Saturday, June 25, 2011

6.பேய் பிசாசு பில்லி சூனியம் நீங்க.


ஸ்ரீ ராமசந்த்ராய நம:

6.பேய் பிசாசு பில்லி சூனியம் நீங்க.



==================================================
ஸ்ரீமத் வால்மீகி  ராமாயணம்
சுந்தர காண்டம்: சர்க்கம் 3
==================================================


உமா ஸம்ஹிதா

பூதவேதாள பீட சேத் லங்காவிஜய சர்க்கம் !
ஆதௌகுடாந்தம் நைவேத்யம் க்ருத்வா ஸாயம் படேத்யத: !!
விமார்க ஸர்வத்ரேதி பத்யஸ்யாந்தே நீராஜநார்ப்பணம் !
க்ருத்வாத ப்ரணமேத் பூமௌ ஆஞ்சனேயம் ஹ்ருதாஸ்மரந் !!

வீட்டில் யாருக்காவது பேய் பிசாசு பில்லி சூனியம் முதலியவைகளால் பீடை உண்டாகில், "ஆஞ்சனேயர் லங்கா விஜயம்" செய்த சுந்தர காண்டம் 3 வது சர்க்கத்தை மாலையில் பாராயணம் செய்யவேண்டும். "விமார்க்க ஸர்வத்ர" என்று கடைசி சுலோகம் முடிந்ததும் கற்பூர ஹாரத்தி செய்து, ஆஞ்சனேயரைத் தியானம் செய்து நமஸ்கரிக்கவேண்டும்.

நிவேதனம்: ஆரம்பத்தில் மாத்திரம் சர்க்கரைப் பொங்கல்.

ஸங்கல்பம்
ஸ்ரீ சீதாலக்ஷ்மண பரதசத்ருக்ந ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாத்ந பூம்யந்தரிஷ
சர பூதவேதாளதிக்ருத பீடாநிவ்ருத்யர்த்தம்
'லங்காதேவதா விஜயாத்மக ஸ்ரீமத் ராமாயண'
கட்ட பாராயணம் அஹம் கரிஷ்யே1

ஸர்க்கம் 3

மாருதி லங்காதேவதையை ஜெயித்தது

ஸ லம்பசிகரே லம்பே லம்பே தோயத ஸந்ன்நிபே !
ஸத்வமாஸ்தாய மேதாவீ ஹனுமாந் மாருதாத்மஜ: !!

