அடைந்த ராமன், தாயின் பாதங்களில் அடிக்கடி நமஸ்கரித்து, சீதைக்கு அந்த சமாசாரத்தைத் தெரிவிக்கத் தன் அந்தப் புரத்தை நோக்கி வந்தார்.

ததா து தேவ்யா ஸ க்ருத ப்ரதக்ஷிணோ
நீபீட்ய மாதுச்சரணௌ புந: புந: !
ஜகாம ஸீதாநிலயம் மஹாயஸா
ஸ ராகவ: ப்ரஜ்வலித: ஸ்வயா ஸ்ரியா !!




ஸர்க்கம் 25 நிறைவு பெற்றது.

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு, மங்கள சுலோகங்களை படித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


(((((((((ஸ்ரீ ராம ராம ராம)))))))))

Friday, April 29, 2011

கௌசல்யை சம்மதித்தது ஸர்க்கம் 24

ஸர்க்கம் 24
கௌசல்யை சம்மதித்தது

தம் ஸ்மீக்ஷ்ய த்வவஹிதம் பிதுர் நிர்தேச பாலனே !
கௌஸல்யா பாஷ்பஸம்ருத்தா வசோ தர்மிஷ்ட மபரவீத் !!


"ராமன் தர்மத்திலிருந்து விலகமாட்டான். அவனுடைய தந்தையின் வார்த்தைப்படி நடப்பான் என்பதில் சந்தேகமில்லை," என்று கௌசல்யை நிச்சயமகத் தெரிந்து கொண்டு, அந்த சமயத்தில் கண்ணீர் விடுவது அபசகுனம் என்றெண்ணி அடக்கிக் கொண்டு, "எனக்கும் தசரதருக்கும் அருமைக் குழுந்தையாகப் பிறந்த நீ, இதுவரையில் துக்கத்தையே அறியாதவன்.காட்டிற்கு போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் நெல்லுகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கித் தின்று எப்படிப் பிழைப்பாய்?. உன் வேலைக்காரர்களும் பரிசாரர்களும் நேர்த்தியான அன்னத்தைப் புசித்து சுகமாக இருக்கிறார்களே. அவர்களுக்கு தலைவனான நீ, காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் தின்று எப்படிப் பிழைப்பாய்?. "ராமன் தசரதனுக்கு மூத்த புதல்வன். அவனிடத்தில் அவருக்கு எல்லையற்ற அன்பு. உத்தம குணங்கள் யாவும் பொருந்தியவன். அப்படியும் அவனை அவர் ராஜ்யத்திலிருந்து துரத்திவிட்டார்",என்று ஒருவன் கேட்டால் அதை அவன் நம்புவனா? அப்படியே நம்பினாலும், ராமனுக்கே ஆபத்து நேரும் பொழுது நமது கதி என்ன ஆகுமோ என்று திகிலடைய மாட்டானா? எல்லாப் பிராணிகளுக்கும் ஆனந்த்தத்தை உண்டுபண்ணும் நீயே காட்டிற்குப் போகும்படி நேர்ந்ததை நினைத்தால், எல்லோருக்கும் சுக துக்கங்களைக் கொடுக்கும் சக்தி தெய்வமே. அதை விட மேலானது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. உன்னை விட்டுப் பிரிவதால் உண்டாகும் சோகமென்ற நெருப்பு, கோடை காலத்தில் வனத்திலிருக்கும் புல் பூண்டுகளைக் காட்டுத் தீ எரிப்பது போல, என்னை எரிக்கிறது. அதற்கு என் தேகமே இருப்பிடம். உன்னைப் பார்க்காமல் இருப்பதென்ற காற்றால் அது அது வளர்க்கிறது. உன்னை நினைத்து பிரலாபித்ததால் உண்டாகும் துக்கமே அதைப் போஷிக்கும் ஸமித்துகள். ஆறாகப் பெருகும் கண்ணீரே அதில் ஹோமம் செய்யப்படும் ஆஹூதிகள். உன்னைப் பற்றி கவலையால் உஷ்ணமே இதிலிருந்து கிளம்பும் புகை. இவைகளைச் சேர்த்து வைக்கும் புருஷப் பிரயத்தினமே என் பெரு மூச்சுகள். அதை அணைக்கும் தண்ணீரைப் போன்றவனே நீ. அந்த தண்ணீரில்லாமல் இந்த பாழும் நெருப்பு வர வர வளர்ந்து என்னை நாசம் செய்யப் போகிறது. தன் கன்றையும் பசு பின் தொடர்வது ஆச்சரியமா? நீ எங்கே போகிறாயோ அங்கே நானும் வருவேன்", என்றாள்.


ராமன்,"அம்மா! தாங்கள் ஒன்றை யோசிக்கவேண்டும். நானும் காட்டிற்குஒ போய், தாங்களும் என்னுடன் வந்து, கைகேயியால் வஞ்சிக்கப்பட்ட என் தந்தையை கை விட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பது நிச்சயம். சாதாரணமான பெண்களுக்கே பர்த்தாவைக் கை விடுவது வெகுக் குரூரமான செய்கை. தாங்களோ அதை மனதால் நினைப்பது பிசகு. என் தந்தையான சக்கரவர்த்தி உயிரோடுடிருக்கும் வரையில் தாங்கள் அவருக்கு பணிவிடை செய்யவேண்டும். இதுவே நமது முன்னோர்களின் நித்தியமான தர்மம்", என்றார்.


கௌசல்யை மஹா தர்ம சிந்தையுள்ளவள். ஆகையால் ராமனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்படியே செய்வதால் ஒப்புக் கொண்டாள். பிறகு அவர் அவளுடைய மனத்தில் குடி கொண்ட துக்கத்தை நீக்கி, புத்தியை ஸ்திரப் படுத்துவதற்காக "தாங்களும் நானும் மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டியதால்லவா? அவர் நம்மை ஆளும் அரசன் . நம்மைக் காக்கும் பிரபு. நமக்கு தர்மத்தை உபதேசிக்கும் குரு. குணங்களால் எல்லோரைக் காட்டிலும் மேலானவர். எல்லோருக்கும் அதிபதி. பதினான்கு வருஷங்களை ஒரு கணத்தைப் போல காட்டில் விளையாட்டாகக் கழித்துவிட்டு, மறுபடியும் தங்களுடைய பாதங்களில் பணிவிடை செய்வேன்," என்றார்.


கௌசல்யை ராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்கும் தான் அயோத்யையில் இருப்பதற்கும் சம்மதித்தாள். ஆனால் அவரிடத்தில் தான் வைத்திருக்கும் அன்பையும் தன் சக்களத்திகளின் துஷ்ட ஸ்பாவத்தையும் நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக, "ராமா! இந்த துஷ்ட ஸ்த்ரீகளின் நடுவில் நான் இருக்கவே மாட்டேன். காட்டிலிருக்கும் மிருகங்களைப் போல் உன்னுடன் ஆனந்தமாகக் காலம் கழிப்பேன். என்னால் உனக்குக் கொஞ்சம் கூடக் கஷ்டம் நேராது. உன் தந்தையின் உத்தரவுப்படி காட்டிற்குப் போகவேண்டுமென்று உனக்கு இஷ்டமிருந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போ," என்றாள்.


பிறருக்கு ஏதாவது துக்கம் நேர்ந்தால் ராமனுடைய மனமும் துக்கத்தால் மிகவும் தவிக்கும். ஆனால் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதென்ற தர்மத்திற்கு எங்கே குறைவு வருமோ என்று பயந்து, கௌசல்யையின் துக்கத்தைப் பார்த்து தானும் துக்கப்படாமல், மனோதைரியத்தால் தன் துயரத்தை அடக்கிக் கொண்டார். அப்பொழுது தன் தாய் தான் வனத்திற்குப் போக சம்மதித்தவுடன் அவளுடைய துக்கத்தைச் சற்று ஆற்றுவதற்காகத் தன் துக்கத்தை வெளியிட்டு அழுது கொண்டு, "பெண்கள் பிழைத்திருக்கும் வரையில் கணவனே அவர்களுக்குதி தெய்வம். அவரே பிரபு. பூமண்டாலதியான அவர் நம்மை ரக்ஷிக்கும் பொழுது நாம் அனாதைகளல்ல. மேலும் சக்களத்திகள் தங்களுக்குக் கொஞ்சமாவது கெடுதி செய்ய நியாயமில்லை. எனக்குப் பதிலாக இந்த ராஜ்யத்தை ஆளப்போகிற பரதன் தர்மாத்மா. தர்மத்தை அனுஷ்டிப்பதிலேயே பிரியமுள்ளவன். எல்லோரிடத்திலும் பிரியமாகப் பேசுகிறவன். அப்படியிருக்க, தங்களிடத்தில் விசேஷ பக்தியுடன் பணிவு செய்வான். நான் காட்டிற்கு போன பிறகு மஹாராஜா என்னைவிட்டுப் பிரிந்த துக்கத்தால் கொஞ்சம்கூட வருத்தமடையாமல் இருக்கும்படி தாங்கள் வெகு ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரோ வயது முதிர்ந்தவர். இந்தக் கொடிய சோகத்தால் அவர் இறந்து போகாதபடி எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகத் தாங்கள் நடந்து கொள்ள வேண்டும். பெண்கன் விரதங்களையும் உபவாசங்களையும் அனுஷ்டித்து மஹா புண்ணியங்களை சம்பாதித்தாலும், கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால், பாவிகளின் கதியை அடைவார்கள். தேவ பூஜைகளைச் செய்யாவிட்டாலும், பெரியோர்களை நஸ்கரிக்காமல் போனாலும், விரதங்கலை அனுஷ்டிக்காமல் இருந்தாலும் கணவருக்கு பணிவிடையைச் செய்து வந்தால், அவர்களுக்கு உத்தம லோகங்கள் கிடைக்கும். தங்களுடைய கணவனுக்கு பணிவிடை செய்வதே பெண்களுக்கு மேலான தர்மமென்று சுருதிகளும், ஸ்மிருதிகளும் உபதேசிப்பதற்கு இதுவே காரணம். முன்னோர்களின் ஆசாரமும் இதுவே.