நீருண்ட மேகம் ஆகச வீதியில் தொங்குவது போலத் தோன்றும் லம்பமென்ற பெயர் பெற்ற சூவேல மலையின் மேலிருந்து மஹா புத்திமானான ஹனுமான், லங்கைடில் பிரவேசித்துத் தேடுவதற்கு வேண்டிய திறமையை அடைந்து, ராத்திரி காலத்தில் அந்த நகரத்தில் புகுந்தார். அது அழகிய பூஞ்சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து, சரத்காலத்து மேகங்களையொத்த வீடுகளால் விளங்கிற்று.மக்களுடைய கூச்சல்கள் கடல் கொந்தளிப்பது போன்றிருந்தது. கடற்காற்று சுகமாய் வீசிக் கொண்டிருந்தது. குபேரனுடைய அளகாபுரியைப் போல நன்றாக அமைக்கப்பெற்ற சதுரங்க பலத்தை உடையது. அழகிய தோரண வாசல்களில் மதயானைகள் கட்டப்பட்டிருந்தன. வெண்மையான தோரண வாசல்கள் அமைக்கப்பட்டிருந்தன.ஸர்ப்பங்களுடைய ராஜதானியான போகவதியைப்போல் நன்றாய்ப் போஷிக்கப்பட்ட சதுர்வதியைபோல் நன்றாக ரக்ஷிக்கப்பட்டது. உயர்ந்த வீடுகளின் உச்சியில் மின்னற் கொடிகள் கொண்ட மேகங்கள் இருந்தன. அவை நக்ஷத்திர மண்டலத்தை அளாவி இருந்தனவன்றோ? காற்று மிருதுவாயும் சுகமாகவும் வீசிக் கொண்டிருந்தது.இந்திரனுடைய அமராவதியோ என்று மலைக்கும்படி இருந்தது. பொன்னால் செய்த பெரிய மதில் சுவரால் சூழப்பட்டிருந்தது. கொடிகளிலும் த்வஜங்களிலும் கட்டபட்டிருந்த கிங்கிணிகள் மதுரமாய் சப்தித்துக் கொண்டிருந்தன. இவைகளைப் பார்த்து அடங்காத ஆச்சரியம் கொண்டு ஹனுமான் தங்கப் பிரகாரத்திற்கு அருகில் சென்றார். தங்கமயமான கதவுகளும்  வைடூரியங்களிழைத்த மேடைகளும், நவரத்தினங்களாலும் ஸ்படிகத்தாலும் முத்துக்களாலும் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட தரைகளும் உருக்கி ஓடவிட்ட தங்கத்தால் அமைக்கப்பட்ட மத யானைகளும் வைடூரியப் படிக்கட்டுக்களுடனும் ஸ்படிகத்தினால் புழுதியற்று பிரகாசிக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட மேல் மாடங்களும் ஆகாசத்தையளாவும் அழகிய சபைகளும் கிரௌஞ்சம், மயில், ராஜ ஹம்சம் முதலிய பக்ஷிகளும், வாத்தியங்களும் பாட்டும் ஆபரணங்களும் இனிமையாக சப்திப்பதும் அமராவதியோ என்று பார்ப்பவர்கள் மயங்கும்படி ஆகாசத்தில் பறந்து போவதுபோல் இருப்பதுமான அந்த நகரம் ஆஞ்சனேயருக்கு மேலும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் விருத்தி செய்தது.
விரும்பக்கூடிய சகல ஐசுவரியத்தாலும் விளங்கும் அந்த ராக்ஷச ராஜதானியைப் பார்த்து, "என்ன ஆச்சரியம்! இந்த லங்கையை எந்த எதிரியாவது கண்ணெடுத்துப் பார்க்கக் கூடுமோ? எக்காலத்திலும் ஆயுதபாணிகளாக இதை ரக்ஷிக்கும் ராவண படைகள் சாதரணமா? குமுதன், அங்கதன், சூசேணன், மைந்தன்,த்விவிதன் இவர்களுக்கே இந்த நகரம் தெரிந்திருக்கும். ஆனால் சுக்ரீவனும், குசபவர்வனும், கேதுமாலனும், நானுமே இதில் பிரவேசிக்க முடியும்" என்று கவலை கொண்டார். பிறகு ராமனுடைய பராக்கிரமத்தையும் லட்சுமணனுடைய வீரியத்தையும் நினைத்து அளவற்ற சந்தோஷமடைந்தார். லங்கை என்ற ஸ்த்ரீக்கு ரத்தினங்கள் இழைத்த பிரகாரமே வஸ்த்திரம். யானை, குதிரை, பசுக்களிருக்கும் சாலைகளே செவிக்கு ஆபரணங்கள். மதில்களிலுள்ள ஆயுத சாலைகளே ஸ்தனங்கள். அந்த நகரத்தில் ரத்தின தீபங்களாலும்,ஜொலிக்கும் வீடுகளாலும் இருட்டென்பதே தெரியாது.
இப்படி அனேக அற்புதமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு மாருதி செல்கையில், அந்த நகரத்தைக் காக்கும் தேவதை, ஹனுமான் அந்த நகரத்தில் பிரவேசிக்க முயலுவதைக் கவனித்து, விகாரமான ஸ்த்ரீ ரூபத்துடன் அவருக்கெதிரே தோன்றிக் கோரமான குரலுடன் "நீ யார்? காட்டில் வசிக்கும் குரங்கு இங்கே வந்த காரணமென்ன? உன் பிராணன் போவதற்கு முன் உண்மையைச் சொல், மூடா! குரூர ராக்ஷசர்கள் இடைவிடாமல் இதைக் காத்து வருகிறார்கள். ராவணேசுவரன் இதைத் தன் உயிரைப் போல் ரக்ஷிக்கிறான். நானே இந்த நகரத்தை காக்கும் தேவதை; நீ இதற்குள் சுலபமாகப் பிரவேசிக்கலாம் என்று வந்தாயோ?' என்று அதட்டினாள். அதற்கு மாருதி, "பெண்ணே! நீ கேட்டதற்கு நிஜமான மறுமொழி  சொல்கிறேன். ஆனால் நீ யார்? விகார ரூபத்துடன் இந்த நகரத்து வாசலில் நின்று கொண்டு என்னைத் தடுத்து ஏன் அதட்டுகிறாய்?" என்றார். லங்காதேவதை தான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் தன்னை எதிர்த்துக் கேட்ட ஹனுமானிடத்தில் கோபம் கொண்டு,"கேளடா குரங்கே! ராக்ஷஸ ராவணேசுவரனுடைய கட்டளைப்படி இந்த நகரத்தை ரக்ஷித்து வருகிறேன். என்னை ஒருவரும் எதிர்க்க முடியாது. என்னை அலட்சியம் செய்து நீ இந்த நகரத்தில் செல்ல முடியுமோ? இதோ உன் உயிரை வாங்குகிறேன் பார். நானே லங்காபுரி. எந்த திக்கிலும் இதைக் காத்து வருகிறேன்," என்றாள். அதைக்கேட்டு, ஹனுமான் அவளை ஜெயிப்பதற்கு வெண்டிய சக்தியை மேற்கொண்டு மஹாபர்வதத்தைப்போல் அசையாமல் நின்று விகாரமான பெண் உருவம் கொண்ட அந்த தேவதையை நோக்கி, "இந்த லங்காபுரியையும் இதிலுள்ள வீடுகளையும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் வனங்களையும் தோட்டங்களையும் சோலைகளயும் நன்றாகப் பார்க்க வேண்டுமென்று எனக்கு மிக்க ஆசை உண்டு. அப்படியே என் இஷ்டப்படி சகல ஆச்சரியங்களையும் பார்க்க வந்திருக்கிறேன்" என்று மறுமொழி சொன்னார்.உடனே லங்கா தேவதை, "மூடா! என்னை ஜெயித்தால் அல்லவா நீ இந்த பட்டணத்தில் புக முடியும்?" என்று கடுமையாக அதட்டினாள். அதற்கு ஹனுமான், "பெண்ணே! இருக்கட்டும். இந்த நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போக நிச்சயித்திருக்கிறேன்," என்று சாந்தமாக பதில் சொன்னார்.
உடனே அந்த நகர தேவதை பயங்கரமாய் கர்ஜித்து, ஆஞ்சனேயரை ஓங்கி அறைந்தாள். அந்த வானர வீரன் கோபம் கொண்டு, இடிபோல் சிரித்து, ஒரு பெண்ணை வலது கையால் அடிப்பது தனக்கு குறைவாகையால், இடது கை விரல்களை மடக்கி அவளைக் குத்தினார். அதே காரணத்தால் அவளிடத்தில் மிகவும் கோபிக்கவில்லை. அந்தக் குத்தைத் தாங்கமுடியாமல் அந்த ராக்ஷஸி தேகம் கலங்கி, விகாரமான முகத்தையும், கண்களையும் உடையவளாய்ப் பூமியில் விழுந்தாள். அதைப் பார்த்து ஹனுமான் அவள் பெண் என்பதை நினைத்து இரக்கம் கொண்டார். அப்பொழுது லங்கா தேவதை பயத்தால் நடுங்கி வார்த்தைகள் குளர கர்வமழிந்து, "வானர சிரேஷ்டா! கிருபை செய்யும். மகா  அனுபவா! என்னைக் காப்பாற்றும். தைரியம் பலம் முதலிய உத்த்ம குணங்களுடைய வீரர்கள் பெண்களைக் கொல்வதில்லை.நானே லங்காபுரி. உமது பராக்கிரமத்தால் இன்று ஜெயிக்கப்பட்டேன். வேறோரு விஷயம் சொல்லுகிறேன், கேளும். இது சத்தியம். முன் காலத்தில் பிரம்ம தேவர் என்னைப் பார்த்து, 'எந்தவேளையில் ஒரு வானரன் உன்னை பராக்கிரமத்தால் ஜெயிப்பானோ அப்பொழுது ராக்ஷஸ குலத்திற்குப் பெரிய பயம் நேரும்' என்று வரம் கொடுத்திருக்கிறார். இன்று உம்மைப் பார்த்தால் அந்த சமயம் வந்து விட்டதென்று தோன்றுகிறது. பிரம்மாவின் வார்த்தைக்கு இரண்டுண்டோ? துர் ஆத்மாவான ராவணனும், ஸமஸ்த ராக்ஷஸர்களும் சீதையின் பொருட்டு மடியும் காலம் நெருங்கி விட்டது. வானர உத்தம! ராவணனால் ரக்ஷிக்கப்பட்ட இந்த லங்கையில் உமது இஷ்டப்படிப் பிரவேசித்து, வேண்டிய காரியங்களைச் செய்யும். அனேக சாபங்களால் கொளுத்தப்பட்ட இந்த நகரில் பிரவேசியும். இந்த ராக்ஷஸ ராஜதானியில் உமது இஷ்டப்படி சகல இடங்களிலும் சீதையைத் தேடும்' என்றாள்.

ப்ரவிச்ய சாபோபஹதாம் ஹரீச்வர:
புரீம்ஷூபாம் ராக்ஷ்ஸ ராஜபாலிதாம்!
யத்ருச்சயா த்வம் ஜனகாத்மஜாம் ஸதீம்
விமார்க ஸர்வத்ர கதோ யதாஸூகம்!!
மங்கள சுலோகங்கள் கூறி பூஜையை நிறைவு செய்யவும்.

சுந்தர காண்டம் 3  வது சர்க்கம் முற்றிற்று


மங்கள சுலோகங்கள் கூறி நிறைவு செய்யவும்.
ஸ்ரீ ராம ராம ராம

Tuesday, May 17, 2011

5.தீராத வியாதிகள் தீர


ஸ்ரீ ராமசந்த்ராய நம:

5.தீராத வியாதிகள் தீர

=========================================================

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

யுத்த காண்டம்: சர்க்கம் 59

=========================================================

உமா ஸம்ஹிதா

அபஸ்மார ச்வாஸ காஸ குஷ்டாதி கத சாந்தேயே !
ஆத்யே யுத்தே தஸாஸ்யஸ்ய மௌளிபங்கம் திநேதிநே !!
படேத் த்விவாரம் நைவேத்ய மாதௌ மத்வந்தத: பய: !!

கரும வியாதிகள் எனப்படுகின்ற காக்காய் வலி, மூர்ச்சை, பெருமூச்சு, காசம், க்ஷயரோகம், பெருவியாதி, குஷ்டம் போன்ற தீராத நோய்கள் நிவர்த்தியாவதற்கு "ராவண கிரீட பங்கம்" என்ற யுத்த காண்டம் 59-வது ஸர்க்கத்தை தினந்தோறும் இரண்டு தடவை (காலை ஒரு முறை, மாலை ஒரு முறை) பாராயணம் செய்ய வேண்டும்.

நிவேதனம்: ஆரம்பத்தில் தேன், முடிவில் பால்.

ஸங்கல்பம்
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதசத்ருக்ன ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாதேன ஸகலவித
ரோக சாந்த்யர்த்தம் "ராவணகிரீட பங்கா"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே!!



ஸர்க்கம் 59

ராமன் ராவணனுடைய கிரீடத்தை உடைத்தது.

தஸ்மிந் ஹதே ராக்ஷஸ ஸைnயபாலே
ப்லவங்கமானா ம்ருஷபேண யுத்தே !
பீமாயுதம் ஸாகரதுல்யவேகம்
விதுத்ருவே ராக்ஷஸராஜஸைன்யம் !!

இப்படி வானரத் தலைவனால் ராக்ஷஸ சேனாதிபதி கொல்லப்பட்டவுடன், பயங்கரமான ஆயுதங்களையும் ஸமுத்திரத்தைப் போன்ற வேகத்தையுமுடைய அந்த ராக்ஷஸஸேனை முறிந்தோடி ராவணிடத்திற்குச் சென்று, அக்னி புத்திரனால் பிரஹஸ்தன் மடிந்ததைத் தெரிவித்தார்கள். அப்படி நடக்குமென்று தசமுகன் ஸ்வப்னத்திலும் நினைத்ததில்லை. ஆகையால் ஆச்சரியமும், சோகமும் கோபமும் மேலிட்டு, தேவேந்திரனைச் சூழ்ந்த அமரயுத்த வீரர்களைப் போல் தன் சமீபத்தில் நிற்கும் ராக்ஷஸ வீரர்களை நோக்கி, "பார்த்தீர்களா? நமது சேனாதிபத்ய்யான பிரஹஸ்தன் சாமன்யனா? இந்திரனையும் கதறச் செய்கிறவன். இப்பொழுது அவனும் அளவற்ற ராக்ஷஸ ஸைன்யமும் அல்பக் குரங்குகளால் மடிந்தார்கள். ஆகையால் சத்ருவை நாம் அலட்சியம் செய்யக்கூடாது. இனி நானே யுத்தத்திற்குச் சென்று ராமலட்சுமணர்களையும் வானரர்களையும் காட்டுத்தீ விருக்ஷங்களை எரிப்பது போல் என் பாணாக்னியால் கொளுத்தி ஜயசாலியாய்த் திரும்பி வருகிறேன்" என்று நெருப்புக் கொழுந்தைப் போல் பிரகாசிக்கும் ரதத்தில் ஏறினான். அதில் உத்தம ஜாதி அச்வங்கள் பூட்டியிருந்தன. காந்தியால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்தன. அந்த ராக்ஷஸேச்வரன் யுத்தத்திற்குப் புறப்படும் பொழுது சங்கம், பேரிகை, துந்துபி, மிருதங்கம் முதலிய வாத்யங்களின் ஓசையும், யுத்த வீரர்கள் தோள் தட்டும் சப்தமும், வீரவாதங்களும், ஸிமஹ நாதங்களும், புண்யாஹவாச ஸ்தோத்திரங்களும் எங்கும் நிறைந்தன. பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு, பிரஜைகளால் கொண்டாடப்பட்டு, லங்கேச்வரன் யுத்தத்திற்குப் புறப்பட்டான். பர்வதங்களைப் போல் கடினமான தேகங்களையும், மேகங்களைப்போல் நினைத்த மாத்திரத்தில் மாற்றக் கூடிய ரூபங்களையும் நெருப்புக் கொழுந்தைப் போல் பிரகாசிக்கும் நேத்திரங்களையுடைய ராக்ஷஸ வீரர்களால் சூழப்பட்ட தசமுகன், பூதகணங்களால் சூழப்பட்டு அஸூரர்களுக்குத் தலைவனான ருத்திரனைப்போல் விளங்கினான். "இவருடைய (சிவனுடைய) தாமஸ அம்சமே ருத்திரனெனப்படும்" என்று மைத்ராயணீய உப*நிஷத்தில் சொல்லியபடி, ருத்ரன் அஸூரர்களுக்கு அதிபதியென்றும் தெரிகிறது.