"புத்தியைச் செலுத்த வேறு விஷயமில்லாமல் தாங்கள் சும்மா இருந்தால் துக்கம் மேலிடும். ஆகையால் பிராம்மண சிரேஷ்டர்களை முன்னிட்டு நான் நலமாய்ப் போய் வருவதற்காகச் சாந்தி ஹோமம், புஷ்டி ஹோமம் இன்னும் மற்ற மங்கள காரியங்களைச் செய்யுங்கள். சந்தனம், தாம்பூலம், புஷ்பம் முதலியவைகளால் தேவதைகளையும் பிராம்மணர்களையும் ஆராதியுங்கள். ஸ்னானம்,ஜபம்,உபவாஸம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துக் கொண்டு சுத்தமான அன்னத்தைப் புசித்து, தங்களுடைய நாதனுக்குப் பணிவிடை செய்வதில் கவனத்தைச் செலுத்துங்கள். நான் திரும்னி வருங்காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். இப்படிச் செய்தால் தர்மாத்மாக்களில் சிரேஷ்டரான என் தந்தை பிழைத்திருப்பதையும், நான் இங்கே திரும்பி வருவதையும் பார்க்கும் பாக்கியத்தை அடைவீர்கள்", என்றார்.


புத்திரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற துக்கத்தால் கண்ணீர் பெருகக் கௌசல்யை, "காட்டிற்குப் போகவேண்டுமென்ற புத்தி உனக்கு உறுதியாக உண்டாயிருக்கிறது. என்னால் அதை மாற்ற முடியவில்லை. காலபலத்தை யாரால் ஜெயிக்க முடியும்? குழந்தாய், சாவதானமாகப் போய் வா. உனக்கு எப்பொழுதும் க்ஷேமமுண்டாகட்டும். ஜயமுண்டாகட்டும். நீ திரும்பி வந்தாலென்றி என் சோகம் தீராது. உன் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, உன் இஷ்டத்தையும் பூர்த்தி செய்து மஹா கீர்த்தியடைந்து நீ திரும்பி வந்த பிறகே நிகரற்ற சுகத்தை அனுபவிப்பேன். என் வார்த்தையையும் தள்ளிவிட்டுக் காட்டிற்குப் போகவேண்டுமென்று நீ ஒரே பிடிவாதமாக இருக்கும்படி உன்னைத் தூண்டிவிடும் விதியின் பலத்தை யாரால் அறிய முடியும்? மஹாபராக்கிரமசாலியே, க்ஷேமமாகப் போய் வா. சீக்கிரத்தில் திரும்பி வந்து மதுரமான வார்த்தைகளால் என் மனத்தை சந்தோஷப்படுத்து. ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய என் மனம் சஹிக்கவில்லையே? நீ காட்டிலிருந்து மான் தோல்,மரவுரி ஜடைகளுடன் திரும்பி வரும் காலம் இந்த கணமாகவே இருக்கக் கூடாதா?" என்று சொல்லித்துக்கித்தாள். பிறகு ராமன் காட்டிற்குப் போகத் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு, மிக்கப் பிரீதியுடன் அவருடைய க்ஷேமத்தை உத்தேசித்துச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.


ததா ஹி ராமம் வனனாஸ நிச்சிதம்
ஸமீக்ஷ்ய தேவீ பரமேண சேதஸா !
உவாச ராமம் ஸூப லக்ஷணம் வசோ
பபூவ ச ஸ்வஸ்த்யயநாபிகாங்க்ஷிணீ !!

ஸர்க்கம் 24  நிறைவு பெற்றது...

ஸ்ரீ ராம ராம ராம  

Wednesday, April 27, 2011

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது ஸர்க்கம் 23

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
ஸர்க்கம் 23
லட்சுமணன் ராமனைத் தடுத்தது
இதி ப்ருவதி ராமே து லக்ஷ்மணோ தஷிரா முஹூ: !
ச்ருத்வா மத்யம் ஜகாமேவ மநஸா துக்க ஹர்ஷயோ: !!


ராமன் இப்படிச் சொல்ல லட்சுமணன், தான் அதற்கு சம்மதிக்காததற்கு அடையாளாமாகத் தலையைக் கீழே குனிந்து கொண்டு "நமது தமையன் தர்மத்தை அனுஷ்டிப்பதில் உறுதியாய் இருக்கிறாரே" என்று சந்தோஷத்தையும், ராஜ்யத்தை விட்டுப் போகிறாரே என்று துக்கத்தையும் அடைந்தார். ஆனால், அந்த அபிப்பிராயத்தை வார்த்தையால் தெரிவிக்கவில்லை. அந்த எண்ணமும் அடுத்த கணத்தில் மாறிவிட்டது. அதிக கோபம் கொண்ட சிங்கம் புருவத்தை நெறிப்பது போல தன் புருவங்களை நெறித்துப் பெட்டியில் அகப்பட்ட சர்ப்பத்தைப் போல சீறிக் கொண்டு மனத்திலுள்ள கோபத்திற்கு அடையாளமாகத் தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு , யானையின் துதிக்கை போன்ற தன் கையை ஆட்டிக் கொண்டு, குறுக்குப் பார்வையாக ராமனைப் பார்த்து , "தந்தையின் வார்த்தையை நிறைவேற்றாவிட்டால் தர்மத்திற்குக் குறைவு நேரும். நான் தர்மத்தை அனுஷ்டிக்காவிட்டால் பிறரும் அதைக் கைவிடுவார்கள். தந்தையின் கட்டளையை நிறைவேற்றாதவன், நம்மை காப்பாற்றுவானோ என்று மக்கள், என்னிடத்தில் சந்தேகப்படுவார்கள் என்று நினைத்துக் காட்டிற்குப் போவதில் தாங்கள் இவ்வளவு பரபரப்புடன் இருப்பது சரியல்ல. வீரீயம் இல்லாதவர்களும் சித்தபிரமை உள்ளவர்களும் ஷத்திரியர்களில் கீழ்பட்டவர்களுமே உண்மையில் சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுபடுவார்கள். தாங்கள் சத்திரிய சிரேஷ்டர். விதியை விலக்கும் சக்தியை இயற்கையாகவே உடையவர். கலங்காத புத்தி உடையவர். இப்படியிருக்க விதியை ஒருவராலும் வெல்ல முடியாது என்று, அந்த கையாலாகாத பதார்த்தத்தை மெச்சுவது நியாயமல்ல. மனோபலமில்லாதவர்களுக்கு விதி என்பது பிழைப்புக்கு வழியென்று பிருஹஸ்பதி சொல்லிருக்கிறார். ஆகையால், கையாலாகாதர்களே விதியை அனுசரிக்க வேண்டும். புருஷப்பிரயத்தனத்தை விதி வெல்லாது. அதை கொண்டாடலாமா?

"தந்தையின் வார்த்தயை நிறைவேற்றாமலிருந்தால் அதர்மம் நேருமென்று பயப்படுகிறீர்கள். தங்களுக்கு துரோகம் நினைத்த அந்தப் பாவிகளான கைகேயி, தசரதர் இவர்களிடத்தில் தங்களுக்கு ஏன் சந்தேகம் உண்டாகவில்லை?. அவர்கள் தர்மத்தை அனுஷ்டிக்கவில்லையா என்றால், தர்ம அனுஷ்டானமென்ற வேஷத்தால் தங்களுடைய துர்குணங்களையும், கெட்ட நடத்தைகளையும் மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமுள்ள எவ்வளவோ மக்கள் இவ்வுலகத்தில் உள்ளார்கள். தாங்கள் தர்மாத்மாவானதால் அவர்களித்தில் தங்களுக்கு சந்தேகம் உண்டாகவில்லை. அவர்களைத் தங்களைப் போல் நினைக்கிறீர்கள். தங்களுடய அபிஷேகத்தைத் தடுக்க அவர்கள் நன்றாக யோசித்து, அவர்கள் இப்படி நடக்கிறார்களென்று தங்களூக்கு ஏன் தெரியவில்லை?. வெகு காலத்திற்கு முன்பாகவே அவர்களிப்படிக் கலந்து யோசனை செய்யாவிட்டால் எப்பொழுதோ கொடுத்த வரங்களைக் கைகேயி இதுவரையில் மறந்து கேட்காமலிருப்பாளா? ராமன் எனக்கு மூத்த புதல்வன். இந்த ராஜ்யம் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வெண்டியது. ஆனால், எனக்கு, உன் புதல்வனனான பரதனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். அவன் ராமனுக்கு இளையவன். ஆகையால் அப்படிச் செய்ய மக்கள் சம்மதிக்கமாட்டார்கள். ஆகையால், அதற்கு ஒரு உபாயம் செய்வோம். ராமனுக்கு அபிஷேகம் செய்வதாக எல்லா மக்களுக்கும் மத்தியில் நான் அறிவிக்கை செய்கிறேன். பிறகு நீ முன் காலத்தில் கொடுத்த வரங்களைப் பூர்த்தி செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்து. நான் அதற்கு இஷ்டமில்லாதவன் போலும், நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக்கொள்வதாகக் காட்டிக் கொண்டு சம்மதிக்கிறேன். அப்பொழுது ராமனைப் பல வருஷங்கள் வரையில் காட்டிற்கு அனுப்பி, நமது குழந்தை பரதனுக்கு அபிஷேகம் செய்வோம்," என்று நமது தந்தை கைகேயியுடன் கலந்து துரோகமாகச் செய்த யோசனை என்று தங்களுக்கு ஏன் இன்னும் தோன்றவில்லை?. மூத்த புதல்வனிருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்வது இவ்வுலகத்தில் எவனுக்காவது இஷ்டமாகுமா? அதிலும் நான் சம்மதிப்பேனா? பொறுத்துக் கொண்டிருக்கமாட்டேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

"தாங்கள் மஹா புத்திமானல்லவா? தர்ம அனுஷ்டானமென்ற ஒரு காரணத்தால், அபிஷேகம் செய்து கொள்ள மாட்டேன். வனத்திற்கே போவேன். அப்படிச் செய்யாவிட்டால் மஹாபாவம் நேரும்" என்று பிசகான அபிப்பிராயம் கொண்டிருக்கிரீர்கள்.அந்தத் தர்மம் எனக்கு விரோதி. கைகேயியின் வார்த்தைக்குக் கட்டுபட்டு தர்ம விரோதமாயும் அனைத்து மக்களும் நிந்திக்கும் வார்த்தைகளை, நமது தந்தை சொல்லவும், ஒருவராலும் தடுக்கக் கூடாத சக்தியையுடைய தாங்கள் அவைகளை நிறைவேற்றுவதாக நிச்சயிப்பதும் எப்பொழுதாவது நேருமா?ஆகையால் தங்களுக்குச் புத்தி கலங்கியிருக்கிறதென்றி வேறல்ல. அவர்கள் கபடமாகத் தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்துவதற்காகச் செய்த ஏற்பாட்டை, உண்மை என்றெண்ணி மோசம் போகிறீர்கள் என்பதை நினைக்க நினைக்க எனக்குத் துக்கம் மேலிடுகிறது. தர்மத்தை இப்படி அனுஷ்டிப்பதில் இவ்வுலகத்தில் ஒருவருக்கும் சம்மதம் இருக்காது. அவர்கள் பெயருக்கு மட்டுமே நமக்கு தாய் தந்தையர்களே ஒழிய வேறல்ல. சத்ருக்கள் என்பதே உண்மை. நமக்கு கெடுதியைத் தேடுகிறவர்கள் காமத்திற்கு அடிமைகள். ஆகையால் அவர்களுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று எவனாவது நினைப்பானா?

"அவர்களுடய இப்படிப்பட்ட புத்தி தோன்றியது விதியால் நேர்ந்தது. கைகேயியின் குற்றமல்லவே" என்று சொன்னால் அந்த சமாதானத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? எனக்கும் சரியாகத் தோன்றவில்லை. பயந்தவர்களும் வீரியமில்லாதவர்களுமே தெய்வத்தைப் பின் பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதியுள்ளவர்களும் அதை லட்சியம் செய்யமாட்டார்கள். தன் பலத்தால் விதியை வெல்லக் கூடியவனிடத்தில் அதன் ஆட்டம் கொஞ்சமேனும் பலிக்காது. அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தையும் அது கெடுக்காது. விதியைக் காட்டிலும் புருஷப் பிரயத்தனம் பலமுள்ளதென்பதைக் காட்ட இன்று பிரத்யக்ஷமாக ஓர் உதாரணத்தைப் பாருங்கள். விதியின் பலமும் புருஷப்பிரயத்தனத்தின் பலமும் இன்று நன்றாக விளங்கும். அவைகளுக்குள்ள பேதத்தையும் தாரதம்யத்தையும் எல்லோரும் தெளிவாக அறிவார்கள். விதியே தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்ததென்று தாங்களும் இன்னும் பலரும் மக்களும் எண்ணி கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தெய்வம் என் பலத்தால் இன்று ஜயிக்கப்பட்டு என்ன பாடுபடுமென்பதை எல்லோரும் பார்ப்பீர்கள். மதம் பிடித்துச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு மாவெட்டியால் குத்துவதையும் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி ஓடும் யானையைப் போல், தடையில்லாமல் செல்லும் தெய்வத்தை, என் புத்தி என்ற பாசத்தால் அடக்கித் திருப்பிக்கொண்டு வருகிறேன். லோகபாலர்கள் ஒன்று சேர்ந்தாலும், இந்த மூன்று லோகங்களில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தாலும், தங்களுடைய அபிஷேகத்தைத் தடுக்க முடியாது. அப்படியிருக்க, தமது தந்தை தடுக்கப் போகின்றாரோ? தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்து, தங்களைக் காட்டிற்கு அனுப்பவேண்டுமென்று ரகசியமாக யோசனை செய்தவர்களையே இந்த ராஜ்யத்திலிருந்து துரத்தி அந்தக் காட்டில் பதி நான்கு வருஷங்கள் வசிக்கும்படி செய்கிறேன். தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்த வேண்டுமென்றும் அவர்களுடைய புத்திரனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கொண்டிருக்கும் ஆசையை இன்று வேரறுக்கிறேன். தெய்வத்துடன் விரோதிதுக் கொண்டு ஒருவன் தப்பினாலும் தப்பலாம். என்னை விரோதித்துக் கொண்டு உயிரோடு இருக்கமுடியுமா?

"தாங்கள் வனத்திற்கா போகவேண்டும்? போவது நிச்சயமே. ஆனால் இப்பொழுது அல்ல. இந்தக் காரணத்திற்காக அல்ல. நமது முன்னோர்களான ராஜரிஷிகள் வெகுகாலம் வரையில் ராஜ்யத்தை ஆண்டு, வயது சென்ற பிறகு வானப்பிரஸ்தாசிரமத்தைக் கைகொண்டு ராஜ்யத்தைப் புத்திரர்களிடத்தில் ஒப்புவித்து, "நமது குடிகளை உன் குழந்தையைப் போல் பரிபாலிக்க வேண்டும்", என்று கட்டளையிட்டு, வனத்திற்குப் போய்த் தவம் செய்வது வழக்கம். அப்படியே தாங்களும் அனேகமாயிரம் வருஷங்கள் வரையில் ராஜ்ய பரிபாலனம் செய்து விட்டுப் பிறகு வனத்திற்குப் போவீர்கள். அப்பொழுது தங்களூடைய புத்திரர்கள் ராஜ்யத்தை ஆள்வார்கள்."

நமது தந்தை நிலையான சிந்தனை உடையவர் அல்ல. ராஜ்யம் அடிக்கடி மாறுமென்று தங்களுக்கு சந்தேகமுண்டாகி, தங்களுக்கு ராஜ்யம் வேண்டாமென்றால், கடலை அதன் கரை காப்பது போல நான் இந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவேன். இப்படியே பிரதிக்ஞை செய்வேன். தவறினால் வீரர்கள் அடையவேண்டிய சொர்க்கம் கிடைக்காமல் போகட்டும்.

ஆகையால், இப்பொழுது தயாராயிருக்கும் பதார்த்தங்களால் அபிஷேகம் செய்து கொள்ளும் விஷயத்தில் தங்கள் மனத்தைச் செலுத்த வேண்டும். அதைத் தடுக்கும் அரசர்களை நெருங்க விடாமல் துரத்த நான் ஒருவனே போதும். இந்தக் கைகள் வெறும் அழகுக்கோ? என் வில்லும் இடுப்பில் கட்டியிருக்கும் கத்தியும் என் அம்பறையில் நிறைந்திருக்கும் பாணங்களும் வெற்ம் அலங்காரத்திற்கோ? விளையாடவோ அல்லது பெருமைக்கோ? இந்த நான்கும் நமது சத்ருக்களை வேரறுக்க போதுமானவையல்லவா? எனக்குச் சத்ருவென்று ஒருவன் ஏற்பட்டால் அவன் உயிரோடுருக்கப் பொறுக்கமாட்டேன். அவன் வஜ்ராயுதத்தைத் தரித்த இந்திரனாயிருந்தாலும் சரி, மின்னலைப் போல் பிரகாசிக்கும் என் கத்தியால் அவனுடைய பிராணனை வாங்கி விடுவேன். பாருங்கள், இன்றைக்கு என் கையால் வெட்டப்பட்ட யானைகள், குதிரைகள், மனிதர்களுடைய கைகால்கள், தலைகள் பூமியில் விழுந்து, அடர்ந்த காட்டைப் போல் சஞ்ச்சரிக்க முடியாமல் செய்து விடும். என் கத்தியால் வெட்டித் தள்ளப்பட்ட யானைகள்,கொஃஸுந்து விட்டெரியும் மலைகளைப் போலவும், மின்னல்களுடன் கூடிய மேகங்களைப் போலவும், பூமியில் விழும். நான் கையில் வில்லை எடுத்து யுத்தம் செய்ய நின்றால் இந்த உலகத்திலுள்ள புருஷர்களுக்குள் எவனாவது தன்னைச் சூரனென்றும் ஆண்பிள்ளை என்றும் சொல்லிக் கொள்ள துணிவானா? எல்லோரும் பெண்களைப் போல் ஓடி ஒளிந்து கொள்வார்களல்லவா? ஒரே சமயத்தில் ஒரே பாணத்தால் அல்ப வீரியமுள்ள பல சத்ருக்களை அடிப்பேன். இப்படி யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் மர்ம ஸ்தானங்களில் பாணங்களால் துளைப்பேன். "நீ ஒருவனாய்ப் பலரை எப்படி ஜெய்ப்பாய்?", என்றுத் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நான் உபதேசம் பெற்ற அஸ்த்திரங்களின் மஹிமை இன்று வெளிப்படும். நமது தந்தையின் அதிகாரத்தைப் பிடிங்கித் தங்களுக்கு கொடுக்கப் போகிறேன். என் இரண்டு கைகளும் சந்தனம் பூசிக் கொள்ளவும், ஆபரணங்களைத் தரிக்கவும், தானங்களைக் கொடுக்கவும், மித்திரர்களைக் காப்பாற்றவும் இதுவரையில் உபயோகப்பட்டன. அவை இன்றைக்குத் தங்களுடைய அபிஷேகத்திற்குத் தடை செய்கிறவர்களை அழிப்பதில் உபயோகப்படும். ஆகையால், தங்களுடைய விரோதியான எவனுடைய உயிரையும்,கீர்த்தியையும்,மித்திரர்களியயும் நாசம் செய்ய வேண்டும்?. நான் தங்களுடைய ஊழியன். தங்களுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பூமண்டலம் தங்களுடைய ஆளுகைக்குள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?." என்றார்.