பிறகு அந்த மஹாதேஜஸ்வியான தசமுகன் லங்கைக்கு வெளியில் வந்து, வானரஸைன்யம் விருக்ஷங்களையும் மலைகளையும் எடுத்துக்கொண்டு, பார்க்கப் பயங்கரமாய் சமுத்திரத்தைப் போலும் மேகங்களை போலும் கர்ஜித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அசுர படை அதிகோபத்துடன் வருவதைக் கண்டு ராமனுக்கு யுத்த ஆவேசத்தால் புஜங்கள் நீண்டன. வீர லக்ஷ்மி விளங்கிற்று. எல்லையற்ற வானர படைகளால் சூழப்பட்டு நிற்கையில், விபீஷணன் போர்வீரர்களின் தாரதம்யத்தை நன்றாக அறிந்தவன். ஆகையால், ராமன் அவனை நோக்கி, "அனேக த்வஜங்களாலும், கொடிகளாலும், வில்லுகளாலும், சூலம் ஈட்டி முதலிய ஆயுதங்களாலும், மலைகளைப் போன்ற யானைகளாலும், பயமற்ற வீரர்களாலும் விளங்கும் இந்த படை யாருடையது? இது கலைக்கமுடியாதது" என்றார். அதற்கு இந்திரனைப் போன்ற வீரியமுடைய விபீஷணன், அசுர படையின் விவரத்தையும் அசுர வீரர்களுடைய பெருமைகளையும் விவரித்தான். "அதோ பெரிய சரீரத்துடன் இலஞ்ச்சூரியனைப் போன்ற சிவந்த முகத்துடனும் அந்த மதயானையின் தோளில் உட்கார்ந்து கொண்டு, தன் தேக பாரத்தால் அந்த யானையின் தலையை அதிரச் செய்கின்றவன் அகம்பனன். அதோ சிங்கக் கொடியையுடைய தேரில் இந்திர வில்லைப் போன்ற தன் வில்லைச் சுழற்றிக் கொண்டிருப்பவன், ராவணனுடைய மூத்த குமாரனான இந்திரஜித். தேகபலத்தில் மத யானையைப் போன்றவன். பயங்கரமாய் வெளியில் தெரியும் கோரைப் பற்களையுடையவன். பிரம்மாவால் கொடுக்கப்பட்ட வரங்களால் நினைத்த பொழுது மறையக்கூடியவன். அதோ, விந்தியம், மஹேந்திரம், அஸ்தகிரி முதலியவைகளைப்போல் எல்லையற்ற தேகத்தையுடையவன் அதிகாயன். அளவிற்கு மிஞ்சின ஒரு வில்லைச் சுற்றிக்கொண்டு, ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டத் தேரில் வருகிறான். மாயாபலமில்லாவிட்டாலும் இந்திரஜித்தை விட மேலான வீரன். அதோ இளஞ்சுரியனைப் போல் மின்னும் கண்களுடன் சிறந்த யானையின் மேலேறிக்கொண்டு, அதன் மணியின் சப்தத்தோடு தன் கர்ஜனையையும் சேரும்படி செய்கிறவன் மஹோதரன். அதோ தங்க ஆபரணங்களாலும் ஜேணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது ஏறிக்கொண்டு, கிரணங்கள் பாயும் எறியீட்டியைச் சுழற்றிக்கொண்டு வருகிறவன் பிசாசன். சந்தியா காலத்தில் மேகங்கள் நிறைந்த மலையைப் போல் பிரகாசிக்கும் அவனுடைய குதிரையையும், இடியைப்போல் அவன் வரும் வேகத்தையும் பாருங்கள். அதோ கூர்மயான முனையுடனும், மின்னலைப் போன்ற காந்தியுடனும், வஜ்ராயுதத்தை மிஞ்சின வேகத்துடனும் விளங்கும், சூலத்தை எடுத்துக் கொண்டு, மலையைப் போல் பிரகாசிக்கும் காளைமேல் வருகிறவன் திரிசரஸ் என்று பிரசித்தி பெற்றவன். அதோ மேகத்தைப் போன்ற ரூபத்துடனும் பருத்த அகன்று உயர்ந்த மார்புடனும் நாகக் கொடியுடனும் யுத்தத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு வில்லைச் சுழற்றுகிறவன் கும்பன். தங்கத்தாலும் வஜ்ரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுப் புகைகளுடன் பிரகாசிக்கும் இருப்புக் கட்டுத்தடியை எடுத்துக் கொண்டு அசுர படைகளுக்கு முக்கியமானவனாய் விளங்குகின்றவன், அற்புதமான கோரகிருத்தியங்களைச் செய்யும் நிகும்பன். அதோ வில், கத்தி, பாணங்கள் முதலிய ஆயுதங்களால் நிறைந்து, அழகான கொடியுடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் பிரகாசிக்கும் தேரில் ஏறி வருகிறவன் நராந்தகன். இவனுடன் போர் புரிய யாரும் கிடைக்கததால் புஜங்களின் தினவு தீர்வதற்காக மலைகளுடன் போர் செய்து கொண்டிருப்பவன்.

"பலவகைக் கோர ரூபங்களோடும் புலி, ஒட்டகம், பாம்பு, மான், குதிரை முதலிய மிருகங்களைப் போன்ற முகங்களோடும் சுழலும் கண்களோடும் காணப்படும் பூதங்களால் சூழப்பட்டு, அதோ வருகிறவன், தேவர்களுடைய கர்வத்தை அடக்கினவன். அதோ வெள்ளைக்குடை சந்திரனைப் போல் அவன் தலைமேல் விளங்குகிறது. மெல்லிய கம்பிகளையுடைய அதன் கீழ் பூதகணங்களால் சூழப்பட்ட ருத்திரனைப் போல் வீற்றிருப்பவன். அசுராதிபதி. உத்தம கிரீடத்தாலும் குண்டலங்களாலும் பிரகாசிக்கும் முகத்துடன், ஹிமவான் விந்தியம் முதலிய மலைகளைப் போல் பருத்த தேகத்துடன் தோன்றுகிறவன், இந்திரன் யமன் முதலிய திக்பாலர்களுடைய மதத்தை அடக்கின லங்கேச்வரன். சுரியனைப் போல் தேஜசால் ஜொலிப்பதைப் பாருங்கள்" என்றான்.

அதைக்கேட்டு ராமன், "விபீஷண! என்ன காந்தி! அசுராதிபதியான ராவணன் மஹாப்ரதாவானென்று தோன்றுகிறது. மத்தியான காலத்தில் பூரண கிரணங்களுடன் ஜொலிக்கும் சூரியனைப் பார்ப்பது எப்படி அசாத்தியமோ அப்படி இவனைப் பார்க்கக் கண் கூசுகிறது. இவனுடைய தேகம் தேஜசால் சூழப்பட்டிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. தேவதானவ வீரர்களுக்கும் இப்படிப்பட்ட தேக காந்தி கிடையாது. இவனுடைய படையில் ஒவ்வொருவனும் மலை போன்ற தேகத்தை உடையவன். மலைகளால் போர் செய்கிறவன். தீக்ஷ்ணமான ஆயுதங்களைத் தரித்தவன். கோரமுள்ள பூதங்களால் சூழப்பட்ட யமனைப் போல் பராக்கிரமசாலிகளான வீரர்களுடன் வருகிறான். இந்தப் பாபி இன்று என் கண்ணில் பட்டது நல்லது தான். சீதையை அபகரித்ததால் உண்டான கோபத்தை இதுவரையிலும் அடக்கி வந்தேன். இப்பொழுது அதை இவன்மேல் பிரயோகிக்கிறேன்" என்று சொல்லி ரகுவீரன் பிரசண்ட கோதண்டத்தை வளைத்து நாணோசை செய்து ஒரு சிரேஷ்டமான பாணத்தை சித்தம் செய்து, லட்சுமணனுடன் ராவணனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தசமுகன் தன்னைச் சுற்றியிருந்த ராக்ஷஸர்களைப் பார்த்து, "நீங்கள் சகல கவலைகளையும் விட்டு லங்கையின் உட்கோட்டை வாசல்களையும் கோபுரங்களுக்குப் பக்கங்களில் படைகளுக்காகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளையும் கோபுரங்களையும் ஜாக்கிரதையாகக் காத்துக் கொண்டிருங்கள். நீங்கள் என்னுடன் இங்கே வந்திருப்பதாய் நமது எதிரிகளுக்குத் தெரிந்தால், லங்கையில் நுழைந்து அங்குள்ளவர்களை ஜெயித்து அதைப் பிடித்து விடுவார்கள்" என்று அவர்களை அனுப்பிவிட்டு, ஒரு திமிங்கலம் கொந்தளிக்கும் கடலை அலட்சியமாகக் கிழித்துக்கொண்டு செல்வது போல், வானர படையை இருபுறத்திலும் பிளந்து தள்ளிக் கொண்டு சென்றான். ஜொலிக்கும் வில்லையும் பாணங்களையும் கையிலெடுத்துக் கொண்டு, வானர படையை நாசம் செய்வதற்குக் காலபாசத்தை ஏந்திவரும் யமனைப்போல்வரும் தசக்ரீவனைக் கண்டு, சுக்ரீவன் ஒரு மலைச் சிகரத்தைப் பெயர்த்து அவனை நோக்கி ஓடிவந்து அதை அவன் மேல் எறிந்தான். பெரிய மரங்களுடனும் மலையருவிகளுடனும் விளங்கும் அந்தச் சிகரம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, தன்னுடைய பாணங்களால் தசக்ரீவன் அதைத் தூளாக்கி, பெரிய பாம்பினைப்போல் சீறிக்கொண்டு, மஹேந்திரனுடைய வஜ்ரத்தைப் போல் அதிவேகத்துடன், அந்தகனைப்போல் சகல வஸ்துகளையும் நாசம் செய்யக்கூடியதாய், நெருப்புப் பொறிகள் பறக்கும் அக்னியைப் போல் ஜொலிக்கும் பாணத்தை எடுத்து வானர ராஜனைக் கொல்வதற்காகப் பிரயோகித்தான்.சுப்ரஹ்மண்யரால் கிரௌஞ்ச பர்வதத்தின் மேல் பிரயோகிக்கபட்ட சக்தியைப்போல் அந்தப் பாணம் சுக்ரீவனுடைய தேகத்தைப் பிளந்து ஊடுருவி சென்றது. அந்த உபத்திரவத்தைப் பொறுக்காமல் வானரராஜன் புத்தி சிதறி அலறிக்கொண்டு பூமியில் விழுந்தான். அவன் பிரக்ஞையற்றுக் கிடந்ததைக் கண்டு ராக்ஷஸர்கள் சந்தோஷத்தால் கர்ஜித்தார்கள். உடனே கவாக்ஷன், கவயன், சுதம்ஷ்ட்ரன், ரிஷபன், ஜ்யோதிர்முகன், நளன் என்ற வானர வீரர்கள் மலைகளைப் பெயர்த்துக் கொண்டும், தேகங்களைப் பெருக்கிக் கொண்டும் தசக்ரீவனை எதிர்த்தார்கள். அவன் கூர்மையான பாணங்களால் அவர்களுடைய அடிகளை வீணாக்கி, விசித்திரமான தங்கக் கட்டுகளுடைய வேறு பாணங்களால் அவர்கலைப் பிளந்தான். அவர்கள் புத்தி சிதறி கைகால்களை உதறிக்கொண்டு பூமியில் விழ, ராவணன் வானர படையை அம்பு மழையால் மறைத்தான். தசக்ரீவனுடைய பாணங்களால் அடிபட்டு உபத்திரவத்தைத் தாங்காமல் சிலரும், பயமென்ற பாணங்களால் அடிபட்டுக் கதறும் சிலரும், ராக்ஷஸாதிபதியின் வேகத்தால் பூமியில் அடிபட்டு விழும் சிலரும், வனத்தில் சஞ்சரித்துக் கொண்டு அதுவரையில் அடி பட்ட சத்ருக்களையும் ஆயுதங்களையும்பார்க்காததால் மிரண்டு கூச்சலிடும் சிலரும் சர்வ லோகங்களும் சரணமடையும் ராமமூர்த்தியைக் கதியென்று அடைந்தார்கள். (நீக்க முடியாத துக்கமே சரணாகதிக்கு ஹேதுவாகும். தேசம், காலம், அதிகாரி, பலம், நியமம் முதலியவைகளை விசாரிக்க வேண்டியதில்லை.)