ரகுகுலத் திலகன்,"குழந்தாய், நமது பெற்றோர்கள் பிழைத்திருக்கும் வரையில் அவர்களுடைய கட்ட்ளைப்படி நடக்க வேண்டும். அவர்கள் இறந்த பிறகு ஒவ்வொரு வருஷத்திலும் அதே திதியில் பல பேர்களுக்கு அன்னம் இடவேண்டும். கயாஷேத்திரத்தில் அவர்களை உத்தேசித்துப் பிண்டம் போட வேண்டும். இம்மூன்று காரியங்களைச் செய்வதால் ஒருவனுக்குப் புத்திரனென்று பெயர் கிடைக்கிறது. ஸ்மிருதிகள் இதையே உபதேசிக்கின்றன. ஆகையால், நமது தந்தையின் வார்த்தையை மீறமாட்டேன். எப்படியானாலும் அதை நிறைவேற்றப் போகிறேன். உலகத்தில் சாதுக்கள் அனுஷ்டிக்கும் மார்க்கம் இதுவே", என்று தான் முன்பு விஸ்தாரமாக உபதேசித்த தர்மத்தை இப்பொழுது சுருக்கமாகச் சொல்லி, லட்சுமணனுடைய கண்ணீரைத் துடைத்து, அடிக்கடி சமாதானம் செய்தார்.

விம்ருஜ்ய பாஷ்பம் பரி ஸாந்த்வ்ய சாஸக்ருத்
ஸ லக்ஷ்மணம் ராகவ வம்ஷவர்தன:!
உவாச பித்ர்யே வசனே வ்யவஸ்திதம்
நிபோத மாமேவ ஹி சௌம்ய ஸத்பதே !!

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது சர்க்கம் 23  நிறைவு பெற்றது.

ஸ்ரீ ராம ராம ராம

Tuesday, April 26, 2011

22:எடுத்த தர்ம காரியம் நிறைவேற (ஸ்ரீமத் ராமாயணம் ஸர்க்கம் 22)

ஸர்க்கம் 22
ராமன் லட்சுமணனை சமாதானம் செய்தது

அத தம் வ்யதயா தீநம் ஸவிஷேச மமர்ஷிதம் !
ச்வசந்தமிவ நாகேந்த்ரம் க்ரோத விஸ்பாரிதேக்ஷணம் !!


ராமனுடைய மனம் அவருக்கு வசப்பட்டது. சகல பிராணிகளிடத்திலும் அவர் செலுத்தும் சக்தி அந்த சமயத்தில் அவருடைய வார்த்தைகளால் வெளிப்பட்டது. லட்சுமணன் ராமனுக்கு அந்தரங்கமானவர்களில் மேலானவர். அதிகப் பொறுமையில்லாதவர். கோபத்தால் அவருடைய கண்கள் பரந்து இருந்தன. அப்படியிருந்தும் தனக்கு மித்திரனும் தம்பியும் பிரியமானவனுமான காரணத்தால் ராமன் எல்லாவற்றையும் மறந்து அவருக்கெதிரில் நின்று கொண்டு, லட்சுமணா!, நீ சுபாவத்தில் அதிக தைரியசாலி அல்லவா? அரசனிடத்திலுள்ள கோபத்தையும் என்னைப் பற்றின வருத்தத்தையும் உனக்குள் அடக்கு. அபிஷேகத்திற்காக எல்லாம் தயாராயிற்றே, இப்பொழுது அது நடக்காவிட்டால் நமக்கு அவமானமல்லவா என்றால் அது நமது பலவீனத்தால் ஏற்படவில்லையே. மேலும், நமது தந்தை செய்த பிரதிக் ஞையை நிறைவேற்றி அவர் உத்தம கதியை அடையும்படி செய்கிறோம் என்று மிகவும் சந்தோஷப்பட வேண்டும். ஆகையால் என் அபிஷேகத்திற்காகச் செய்யப் பட்ட ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு , நமது தந்தையின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய். எனக்கு அபிஷேகம் நடக்கவில்லையே என்று என் தாய்க்கு மிகுந்த வருத்தம். நான் திரும்பி வருவேனா, வரமட்டேனா என்ற பெரிய சந்தேகம். ராமன் தந்தையின் கட்டளையை வெகு சுலபமாக நிறைவேற்றி அதி சீக்கிரத்தில் வனத்திலிருந்து திரும்பி வருவான். இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாமென்று நீ அவளுக்குச் சொல்லி அவள் வருத்தப்படாமல் செய்ய வேண்டும். இந்த சந்தேகத்தால் அவள் துக்கப் படுவதை ஒரு கணம்கூட நான் பார்க்கப் பொறுக்கமாட்டேன்.

நான் இதுவரையில் தெரிந்தாவது தெரியாமலாவது என் தாய்களுக்கும் தந்தைக்கும் எந்த விஷயத்திலும் பிரியமில்லாமல் நடந்தது இல்லை. நமது தந்தை எப்பொழுதும் உண்மையை பேசுகிறவர். கொடுத்த வாக்கினை தவறாதவர். வீணாகாத பராக்கிரமம் உடையவர். இப்பொழுது தமக்கு உத்தம கதி கிடைக்காதோ என்ற பயம் அவருக்கில்லாமல் நாம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் தடுக்கப்படாமலிருந்தால் தான் கொடுத்த வரங்கள் வீணாகுமே என்று அவருடைய மனம் தவிக்கும். அதைப் பார்த்து நானும் தவிப்பேன். ஆகையால், என் அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நிறுத்தி இப்பொழுதே காட்டுக்குப் போகிறேன்.

கேகய ராஜருடைய புத்திரி தன் எண்ணம் நிறைவேறித் தன் புதல்வனான பரதனை யாதொரு கவலையுமில்லாமல் அபிஷேகம் செய்யட்டும். நான் மான் தோல், மரவுரி, ஜடை முதலியவைகளைத் தரித்துக் கொண்டு வனத்திற்குப் போனால் கைகேயியின் மனம் சந்தோஷப்படும். ராஜ்யத்தை விட்டு வனத்திற்குச் செல்லவேண்டும் என்கிற புத்தி எனக்கு உறுதியாக ஏற்பட்டிருக்கிறது. அதை மாற்ற முடியாது. ஆகையால் நீ என்னை வருத்தப்படுத்துவது சரியல்ல. நான் வனத்திற்குப் போகிறேன். தாமதம் செய்யாதே.

நான் இப்படி செய்வதற்கு தர்மமே முக்கிய காரணமென்று இதுவரையில் சொன்னேன். ஆனால் அதைவிட மேலான காரணம் ஒன்றுண்டு.நான் காட்டிற்குப் போவதற்கும் பெற்ற ராஜ்யத்தை இழப்பதற்கும் காரணம் ஈஸ்வரனே. கைகேயி அல்ல. வீணாக அவளைத்தூற்றுவதில் லாபமென்ன? கைகேயிக்கு இவ்விதமான எண்ணம் உண்டானதற்குக் காரணமும் ஈஸ்வரனே. இல்லாவிட்டால் நீ எண்ணுகிறபடி அவளுக்கு என்னை நோகடிக்க வேண்டுமென்ற புத்தி ஏன் உண்டாக வேண்டும்? எனக்கு என் தாய்களிடத்தில் எந்த பேத பாகுபாடும் இல்லை என்று உனக்குத் தெரியாதா? அதே போன்றுதான் கைகேயிக்கு என்னிடத்திலும் பரதனிடத்திலும் பேத பாகுபாடு பார்க்கும் புத்தியில்லை என்று உனக்கே தெரியுமே? அப்படியிருக்க என் அபிஷேகத்தை நிறுத்த வேண்டும் என்றும், என்னை காட்டிற்கு அனுப்ப வெண்டுமென்றும் வெகு குரூரமான கொடிய வார்த்தைகளை அவள் சொல்வதை யோசித்தால் ஈசுவரனால் அவளுடைய புத்தி மாற்றப்பட்டிருக்கிறதென்ற காரணத்தைத் தவிர வேறு எனக்குத் தோன்றவில்லை. அவளோ, நல்ல சுபாவமுள்ளவள். உத்தமமான ராஜகுலத்தில் பிறந்தவள். அதற்குத் தகுந்த தயை, பெருந்தன்மை முதலிய சிரேஷ்டமான குணங்களை உடையவள். அப்படிப்பட்ட கைகேயி கெட்ட சுபாவத்தைக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்து, நற்குணங்கள் ஏதுமில்லாத அற்ப பெண்போல் ஏன் நடக்க வேண்டும்?. வேறு யாரிடத்திலாவது சொன்னாலும் பாதகமில்லை. தன் கண்வனிடத்திலேயே ஏன் சொல்ல வேண்டும்?, தோழிகளிடத்தில் சொல்லி அனுப்பினால் பாதகமில்லை. தானே ஏன் நேரில் சொல்லவேண்டும்?. அந்த கணம் வரையில் தானும் மஹாராஜாவும் எல்லையற்ற பிரீதி வைத்திருந்த எனக்கு மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கும் வார்த்தைகளைச் சொல்லுவாளா?. ஜாடையாகச் சொல்லவும் இல்லை. நேரிடையாகப் பல தடவை சொல்லியிருக்கிறாள். இந்த விஷயங்களை யோசித்தால் இவ்வளவும் ஈசுவரனுடைய செயல் என்றே நிச்சயமாகிறது. எண்ண முடியாத சக்தியுள்ள ஈசுவரனுடைய சங்கல்பத்தை எந்தப் பிராணியும் தடுக்க முடியாதென்பதில் சந்தேகமில்லை. என் கையில் கிடைத்த ராஜ்யம் தவறிப் போனதும், என்னிடத்தில் அவளுக்கு இதுவரையிலிருந்த பிரியம் முற்றிலும் மாறினதும் இந்தக் காரணத்தாலேயே.

ஆனால், தெய்வச் செயலை மனித முயற்சியால் வெல்லமுடியாதோ என்றால், அது கொடுக்கும் பயன் களால் அதன் சொரூபத்தை அறியவேண்டுமே தவிர, அதை நேரில் பார்த்தவர்கள் உண்டா?. எவனாவது தெய்வத்தை எதிர்க்க முடியுமா? சுகம்,துக்கம்,சாந்தி,கோபம்,லாபம்,நஷ்டம்,உற்பத்தி,நாசம் முதலிய காரணம் தெரியாத யாவற்றிற்கும் தெய்வமே காரணம். கடுமையான தவம் செய்து கொண்டிருந்த விசுவாமித்திரர் முதலிய ரிஷிகளும் தெய்வத்தால் பீடிக்கப்பட்டுக் காமகுரோதங்களை அடக்க முடியாமல் சமாதி குலைந்து தங்களுடைய மேன்மையான பதவியிலிருந்து நழுவியிருக்கிறார்கள். நாம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது அதைத் தடுத்து நாம் எண்ணாத வேறோரு காரியத்தை நடத்தி வைப்பது தெய்வச் செயலே. இந்த நிச்சயத்தை உடையனாய் எனக்கு எது நேர்ந்தாலும் மனம் கலங்காமலிருப்பதால் இப்பொழுது இந்த அபிஷேகம் தடைப்பட்டாலும் அதனால் எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் உண்டாகவில்லை.

நீயும் வருத்தப்படாமல் என்னைப்போல நடந்து கொண்டு என் அபிஷேகக் காரியங்களை நிறுத்து. அதற்காகக் கொண்டு வந்திருக்கும் குடங்களிலுள்ள நீரால் நான் தபஸ்வீயாவதற்கு முந்திச் செய்ய வேண்டிய விரத ஸ் நானம் நடக்கட்டும். வேண்டாம்,ஒருவேளை நான் இந்த ராஜ்யத்திற்காக ஆசைப்பட்டுக் கபடமாக அபிஷேகம் ஏய்து கொண்டேன் என்று கைகேயிக்குத் தோன்றினாலும் தோன்றலாம். ஆகையால் அபிஷேகத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ராஜத்திரவியம் எனக்கு அவசியமில்லை. நானே நதியிலிருந்து நீர் கொண்டு வந்து ஸ் நானம் செய்கிறேன்.

லட்சுமணா,நமக்கு ராஜ்யம் கிடைக்கவில்லையே, ஐஸ்வர்யத்தை   இழந்தோமே என்று கொஞ்சம்கூட வருத்தப்படாதே. ராஜ்யத்தை ஆளுவதும் காட்டிலிருப்பதும் எனக்கு ஒன்றே. அப்படியுமல்ல, யோசித்துப் பார்த்தால் ராஜ்ய பரிபாலனத்தால் உண்டாகும் கவலையும் கஷ்டமும் பாபமும் வனவாசத்தில் இல்லை. இதுவரையில் பார்க்காத பொருள்களைப் பார்க்கலாம். ஆகையால் அரசாட்சியைக் காட்டிலும் வனவாசமே மேலானது.

லட்சுமணா, ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். தெய்வத்தின் சக்தி எல்லையற்றதென்று உனக்குத் தெரியுமே. அந்த தெய்வத்தால் ஏவப்பட்டிருப்பதால் கைகேயி நமக்கு இதமில்லாத வார்த்தைகளைச் சொல்லுகிறாள். அப்படியிருக்க என் அபிஷேகத்தை அவள் தடுத்தாளென்று நாம் சந்தேகப்படுவது நியாயமில்லை, என்றார்.

ந லக்ஷ்மணாஸ்மிந் கலு கர்மவிக்நே
மாதா யவீயஸ் யதிசங்கிதவ்யா !
தைவாபிபந்நா ஹி வதத்யநிஷ்டம்
ஜாநாஸி தைவம் ச ததாப்ரபாவம் !!

ஸர்க்கம் 22 நிறைவு.

1.எடுத்த தரும காரியம் நிறைவேற.. ஸ்ரீமத் ராமாயணம் ஸர்க்கம் 21


ஸ்ரீ ராமச்ந்த்ராய நம:
1.எடுத்த தரும காரியம் நிறைவேற
( for the fulfilment of Virtuous Act)
=================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
ஸர்க்கங்கள் 21 முதல் 25 முடிய
=================================================================
உமா ஸம்ஹிதா:
தர்ம காமஸ்து கௌஸல்யா ராம ஸம்வாத மாதராத் I
மங்களாந்தம் ப்டேத் ப்ராத: மத்யாஹ்னே வாஸ்மரந்த் ப்ரபும் II

தாம் தொடங்கிய தரும காரியங்களுக்கு ஏதாவது விக்னம் ஏற்பட்டு, அவை நிறைவேறாமல் போனால், "கௌஸல்யா ராம ஸம்வாதம்" என்ற அயோத்யா காண்டம் 21,22,23,24,25 ஆகிய ஐந்து ஸர்க்கங்களையும் காலையிலோ மாலையிலோ பாராயணம் செய்ய வேண்டும்.


நிவேதனம்: ஐந்து வாழைப் பழங்கள்.


ஸங்கல்பம்:
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ:ப்ரஸாதேன
ப்ராரீப்ஸித தர்மகார்ய ஸமாப்த்யர்த்தம்
கௌஸல்யா ராம ஸம்வாதா த்மக
ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே I

==========================================================


ஸர்க்கம் 21

ஸ்ரீ ராமன் கௌஸல்யையை சமாதானம் செய்தது.

ததாது விலபந்தீம் தாம் கௌஸல்யாம் ராமமாதரம் I
உவாச லக்ஷ்மணோ தீன: தக்கால ஸத்ருச்சம் வச: II (1)

அப்படிப் பிரலாபிக்கும் கௌஸல்யையைப் பார்த்து லக்ஷ்மணன் மிகுந்த வருத்தத்துடன் அந்தச் சமயத்திற்குத் தகுந்தபடி பின் வருமாரு பேசினார்:
'அம்மா! ஒரு ஸ்த்ரீயின் வார்த்தைக்குக் கட்டுபட்டு, தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ராஜ்யத்தை விட்டு ராமன் காட்டிற்குப் போவது உசிதமென்று எனக்கும் தோன்ற வில்லை. கைகேயியின் உத்தரவால் நான் போகவில்லை. அரசனுடைய கட்டளையால் அல்லவா நான் போகிறேன்' என்றால், அவரோ மிகவும் வயது சென்றவர். இந்த்திரிய சுகங்களில் ஆசையை ஒழிக்க முடியாதவர். ஆனால்,பரிசுத்தமனவனை இந்த்திரியங்கள் என்ன செய்ய முடியும்? என்றால், இப்பொழுது அவர் ஒரு ஸ்த்ரீயிடத்தில் எல்லையற்ற ஆசை கொண்டிருக்கிறார். ஆகையால் அவருடைய புத்தி விபரீதமாக இருக்கிறது. இது அ நியாயம் என்று அவருக்குத் தெரியவில்லை. தான் மிகவும் பிரீதி வைத்த ஸ்த்ரீயை சந்தோஷப் படுத்துவதற்காக எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்று இருக்கும் ஒரு மஹாராஜா என்னதான் சொல்ல மாட்டார்? என்னதான் செய்யமாட்டார்?

"ராமனிடத்தில் எந்தக் குற்றத்தையாவது தோஷத்தையாவது கண்டு வனத்திற்கு அனுப்பியிருக்கக் கூடாதோ என்றால் ராஜ துரோகம் முதலிய கொடிய குற்றங்களை ராமன் செய்தாரா அல்லது கோரமான பாபங்களைச் செய்தார் என்றாவது சொல்ல முடியுமா? அவருக்குப் பரம சத்ருவானாலும் அல்லது ஏதாவது குற்றம் செய்து அதற்காக அவரால் தண்டிக்கப் பட்டுருந்தாலும் அவர் இல்லாத இடத்திலும் அவரைப் பற்றி தோஷத்தைக் கற்பிக்கக் கூடிய மனிதனை இந்த லோகத்தில் காணேன் அப்படியிருக்க அவருக்கெதிரில் எவனாவது சொல்லத் துணிவானோ?

இது நான் யூகமாகச் சொல்லும் விஷயமல்ல. எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. ராமனோ தேவதைகளைப் போல் பரமசுத்தர். அவருடைய மனமும் வார்த்தையும் நடத்தையும் நியாயமான வழியிலேயே எப்பொழுதும் நடக்கும்.குடிகளின் இஷ்டத்தை அனுசரிக்கிறவர். பெரியோரால் பழக்கப் பட்டவர். இந்த்திரியங்களை அடக்கினவர். கைகேயி முதலிய சத்ருக்களுக்கும் பிரியமானவர். தர்மஸ்வரூபி. மேற்சொன்ன குணங்கள் இல்லாவிட்டாலும் சகல தோஷங்கள் இருந்தாலும் மூத்த மகன் என்கிற நியாயத்தால் ராஜ்யத்தில் இருந்து விலக்கத்தகாதவர். இப்படி இருக்க தர்மத்தை அனுஷ்டிக்கும் எந்த மனிதனாவது எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவரை ராஜ்யத்தில் இருந்து துரத்துவானா?.