சரணாகதியின் தாரதம்யத்தை அறிந்த சரண்யன், உடனே வில்லை எடுத்து நாணெற்றி, ராவணனை எதிர்த்துச் சென்றார். ஆர்த்தப்பிரபத்திக்கு (அபாயத்திலிருந்தாவது கஷ்டத்திலிருந்தாவது தன்னை நீக்கும்படி சரணமடைவது) உடனே பலனைக் கொடுக்க வேண்டியதாகையால், ஒருவேளை லட்சுமணன் தம்மை கேட்காமலேயே போருக்குப் போய்விடுவானோ என்று தானே வில்லும் கையுமாகப் போகப் புறப்பட்டார். தன்னை ஆச்ரயித்தவர்களை ரக்ஷிப்பதற்கு அதி வேகமாகச் செல்லும் ராமனை, லட்சுமணன் கைகூப்பிப் போகும் வழியில் மறித்துப் பிரார்த்தித்தார். ராமனுக்கு சகலவித கைங்கர்யத்தையும் செய்வதாய் பிரதிக்ஞை செய்து, அதனால் கிடைத்த கைங்கர்ய லட்சுமியுடைய இளையபெருமாள், தன் பிரார்த்தனையை அங்கீகரிப்பதற்காகக் கைகூப்பினார். (சர்வசேஷியானா பகவானுடைய கைங்கரியமே சேஷ பூதர்கலான ஜீவர்களுக்குப் பரமப் பிரயோஜனம்.) "அண்ணா! தங்களுடைய பாரியையே அபகரிக்கத் துணிந்த இந்தத் துர் ஆத்மாவைத் தாங்களே கொல்லவேண்டியது. அது தங்களுக்கு ஒரு பொருட்டல்ல.ஆனால் அளவற்ற பலபராக்கிரமங்களால் விளங்கும் தாங்கள் இந்த அற்ப ராக்ஷஸனுடன் யுத்தம் செய்வது அழகல்ல. உத்திரவானால் நான் இவனை வதம் செய்கிறேன்" என்றார். (உனக்குச் சக்தியிருந்தால் போகக்கூடாதோ என்றால், சேஷபூதனான நான் சர்வசேஷியான தங்களுடைய உத்தரவில்லாமல் ஒரு காரியத்தைச் செய்வது என் பரதந்த்ர ஸ்வரூபத்திற்கு ஹானியை உண்டாக்கும்.) அதற்கு ராமன், "அப்படியானால் போ, எதிரியை அலட்சியம் செய்யாதே. யுத்தம் செய்வதற்கு ஆவல் கொண்டிருப்பதைப் போல் வெகு ஜாக்கிரதையாய் இரு.ராவணனோ மஹாவீரன். அற்புதமான பராக்கிரமத்தை உடையவன். ஓர் அஸ்த்திரத்தை எடுப்பவன் போலக் காட்டி வேறோன்றை எடுக்கிறான். அதைத் தொடுபவன் போல் காட்டி வேறொன்றை விடுக்கிறான். இவன் கோபம் கொண்டால் மூன்று லோகத்திலுள்ளவர்களும் இவனுக்கெதிரில் நிற்கமுடியாது. ஆகையால், அவனுடைய குறைகளை நன்றாகக் கவனித்தறிந்து உன் குறைகளை நீக்கிக்கொள். உன் வில்லாலும் பார்வையாலும் உன்னை ஜாக்கிரதையாகக் காப்பாற்றிகொள்" என்றார். லட்சுமணன் ரகுவீரனை ஆலிங்கனம் செய்து பிரதக்ஷிண நமஸ்காரங்களுடன் உத்திரவு பெற்றுக்கொண்டு யுத்தத்திற்குச் சென்றார். அங்கே ராவணன் காந்தியால் ஜொலிக்கும் வில்லை வளைத்துச் சரமாரிகளால் வானர படையை மறத்து, கண்டம்துண்டம் செய்வதைக் கண்டார்.

அதற்குள் ஆஞ்சனேயர் ஓடிவந்து, "இதென்ன அநியாயம்! சேவகனான நானிருக்கத் தாங்கள் இப்படி வரலாமா?" என்று முறையிட்டு, பாணக் கூட்டங்களைத் தடுத்து இராவணன்மேல் பாய்ந்தார். அவனுடைய தேரினருகில் சென்று வலது கையை ஓங்கி ராவணனைப் பயமுறுத்தி, "தேவ தானவ கந்தர்வ யக்ஷர்களை நீயும் உன் ராக்ஷஸர்களும் முறியடித்திர்கள். ஆனால் வானரர்களிடத்திலிருந்து உனக்கு மித்ருவென்பதை ஏன் அற்யாய்? இதுவரையிலும் உன்னைப் பிழைக்கும்படி விட்டதே தவறு. இதோ பார், ஐந்து கிளைகளுள்ள மஹா விருக்ஷத்தைப் போன்ற என் வலது கை உன் பிராணனை வாங்கப் போகிறது" என்றார். அதற்கு ராவணன், கோபத்தால் விழிகள் சிவந்து, நிகரற்ற பராக்கிரமத்தால் இடிபோல் சிரித்து, "அடே, குரங்கே! சீக்கிரமாய் அடி. தயங்காதே. ராவணனை எதிர்த்து அடித்தேனன்ற கீர்த்தியை அடைய விரும்புகிறாய். அதை ஏன் கெடுக்கவேண்டும்? அதனால் உன் பலத்தை அறிந்து அதற்கு தகுந்த பலத்தை உபயோகித்து உன்னைக் கொல்வேன்" என்றான்.அதற்கு மாருதி, "அடே, துஷ்டா, நீ என்னைக் கொல்வதிருக்கட்டும். உன் புத்திரனான அக்ஷனை நான் கொன்றது பொய்யல்லவே" என்றார். அதைக் கேட்டு மஹாதேஜஸ்வியான ராவணன் வாயுபுத்ரனுடைய மார்பில் ஓங்கி அறைந்தான். அதனால் ஹனுமான் பல தடவை நடுங்கி ஒரு முகூர்த்தம் அசைவற்று நின்றார். பிறகு மஹா புத்திமானாகையால் தைரியப்படுத்திக் கொண்டு, கடுங்கோபத்துடன் தசமுகனைக் கையால் அறைந்தார். அதனால் தசக்ரீவன் மலைகள் பூகம்பத்தால் நடுங்குவதுபோல் நடுங்கினான். அதைக்கண்டு ரிஷிகளும், வானரர்களும், சித்தர்களும், தேவர்களும், அசூரர்களும் சந்தோஷத்தால் கோஷித்தார்கள்.பிறகு ராவணன் கொஞ்சம் சிரமம் தீர்ந்து, "அடே, குரங்கே! நல்லது. உன் வீரியத்தை மெச்சினேன். நீ எனக்குத் தகுந்த சத்ருவே" என்றான். அதற்கு ஆஞ்சனேயர், "என் வீரியத்தை சுடவேண்டும். என்னிடம் அடிபட்டும் நீ இன்னும் பிழைத்திருக்கிறாயே! நான் கொடுத்த அடி உன்னைக் கொல்லாதபொழுது அதைப் புகழ்வது எப்படி? இன்னும் ஒரு தடவை அடி. பார்ப்போம். வீண்பெருமை பேசாதே. பிறகு இந்த முஷ்டியால் உன்னை யமலோகத்திற்கு அனுப்புகிறேன். துஷ்டா! முன்பு கொஞ்சம் கவனிக்காமல் இருந்ததால் நீ பிழைத்தாய். இப்பொழுது தப்பமாட்டாய்" என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டு ராவணனுக்குக் கோபம் ஜொலித்தது. கண்கள் சிவக்க வலது கையை மடக்கிக்கொண்டு தன் பூர்ண பலத்துடன் மாருதியை மார்பில் குத்தினான். மறுபடியும் மார்பில் அடிக்கப்பட்டு ஹனுமான் கிடுகிடென்று நடுங்கினார். மஹா பலவானான ஆஞ்சனேயர் புத்தி கலங்கி நிற்பதை ராவணன் கண்டு, நீலனிருக்கும் இடத்திற்கு தேரினைச் செலுத்தினான்.

காலஸர்பங்களைப் போன்ற பாணங்களால் அவனுடைய உயிர் நிலைகளைப் பிளந்து, பிரதாப லங்கேசுவரன் வானர சேனாதிபதியை எதிர்த்தான். நீலன் மிகவும் வருத்தமடைந்து ஒரு கையால் பாணங்களைத் தடுத்து, மற்றொரு கையால் ஒரு பர்வத சிகரத்தைப் பிடுங்கி ராவணன் மேல் எறிந்தான். தேஜசிலும் புத்தியிலும் தைரியத்திலும் விஷேஷித்த ஹனுமான், அதற்குள் சிரமம் தீர்ந்து யுத்தம் செய்ய விரும்பி, நீலனுடன் ராவணன் யுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ரோஷம் கொண்டு, "அடே ராக்ஷஸ! நீ வெறு ஒருவனுடன் யுத்தம் செய்து கொண்டிருப்பதால் உன்னை இந்தத் தடவை விட்டேன்" என்றார். தசமுகன், தன்மேல் விழும் பாறையை ஏழு கூர்மையான பாணங்களால் தூளாக்கினான். அதைக் கண்டு நீலன் பலவித புஷ்பித்த மரங்களை வேருடன் பிடுங்கித் தசக்ரீவனை அடித்தான். ராக்ஷஸாதிபதி அவைகளைப் பாணங்களால் துண்டித்து நீலனைக் கோரமான சரமாரியால் துளைத்தான். மேகங்கள் பொழியும் பர்வதத்தைப்போல் நீலன் அசைவற்று நின்று, தன் ரூபத்தைச் சுருக்கிக் கொண்டு ராவணனுடைய த்வஜத்தின் நுனியில் குதித்தான். அதைக் கண்டு ராவணன் கோபத்தால் ஜொலிக்க, நீலன் கர்ஜித்தான். தவஜத்தின் நுனியிலும் வில்லின் நுனியிலும், கிரிடத்தின் நுனியிலும் நீலன் அலட்சியமாய் சஞ்சரிப்பதைக் கண்டு, ராம லட்சுமணர்களும் மாருதியும் ஆச்சரியம் அடைந்தார்கள். ராவணன் அந்த வானர வீரனுடைய லாவகத்தையும் சாதுர்யத்தையும் மெச்சி, ஜொலிக்கும் ஓர் அற்புதமான ஆக்னேயாஸ்திரத்தை எடுத்தான். நீலனுடைய வேகத்தால் ராவணன் திகைத்திருப்பதைக் கண்டு வானரர்கள் சந்தோஷத்தால் கூச்சலிட்டார்கள். அதனால் தசமுகன் இன்னும் புத்தி சிதறி ஒன்றும் தோன்றாமல் இருந்தான். பிறகு ஒரு பாணத்தில் ஆக்னேய மந்திரத்தை ஜபித்து த்வஜத்தின் நுனியிலிருக்கும் நீலனைப் பார்த்து, "குரங்கே! உன்னுடைய வேகத்தாலும் லாவகத்தாலும் மாயையால் பல ரூபங்களை எடுப்பவன் போல் காட்டுகிறாய். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ செய்யும் தந்திரங்கல் வீணாகும். இதோ என் கையிலிருக்கும் பாணம் உன் உயிரை வாங்கப் போகிறது. சக்தி இருந்தால் உன்னைக் காப்பாற்றிக்கொள்" என்று அதட்டி, அந்த ராக்ஷஸ வீரசிகாமணி நீலன்மேல் ஆக்னேயாஸ்திரத்தைப் பிரயோகித்தான். வானர சேனாதிபதி அஸ்த்திரத்தால் மார்பில் அடிபட்டு, தேகமெங்கும் எரிக்கப்பட்டு பதைபதைத்து பூமியில் சாய்ந்தான். தான் மஹா தேஜஸ்வியானதாலும் தன் பிதாவான அக்னி பகவானுடைய கிருபையாலும் மரனமடையாமல் பூமியில் முழங்காலை ஊன்றிக்கொண்டு விழுந்தான்.