அது போகட்டும். அரசனுக்குப் பால்யம் திரும்பி இருக்கிறது. காமத்திற்கு வசப்பட்டிருக்கிறார். அப்படிப் பட்டவருடைய வார்த்தையை ராஜ நீதியறிந்த எந்தப் புதல்வானாவது கவனிப்பானா? ஆகையால் அண்ணா! இந்த விஷயம் பிறர்க்குத் தெரிவதற்குள் அந்த ராஜ்யத்தை எடுத்துக் கொள்ளும். நான் கையில் வில்லை எடுத்துப் பக்கத்தில் நின்று கொண்டு தங்களைக் காபாற்றும் பொழுது எவனாவது நம்மை மீற முடியுமா? கொல்ல வந்த எமனை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம், நம்மை நெருங்கவும் முடியுமோ? இந்த நகரத்திலுள்ள ஜனங்கள் அனைவரும்  சேர்ந்து நம்மை எதிர்த்தாலும், என் கூர்மையான பாணங்களால் இதை மனுஷ்ய சஞ்சாரமில்லாமல் செய்ய மாட்டேனா? பரதனுக்கு நண்பர்களையும் உதவி செய்கிறவர்களையும் , அவர்கள் யாராயிருந்தாலும் ஒரு நொடியில் நாசம் செய்கிறேன். கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியல்லவா? ஏழையைக் கண்டால் மோழையும் பாயாதோ ?

நமது பிதா கைகேயினால் தூண்டப்பட்டு, நமது சத்ருக்களுக்கு உதவி செய்தால், அந்தத் துர்புத்தி பிடித்தவரை ஏன் சிறையில் வைக்கக்கூடாது?. ஏன் கொல்லக்கூடாது?. எல்லையற்ற கர்வத்தையடைந்து, இதைச் செய்யலாம், இதைச் செய்யகூடாது என்ற விவேகமின்றிக் கெட்ட வழியில் நடப்பவரை, நமக்குக் குருவானாலும் பிதாவானாலும், சிக்ஷித்து அந்த வழியிலிருந்து விலக்கவேண்டுமென்று மனு முதலிய தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

உமக்குத் தர்மாய்க் கிடைக்கவேண்டிய இந்த ராஜ்யத்தை கைகேயிக்குக் கொடுக்கத் துணிந்ததற்கு என்ன காரணம்?. தன் ஸைன்யங்களால் உம்மை ஜெயித்து துரத்தி விடலாமென்றோ?. அல்லது முன்பு கைகேயிக்கு கொடுத்த வரங்களைப் பூர்த்தி செய்வதென்ற காரணத்தாலோ?. அவ்விரண்டும் இங்கே செல்லாது. உம்மையும் என்னையும் விரோதித்துக் கொண்டு பரதனுக்கு இந்த ராஜ்யத்தைக் கொடுக்க இவரால் முடியுமா?.

அம்மா! ராமன் என் சகோதரர், என்னால் பூஜிக்கத் தகுந்தவர். அவரிடத்தில் உண்மையான பிரீதியை வைத்திருக்கிறேன். நான் பேசும் சத்தியத்தையும் கையில் பிடித்திருக்கும் வில்லையும் கொடுத்திருக்கும் தானங்களையும் செய்திருக்கும் தேவபூஜைகளையும் சாட்சி வைத்து ஆணையிட்டு சொல்லுகிறேன். பயங்கரமான காட்டிற்கு ராமன் போனாலும் சரி. ஜொலிக்கும் நெருப்பில் குதித்தாலும் சரி. அவருக்கு முன், என்னை அங்கே பார்க்கலாம். தாயே, தாங்கள் படும் கஷ்டத்தை என் வீரியத்தால் அழிக்கிறேன். என் பராக்கிரமத்தைத் தாங்களும் அண்ணனும் இன்றல்லவா பார்க்கப் போகிறீர்கள்.

அதைக் கேட்டு கௌசல்யை சோகத்தால் மனம் கலங்கி அழுது கொண்டு, "குழந்தாய்! தம்பி லக்ஷ்மணன் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தனவா? இதற்குமேல் என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அப்படிச் செய். பிதாவின் கட்டளையை எவ்வாறு மீறி  நடப்பேன் என்று சொல்லலாம்.ஆனால், இது அவர் செய்த கட்டளை அல்ல. எனக்கு விரோதியான கைகேயி ஏய்த கட்டளை. மேலும் தர்ம விரோதமானது. அப்படியிருக்க அதைக் கேட்டு, துக்கத்தால் தவிக்கும் என்னை அனாதையாய் விட்டு நீ காட்டிற்குப் போவது நியாயமா?.

நீ சகல தர்மங்களையும் அறிந்தவன். உன் பிதாவின் கட்டளையை நிறைவேற்றுகிறதென்ற தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புகிறாய். ஆனால் அதைக் காட்டிலும் மேலான தர்மம் ஒன்றுண்டு. கேள். லோகத்திலுள்ள மற்ற யாவாவற்றையும் காட்டிலும் தாயே ஒருவனுக்கு மேலான வஸ்து என்று தர்ம சாஸ்திரங்கள் உபதேசிக்கின்றன. ஆகையால் நீ இங்கிருந்தே எனக்குப் பணிவிடை செய். இதை விட சிரேஷ்டமான தர்மமில்லை. முன் காலத்தில் காசியபர் இந்திரியங்களை அடக்கி, தன் வீட்டிலிருந்தே தன் மாதாவுக்கு ஒப்பற்ற சிச்ரூஷை செய்து வந்தார். அந்த சிரேஷ்டமான தவத்தால் உத்தம லோகங்களை அடைந்து பிரஜாபதிகளில் ஒருவரானார்.


உன் பிதா உனக்கு எப்படியோ நானும் அப்படியல்லவா? உனக்கு அவர் எப்படிப் பூஜிக்கத் தகுந்தவரோ நானும் அப்படியல்லவா?. அவ்ருடைய கட்டளையை எப்படி நிறைவேற்ற வேண்டுமோ அப்படியே என் கட்டளையையும் நிறைவேற்ற வேண்டுமல்லவா?. நீ காட்டிற்குப் போவதில் எனக்கு இஷ்டமில்லை. அதற்கு அனுமதி கொடுக்கமாட்டேன். நீ இல்லாமல் எனக்கு என்ன சுகம்?. உன்னை விட்டு நான் பிழைத்திருக்கவும் வேண்டுமோ? உன்னுடனிருந்து நான் புல்லைத் தின்று கொண்டிருந்தாலும் அதுவே எனக்கு நல்லது. நான் துக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போழுது நீ என்னை விட்டுக் காட்டிற்கு போனால், நான் பட்டினியிருந்து உயிரை விடுவேன். முன் காலத்தில் சமுத்திர ராஜன் தன் தாய்க்கு துக்கத்தை செய்வித்ததால், பாவத்தால் பிராமணனைக் கொன்றவர்கள் அடையும் நரகத்தை அடைந்தான். நீயும் நரகத்தில் என்றும் அழியாத துக்கத்தை அடைவாய், என்றாள்.

இப்படிச் தீனமாய்த் தன் தாய் சொல்வதைக் கேட்டு, தர்ம ஆத்மாவான ராமன், தர்மத்தை அனுசரித்து, "நான் என் பிதாவின் கட்டளையையும் நிறைவேற்ற வேண்டும், தங்களுடைய கட்டளையையும் கீழ் படிய வேண்டும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டையும் அனுஷ்டிக்க முடியாது. மேலும், அவருடைய கட்டளையோ முந்தினது. அதையே இப்பொழுது நிறைவேற்ற வேண்டும். அதை மாற்றக்கக் கூடாது. ஆகையால் நான் வனத்திற்குப் போக வேண்டும். தங்கள் பாதத்தில் நமஸ்கரிக்கிறேன். அருள் கூர்ந்து அனுமதி அருள வேண்டும்.

"இப்படிச் செய்து உன் தாய்க்குத் துக்கத்தை உண்டு பண்ணலாமா" என்றால், முன் காலத்தில் சகல தர்மங்களையும் அறிந்த, கண்டு மஹரிஷி தன் தகப்பன் உத்தரவால் ஒரு பசுவைக் கொன்றார். அவர் தபஸ்வியல்லவா? நமது குரு குலத்தில் சகரர் என்ற அரசர் இருந்தார். தன் அறுபதாயிரம் புத்திரர்களை இந்தப் பூமி முழுவதையும் வெட்டும்படி கட்ட்ளை இட்டார். அதை நிறைவேற்றியதனால் அவர்கள் சாம்பலாக எரிக்கப் பட்டார்கள். அப்படி உயிரைக் கொடுத்தாவது என் பிதாவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியிருக்க, பதினான்கு  வருடங்கள் வரையில் காட்டில் இருப்பது ஒரு பெரிய கஷ்டமா?. தன் தந்தையின் கட்டளையால் பரசுராமர் தன் தாயான ரேணுகையைக் கோடாரியால் வெட்டிக் கொன்றார். அப்படியிருக்கத் தங்களுக்குச் சில காலம் துக்கத்தை உண்டுபண்ண வேண்டுமேயென்று தயங்கலாமா? இதைப்போல் தேவதைகளுக்கு சமமான இன்னும் பலர் தங்கள் பிதாவின் வார்த்தையை நிறைவேற்றி இருக்கிறார்கள். நானும் அப்படியே செய்ய விரும்புகிறேன். இது நான் ஒருவன் மட்டும் கடைபிடிக்கும் தர்மமல்ல. பிறரால் கடைபிடிக்கப் படாததுமல்ல. நான் இப்பொழுது சொன்ன பெரியோர்கள், இப்படியே தம் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி இருக்கிறார்கள். நமது முன்னோர்கள் இதை ஒப்பு கொண்டிருக்கிறார்கள். பெரியோர்கள் நடந்த வழியிலேயே நானும் நடக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லோரும் கடைபிடிக்கும் மேலான தர்மம் இதுதானேயன்றி நான் சுய புத்தியால் கற்பித்ததல்ல. தங்களுக்கு வருத்தத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தால் செய்ததுமல்ல. பிதாவின் கட்டளையை நிறைவேற்றுவதால் மாதாவிற்குக் கொஞ்சம் துக்கம் நேர்ந்தாலும் அதனால் கெட்டவன் உலகத்தில் இதுவரையிலுமில்லை" என்றார்.