நீலன் பிரக்ஞையற்றுக் கிடப்பதைக் கண்டு ராவணன் யுத்த ஆவேசம் கொண்டு, காளமேகங்களைப் போல் கர்ஜிக்கும் ரதத்தை லட்சுமணன் இருக்கும் இடத்திற்குச் செலுத்தினான். சுக்ரீவன் முதலிய வானர வீரர்கலை விலக்கிக் கொண்டு, ஸைன்யத்திற்கு நடுவில் ஜொலித்துக் கொண்டு, வில்லைச் சுழற்றி வளைத்து நாண் ஏற்றிப் பூமி நடுங்கும்படி டங்காரம் செய்தான். அபார சத்வமுள்ள லட்சுமணன் அதைக் கண்டு, ராக்ஷஸ ராஜனே! இந்த வானரர்கள் உன்னுடன் யுத்தம் செய்யத் தகாதவர்கள். என்னிடத்தில் வா. வேறெங்கும் போகாதே" என்றார். அந்த வார்த்தைகளையும் அவருடைய சிம்ம நாதத்தையும் உக்கிரமான நாணோசையையும் கேட்டு, தசானன் லட்சுமணனைக் கிட்டிக் கோபாம் தாளாமல், "புத்தி மயங்கி மரணத்தை விரும்பி இன்று என் கண்ணில் பட்டாய். நல்லது இதோ என் பாணங்களால் உன்னைத் துண்டித்து யமலோகத்திற்கு அனுப்புகிறேன், பார்" என்றான். வெண்மையான கோரப்பற்கள் தெரியும்படி கர்ஜிக்கும் அந்த ராக்ஷஸ வீரசிரேஷ்டனைப் பார்த்து லட்சுமணன் கொஞ்சம்கூட கலங்காமல், "ராக்ஷஸ ராஜனே! விசேஷ ப்ரதாபமுள்ளவர்கள் தங்களைப் புகழார்கள். நீ மஹா பாபியானதால் வீண் பெருமை பேசி கர்ஜிக்கிறாய். உன் வீரியத்தையும் பலத்தையும் பராக்கிரமத்தையும் நானறியனோ? ஒருவரும் இல்லாத பொழுது சன்யாசி வேஷம் பூண்டு சீதையை அபகரித்த மஹா வீரனல்லவா! இதோ வில்லும் கையுமாய் எதிரில் வந்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறாய், பார்ப்போம். வீணாய்ப் பிதற்றாதே" என்றார். அதனால் கோபம் கொண்டு தசமுகன் ஏழு கூரான பாணங்களால் லட்சுமணனை அடிக்க அவர் அவைகளைத் துண்டித்தார். அதனால் அதிக கோபங்கொண்டு கூர்மையான வேறு பாணங்களைப் பிரயோகித்தான்.லட்சுமணனும் உக்கிரமாய்ச் சரமாரி பொழிந்து அர்த்தசந்திரம், பல்லம், கற்னி முதலிய பாணங்களால் ராவணனுடைய சரங்களை அறுத்தார். அதைக் கண்டு லங்காதிபதி லட்சுமணனுடைய லாவகத்தை மெச்சி வேற் பாணங்களைப் பிரயோகித்தான். லட்சுமணன் கூர்மையாயும் வஜ்ராயுதத்தைஒ போன்ற வேகமுடையவைகளாயும் நெருப்பைப் போல் காந்தி உடையவைகளாயும் இருக்கும் உத்தமமான பாணங்களை வில்லிற் பூட்டித் தசமுகனைக் கொல்வதற்காக விடுத்தார். ராவணன் அவைகளைத் துண்டித்து, பிரம்மா தனக்குக் கொடுத்த ஒரு காலாக்னியைப் போன்ற காந்தியுள்ள பாணத்தால் இளையபெருமாளை நெற்றியில் அடித்தான். அதனால் வில்லை நழுவவிட்டு நடுங்கினார். பிறகு பிரக்ஞை தெளிந்து, ராவணனுடைய வில்லை ஒடித்து மூன்று பாணங்களால் அவனை அடித்தார். தசமுகன் அந்த வேகத்தால் வருந்தி நடுங்கிப் பிறகு பிரக்ஞை யை அடைந்தான். இப்படி வில்லிழந்து, பாணங்களால் துளைக்கப்பட்டு, தேகமெங்கும் கொழுப்பும் ரத்தமும் பெருக திறமை வாய்ந்த லங்கேச்வரன், தனக்கு முன்பு பிரம்மாவால் கொடுக்கப்பட்ட சக்தியென்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தான். வானரப் படை அதைக்கண்டு நடுங்கிற்று. புகையற்ற நெருப்பைப் போல் ஜொலிக்கும் அந்த ஆயுதத்தை ராவணன் லட்சுமணனைக் கொல்ல உத்தேசித்துப் பிரயோகித்தான். ராமானுஜன் அதைக் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்ற அனேக பாணங்களால் அடித்தார். அப்படியும் அவருடைய விசாலமான மார்பில் அது ஊடுருவிச் சென்றது. அபார சக்தியுள்ள இளையபெருமாள் ராவணனுடைய சக்தி ஆயுதத்தால் அடிக்கப்பட்டு, நெருப்பு ஜ்வாலைகளால் சூழப்பட்டு பிரக்ஞையற்று அசைந்தார். உடனே ராவணன் பாய்ந்து இருபது கைகளாலும் அவரைத் தூக்கி எடுக்கப் பார்த்தான்.