நன்றாகப் பேசும் திறமை உள்ளவர்களுக்குள் மேலானவரும் வில்லாளிகளுக்குள் ஒப்பில்லாதவருமான ராமன் லட்சுமணனை பார்த்து, "லட்சுமணா, உனக்கு என்னிடத்தில் இருக்கும் எல்லையற்ற பிரீதியையும் உனது பராக்கிரமத்தையும் தைரியத்தையும் ஒருவராலும் தாங்க முடியாத தேஜஸையும் அறிவேன். சத்தியத்தின் ரகசியத்தையும் சாந்தியின் ரகசியத்தையும் அறியாமல் என் தாய் மிகவும் வருத்தப் படுகிறாள். தர்ம ரகசியத்தை அறிந்த நீயும் இப்படிச் சொல்வது சரியல்ல. சத்தியம் தர்மத்திலேயே வேரூன்றியிருக்கிறது. ஆகையால், புருஷார்த்தங்களில் சத்தியமே மேலானது. இப்பொழுது  என் மாதாவின் வார்த்தையைக் காட்டிலும் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றுவதால் அந்த தர்மம் கிடைக்கும். தர்மத்தில் ஆசையுள்ளவன் பெற்றோர்களுக்காவது பிராமணர்களுக்காவது ஒரு விஷயத்தை வாக்களித்து விட்டுப் பிறகு தவறுவானா? இப்பொழுது என் தந்தையின் உத்தரவால் கைகேயி என்னை வனம் போகச் சொன்னாள். அவருடைய கட்டளையை மீறி நடக்க நான் சக்தியற்றவன். ஆகையால், நமது தகப்பனாயிருந்தாலும் அவரைக் கொன்று விட்டு இந்த ராஜ்யத்தை ஆளுவோம் என்ற சத்தியர்களுக்கு மட்டுமுள்ள குரூரமான புத்தியை விடு. நாத்திகர்களைப் போல் தர்மத்திற்கு ஒவ்வாத நீதியை மாத்திரம் அனுசரிக்காதே. பிறருக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணும் வழியில் செல்லாதே. நான் நடப்பதைப் பார், என்று லட்சுமணனிடத்திலுள்ள மிகுந்த அன்பினால் இப்படிக் கூறி, மறுபடியும் கௌசல்யையை கை கூப்பி வணங்கி கொண்டு, "அம்மா!, தாங்களும் நானும் சீதையும் லட்சுமணனும் சுமித்திரையும் என் பிதாவின் கட்டளைக்குக் கீழ் படிய வேண்டியது புராதன  தர்மம். முதலில் அவர் உத்தரவு செய்ததால் அப்படி பதி நான்கு வருஷங்கள் வரையில் காட்டில் வசித்து விட்டு பிறகு தங்களுடைய கட்டளைப் படி, தங்களுடைய பக்கத்திலிருந்து சிச்ரூஷை செய்வேன். முன் காலத்தில் யயாதி சொர்க்கத்திலிருந்து பூமியில் விழுந்து, பிறகு சொர்க்கத்திற்கு போனது போல், நானும் கொஞ்ச காலம் கஷ்டத்தை அனுபவித்து என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி மறுபடியும் தங்களைத் தரிசனம் செய்கிறேன். ஆகையால், தாங்கள் துக்கத்தை அடக்கிக் கொண்டு எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். நான் நல்லவிதமாகப் போய் வருவதற்கு வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய வேண்டும். என் உயிர்மேல் ஆணையிட்டு சொல்கிறேன். இப்பொழுது என் அபிஷேகத்திற்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு, துக்கத்தை வெளியில் காட்டாமல் தர்மத்தைக் காபாற்றுவதற்காக, நான் வனத்திற்குப் போவதை அனுமதிக்க வேண்டும்", என்றார்.

ராமன் இப்படித் தர்மத்தை அனுசரித்தும், கொஞ்சம் கூட வருத்தமில்லாமலும், உறுதியாயும் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கௌசல்யை, துக்கத்தால் மூர்ச்சையடைந்தாள். பிறகு நினைவு தெளிந்து, "குழந்தாய், நமக்குள்ள சரீர சம்பந்தத்தாலும், உன்னைப் பெற்று வளர்த்ததாலும், உன் தந்தைக்கு சமமாக, நீ என்னை பூஜிக்க வேண்டும். சொல்ல முடியாத துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னை விட்டு, நீ காட்டிற்குப் போகக் கூடாது. நான் சம்மதிக்க அனுமதிக்க மாட்டேன். நீ இல்லாமல் இந்த உலகத்தில் நான் பிழைத்திருந்து என்ன பயன்?. பித்ரு உலகத்திலாவது, சொர்கத்திலாவது, ஆனந்தத்தைக் கொடுக்கும் மேல் உலகங்களிலாவது நான் இருந்தாலும் என்ன சுகம்?, உன்னருகில் ஒரு முகூர்த்தமிருப்பதற்கு இவையெல்லாம் ஈடாகுமா?" என்றாள்.

யானையைப் பிடிக்கிறவர்கள், தீவட்டிப் பந்தங்களுடன் அது போகும் வழியில் ராத்திரியில் நின்று தடுத்தாலும் அதன் கோபம் அதிகரிக்குமேயல்லாது தான் குறி வைத்த பாதையில் இருந்து திரும்புமோ? அப்படித் தன் தாய் வெகு தீனமாகப் பிரலாப்பிப்பதைக் கேட்டும் ராமனுடைய மன உறுதி மறுபடியும் பலமடைந்தது. அவள் சோகத்தால் பிரக்ஞையற்று இருப்பதையும் லட்சுமணன் துக்கத்தால் தவிப்பதையும் பார்த்தும் கூட, தர்மத்தில் நாடிய மனத்தையுடைய ராமன், தர்மத்தை அனுசரித்து மறுமொழி சொன்னார். இப்படி நான்கு பக்கங்களிலும் தர்மத்தால் நிர்பந்திக்கப் பட்டு, அவைகளில் உத்தமமான தர்மம் எது என்று கண்டுபிடித்து அதை ஒரே உறுதியாக அனுஷ்டித்தவர்கள் ராமனைத் தவிர இந்த மூன்று உலகங்களிலும் வேறு ஒருவர் உண்டோ? இப்படிப் பேசத் தகுந்தவர் அவரே.

லட்சுமணா, உனக்கு என்னிடதிலுள்ள பக்தியையும் உன் பராக்கிரமத்தையும் நன்றாக அறிவேன். ஆனால் என் அபிப்பிராயத்தைப் பூரணமாக அறியாமல் நீயும் என் தாயும் எனக்கு வீண் வருத்தத்தை உண்டாக்குகிறீர்கள். தர்மத்தைப் பற்றிச் சுருக்கமாக இதுவரையில் சொன்ன வார்த்தைகளை விவரமாகச் சொல்லுகிறேன் கேள். ஒருவனுடைய மனைவி அவனுடைய கட்டளைப்படி நடப்பதால் தர்மத்தையும் அவனுடைய பிரீதிக்குப் பாத்திரமாயிருப்பதால் காமத்தையும், நல்ல புத்திரனைப் பெறுவதால் அர்த்தத்தையும் சம்பாதிக்கிறாள். இப்படியே தர்மார்த்த காமமென்ற புருஷார்த்தங்கள், தர்மத்தால் கிடைக்கும் சுகத்திற்கு, உபாயங்களாகச் சொல்லப் படுகின்றன. தர்மம் ஒன்றையே நன்றாக அனுஷ்டித்தால் இம்மூன்றும் கிடைக்கும். இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. மேற்சொன்ன புருஷார்த்தங்கள் எதனால் கிடைக்காதோ அதை ஆரம்பிக்கக் கூடாது. எந்தக் காரியத்திலிருந்து தர்மம் விளையுமோ, அதையே செய்ய வேண்டும். கேவலம் அர்த்தத்தையே நாடுகிறவனை உலகத்தார் அனைவரும் வெறுக்கிறார்கள். கேவலம் காமத்தையே நாடுவதும் அப்படியே. இப்பொழுது நான்  செய்ய வேண்டிய தர்மம் என்னவென்று யோசிப்போம். தனுர் வேதம் ராஜ நீதி முதலியவை எனக்கு உபதேசித்ததால் மஹாராஜா எனக்கு ஆசாரியார். என்னைக் காப்பாற்றும் அரசன். என்னைப் பெற்ற பிதா. வயதால் பெரியவர். அப்படிப் பட்டவர் கோபத்தாலோ சந்தோஷத்தாலோ காமத்தாலோ ஏதாவது ஒன்றைக் கட்டளை இட்டால் குரூரமான தன்மையையும், நடத்தையையும் உடையவனைத் தவிர,ஒருவன்  சொன்ன வார்த்தையை நிறைவேற்றாமலிருப்பானா? நான் குரூர சுபாவமுள்ளவனல்ல. என் பிதா செய்த பிரதிக்ஞையை என்னால் முடிந்தவரையில் நிறைவேற்றுவேன்.

அவர் நம்மிருவருக்கும் பிரபு. என் தாய்க்கும் அப்படியே. அவளுக்கு அவரே உத்தம கதி. அவள் புண்ணிய உலகங்களை அடைவதற்கு அவரே சாதனம். நமது முன்னோர்களைக் காட்டிலும் அவர் விஷேசமாகத் தர்மத்தை அனுசரித்து நெறி தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்து வரும் பொழுது, என் தாய் திக்கற்ற ஒரு சாதாரண பெண்மணியைப் போலவும் கணவனை இழந்தவளைப் போலவும் என்னுடன் வனத்திற்கு வருவது உசிதமா?

"அம்மா, நான் வனத்திற்குப் போகிறேன். உத்தரவு கொடுங்கள். நான் திரும்பி ஷேமமாய் வந்து சேருவதற்கு மங்கள காரியங்களைச் செய்யுங்கள். யயாதி மஹாராஜா சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு சத்தியத்தைச் சொன்னதால் மறுபடியும் சொர்க்கத்திற்குப் போனதைப் போல், நானும் பதி நான்கு வருடங்கள் முடிந்தவுடன் திரும்பி வருகிறேன். தர்மமாகக் கிடைக்காத இந்த ராஜ்யத்தில் ஆசைப்பட்டு கீர்த்தி  என்ற விஷேசப் பிரயோஜனத்தைத் தள்ளி விட என்னால் முடியாது. நமது ஜீவ காலம் வெகு அல்பம். மின்னல் கொடியைப் போல நிலையற்றது. அதில் அதர்மத்தை செய்தாவது இந்தப் பூமியை ஆளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை", என்று புருஷோத்தமரான ராமன் தன் தாயை சமாதானப் படுத்திக் கைகேயியின் சொற்படி அங்கிருந்து சீக்கிரமாகப் புறபட்டு வனத்திற்குப் போக நிச்சயித்து, லட்சுமணனுக்குத் தன் உண்மையான அபிப்பிராயத்தைத் தெரிவித்துத் தன் தாயை பிரதக்ஷிணம் செய்து உத்தரவு பெற்றுக் கொள்ள உத்தேசித்தார்.

21  ம சர்க்கம் நிறைவு

Wednesday, April 20, 2011

ஸ்ரீமத் ராமாயணம் : சக்தி மிகுந்த பரிகாரம்

 
ஸ்ரீ ரமஜெயம்
ஸ்ரீமத் ராமாயணம் : சக்தி மிகுந்த பரிகாரம் 
SRIMATH RAMAYANAM

ஸ்ரீமத் ராமாயணம் காலகாலமாக வாசிக்கப்பட்டு வரும் மாபெரும் நூலாகும். 
இதனை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் சங்கடங்கள் எதிர் கொள்ளவும் அதனை விலக்கிக   கொள்ளவும்,பெரியோர்கள் உமா ஸம்ஹிதை மூலத்தை கொண்டு  இக்காலத்திற்கு ஏற்ப ஸ்ரீமத் ராமாயணத்தில் வருகின்ற சில  அத்யாயங்களை  வகை படுத்தி நம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள வகை செய்து உள்ளார்கள்.அதனை கண்டு நாம் பயனடைவோமாக ...
ஸ்ரீ ராம ராம ராம 

முக்கியமான த்யான சுலோகங்கள்
ஸ்ரீமத் ராமாயண் பாராயணம் செய்வதற்கு முன் கீழ் காணும் த்யான சுலோகங்களை படிக்கவும்.

ஸ்ரீ வால்மீகி
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II
வால்மீகேர் முநிஸிமஸ்ய கவிதா வந சாரிண: I
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராம்கதிம் II

ஸ்ரீ ஹநுமான்
கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம் I
ராமாயண மஹாமாலா ரத்நம் வந்தே(அ) நிலாத்மஜம் II
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் I
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசநம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் II

ஸ்ரீ ராமன்
வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸூஸ்த்திதம் II
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸூதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி : பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்



முக்கியமான மங்கள சுலோகங்கள்
ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II

காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ

சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா  I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II



SRI RAMAYANAM SAVES OUR LIFE : SRI RAM SRI JAYARAM SRI JAYA JAYA ராம்

நமக்கு பொதுவாக உள்ள பிரசினைகள் அதனை தீர்க்கும் பரிகார அத்யாயங்கள் அட்டவணை

அட்டவணைபடி பிற தலைப்பு பாராயண கட்டங்கள் விரைவில்***


Å¡¢¨º
±ñ

ÌÈ¢ôÀ¢ð¼
¸¡¡¢Âí¸û

¸¡ñ¼õ

À¡Ã¡Â½
À̾¢¸û

À¡Ã¡Â½
¸ð¼õ

¸¡Äõ

¿¢§Å¾Éõ

1










2


«§Â¡ò¡



¸¡¨Ä
Á¾¢Âõ
Á¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

3


À¡Ä

73

…£¾¡
¸ø¡½õ

¸¡¨Ä

ÀÍõ À¡ø

4

§Á¡‡ ÀÄý …¢ò¾¢ì¸..

¬ÃñÂ

65,66,
67&68

ƒ¼¡Ô
§Á¡‡õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

5



59

áŽ
¸¢¡£¼Àí¸õ

þÃñÎ §Å¨Ç

ӾĢø §¾ý ÓÊÅ¢ø
À¡ø

6

§Àö,À¢º¡Í, À¢øÄ¢
ÝýÂõ ¿£í¸

Íó¾Ã

3

Äí¸¡
Å¢ƒÂõ

Á¡¨Ä

º÷츨Ãô ¦À¡í¸ø,†ÛÁ¨É
ò¡Éõ ¦ºöÐ ¸¨¼º¢Â¢ø ¸üâà ¬Ãò¾¢ ¸¡ð¼×õ

7

¨Àò¾¢Âõ ¦¾Ç¢Â..

Íó¾Ã

13

ÛÁò
º¢ó¨¾

¸¡¨Ä

¯Ùó¾ýÉõ

8

¾¡¢ò¾¢Ã ¿¢¨Ä ¿£í¸..

Íó¾Ã

15

º£¾¡
¾¡¢ºÉõ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

9

«Îò¾ÎòÐ ÅÕõ
Ðì¸õ ¿£í¸..

Ôò¾

116

º£¨¾
¬ïƒ§ÉÂ
…õÅ¡¾õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û

10

±¾¢÷À¡Ã¡Áø Åó¾
¬ÀòÐ ´Æ¢Â..

Ôò¾

18 ,19

Å¢À£„½
ºÃ½¡¸¾¢

¸¡¨Ä

ӾĢÖõ ¸¨¼º¢Â¢Öõ §¾í¸¡ö

11

Å¢ðÎ À¢¡¢ó¾Å÷
ÅóÐ §ºÃ..

Íó¾Ã

36

«íÌģ¸ ôþ¡Éõ

¸¡¨Ä Á¡¨Ä

ÀÄ¡ôÀÆõ,Á¡õÀÆõ

12

Ð÷¦º¡ôÀÉ
§¾¡„õ ¿£í¸..

Íó¾Ã

27

¾¢¡¢ƒ¨¼
ŠÅôÉõ

¸¡¨Ä

ãýÚ ¿¡ð¸û À¡Ã¡Â½õ º÷츨à ¿¢§Å¾Éõ

13

Šò¡£ ¸¡ÁÉ
§¾¡„õ ¿£í¸

Íó¾Ã

7,8,9,
10,11

ÛÁò
º¢ó¨¾

¸¡¨Ä

þÕÀÐ «ôÀí¸û

14

áÁÛìÌî ¦ºö¾
«Àº¡Ã §¾¡„õ ¿£í¸..

Íó¾Ã

38

¸¡¸¡Íà ŢÕò¾¡ó¾õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

15

ÁÚÀ¢ÈŢ¢ø º¸Ä
͸í¸Ùõ ¦ÀÈ..

Ôò¾

131

‚ áÁ Àð¼¡À¢§„¸õ

¸¡¨Ä

´Õ Á¡¾õ À¡Ã¡Â½õ ¦ºö §ÅñÎõ. ¦Åñ
¦À¡í¸ø

16

ÌÆó¨¾ §ÀÚ
¯ñ¼¡¸

À¡Ä

15,16

Òò¾¢Ã
¸¡§Á‰Ê À¡Â… ¾¡Éõ

¸¡¨Ä

20 ¿¡ð¸û À¡Ã¡Â½õ ¦¿ö À¡Â…õ

17

͸ô À¢ÃºÅõ ¯ñ¼¡¸..

À¡Ä

18

‚áÁ¡Å¾¡Ãõ

¸¡¨Ä

¸÷ôÀ¢½¢ §¸ð¸ §ÅñÎõ.
²¾¡ÅÐ ŠÅøÀ ¿¢§Å¾Éõ

18

º¢¨È Å¡º ÀÂõ ¿£í¸..

Ôò¾

117

Å¢À£„½ý
º£¨¾¨Â
‚ áÁ¡¢¼õ §º÷ò¾ø

¸¡¨Ä

ÁÐà À¾¡÷ò¾í¸û

19

Ð÷ ¿¼ò¨¾ÔûÇ
À¢û¨Ç ¿øÄÅÉ¡¸..

«§Â¡ò¡

1,2

‚ áÁ ̽ Å÷½õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û

20

¿¢¨Éò¾ ¸¡¡¢Âõ
¿¢¨È§ÅÈ

À¡Ä

75,76

ÀÃÍáÁ
¸÷ÅÀí¸õ

¸¡¨Ä

À¡Â…õ, «ôÀõ

21*

სí¸ì ¸¡¡¢Âí¸Ç¢ø
¦ÅüÈ¢
¦ÀÈ..

«§Â¡ò¡

100

ჾ÷Áí¸û

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û