லோகத்தில் தைரியதிற்கு உபமானமாய்ச் சொல்லப்படும் ஹிமய பர்வதத்தைத் தூக்கி எடுக்கலாம். ராவணன் அதில் ஒரு பாகமான கைலாஸத்தைப் பெயர்த்திருக்கிறான் அல்லவா? சமுத்திரங்களுக்கு பிரதானமான க்ஷீராப்தியைக் கடைவதற்குத் தகுந்ததென்று நினைக்கப்பட்ட மந்த்ர பர்வதத்தையும் புஜங்களால் எடுக்கலாம். அதைக் கடைந்த தேவ அசூரர்களையும் பல தடவை லங்காதிபதி ஜெயித்திருக்கிறான் அல்லவா? சகல குலபர்வதங்களுக்கும் நடு நாயகமான மேருவைப் பெயர்த்து எடுக்க முடியும். வாயு பகவான் அதன் சிகரத்தை அடித்து லங்கையை சூழ்ந்த சமுத்திரத்த்ல் தள்ளிவிட்டாரல்லவா? அந்த வாயு பகவான் ராவணனுக்குப் பயந்திருக்கிறார். ஐம்பது கோடி விஸ்தீரணமுள்ள மூன்று லோகத்தையும் பெயர்த்தெடுக்க முடியும்.அதில் ஒரு பாகமான பூமியைக் கும்பகர்ணனுடைய முன் பிறப்பான ஹிரண்யாக்ஷன் புஜத்தின் கீழ் வைத்துக் கொண்டு போகவில்லையா? மூன்று லோகங்களையும் ஆலும் தேவர்களுடன் அவைகலைத் தூக்கவும் முடியும். அவர்களுக்கு அதிபதியான இந்திரனைத் தன்னுடைய புத்திரனே ஜெயித்துச் சிறையில் வைத்திருக்கிறான். ஆனால், ராமனுடைய தம்பியான பரதனுக்குத் தம்பியாய், விஷ்ணுவின் நாலிலொரு அம்சமான இளையபெருமாளைத் தூக்கி எடுக்கவாவது அசைக்கவாவது ராவணனனால் முடியவில்லை. இரண்டு புஜங்களால் கைலாசத்தை அசைத்த ராவணன் இருபது கைகளாலும் லட்சுமணனை அசைக்க முடியவில்லை. தசமுகனும் அவனுடைய பரிவாரங்களும் ஒன்று சேர்ந்தும் முடியவில்லை.

பிரம்மாவால் அனுக்ரஹிக்கப்பட்ட சக்தியால் மார்பில் லட்சுமணன் அடிக்கப்பட்டு, தன் மனதிற்கெட்டாத விஷ்ணுவின் அம்சமான ஸ்வரூபத்தை ஞாபகப்படுத்திக் கொண்டார்.

தானவர்களுடைய கொழுப்பையடைக்கும் ராமானுஜனை ராவணன் புஜங்களால் நெடு நேரம் புரட்டிப் பார்த்தும் அசைக்க முடியவில்லை. மனுஷ்ய தேகத்தில் அவதாரம் செய்த விஷ்ணுவின் அம்சமல்லவா? (அவயவமில்லாத விஷ்ணு ஸ்வரூபத்திற்கு அம்சமுண்டோ என்றால், ஸ்வரூபத்திற்கு அப்படி இல்லாவிட்டாலும், குணங்கள் வெளிப்படுவதில் விளங்கும் தாரதம்யத்தால் அம்சங்களின் பேதம் இருப்பது போல் காணப்படுகிறது)

பிறகு ஆஞ்சனேயர் கோபம் கொண்டு ராவணன் மேல் பாய்ந்து வஜ்ரத்தைப் போன்ற முஷ்டியால் தசமுகனுடைய மார்பில் குத்தினார். அந்த வேகத்தால் ராக்ஷஸதிபதி தேர்த்தட்டில் முழங்காலை ஊன்றிக் கொண்டு கிடுகிடென்று நடுங்கி விழுந்தான். வாயாலும், நேத்திரங்களாலும், செவிகளாலும் ரத்தம் பெருகிற்று. கொஞ்ச காலம் பிரமித்தாற்போல் இருந்து அசைவற்று தேர்த்தட்டில் சாய்ந்தான். பிறகு பிரக்ஞையற்று மூர்ச்சை அடைந்தான். சற்றுத் தெளிந்தும் ஸ்திரமாய் நிற்க முடியவில்லை. பயங்கரமான பராக்ரமுள்ள ராவணன் யுத்தத்தில் பிரக்ஞையற்றதைக் கண்ட ரிஷிகளும், வானரர்கலும், தேவர்களும், இந்திரனும் சந்தோஷத்தால் கூச்சலிட்டார்கள். ராவணனால் உபத்திரவத்தை அடைந்த லட்சுமணனை மஹா தேஜஸ்வியான ஆஞ்சனேயர் புஜங்களால் தூக்கியெடுத்து ராகவன் இடத்தில் கொண்டு போய் வைத்தார். ராவணனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும் அசையாத ராமானுஜன், ஆஞ்சனேயருடைய அனுகூலமான ஹிருதயத்தாலும் எல்லையற்ற பக்தியாலும் ஒரு குரங்கிற்கு வசப்பட்டு அதிக லேசானார். (லட்சுமணன் மூர்ச்சை அடைந்திருந்தும் அவருக்கு ஞானமும் சக்தியும் குறைவில்லை என்பதால், ராம லட்சுமணர்கள் அந்தந்த சமயங்களில் அக்க்னானத்தாலும் அசக்தியாலும் வருந்துகிறவர்கள் போல் காணப்படுவதும் பேசுவதும் மனுஷ்யபாவனையை அனுசரித்துச் செய்தவையென்று நினைக்கவேண்டியது. பகவான் கேவலம் ராக்ஷஸ வதத்திற்காகவே மனித அவதாரம் செய்ததல்ல. லோகத்தார்க்கு தர்மங்களை அனுஷ்டித்துக் காட்டுவதற்காகவும் ஏற்பட்டது.இல்லாவிட்டால் சர்வக்ஞனும் சர்வேச்வரனும் ஆனந்த சொரூபியான பகவானுக்கு சீதையையும் லட்சுமணனையும் விட்டுப் பிரிந்ததால் துக்கம் ஏது?- சுகர்) அந்த சதி ஆயுதமும் லட்சுமணன் யுத்தத்தில் ஜெயிக்க முடியாதவர் என்று கண்டு அவரை விட்டு ராவணனுடைய தேரில் தான் இருக்குமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. சகல விரோதிகளையும் இடையூறுகளையும் நாசம் செய்யும் சுபாவமுள்ள விஷ்ணுவின் மனத்திற்கெட்டாத அம்சமான தன் சொரூபத்தை ஞாபகப்படுத்திக் கொண்டதால் லட்சுமணன் பிடக்*ஞை தெளிந்து, காயம் ஆறி முன் போலானார்.

மஹாதேஜஸ்வியான ராவணனும், மூர்ச்சை தெளிந்து, வில்லை வளைத்துக் கூர்மையான பாணங்களால் வானரர்கலை உபத்திரவித்தான். வானர வீரர்கள் மடிவதையும் படை மூலைக்கு மூலை ஓடுவதையும் ராகவன் கண்டு ராவணனை நோக்கி ஓடி வந்தார். அப்பொழுது ஹனுமான் அவரை நமஸ்கரித்து, "சுவாமி! என் முதுகின் மேலேறிக் கொண்டு, மஹாவிஷ்ணு எல்லையற்ற பகவானான கருடன் மேலேறி அசூரர்களை ஸம்ஹரித்தது போல ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்யுங்கள்" என்று பிரார்த்தித்தார். ரகுவீரனும் அப்படியே செய்து, ராவணன் தேரில் இறுமாந்து உட்கார்ந்து இருப்பதைக் கண்டு கோபப் பரவசராய், பூர்வத்தில் மஹாவிஷ்ணு பலியை ஸம்ஹரிக்க வந்தது போல், கோதண்டத்தை வளைத்து இடிபோல் நாணோசை செய்து, லங்கேசுவரனை நெருங்கி வெகு கம்பீரமாய், "ராக்ஷஸ வீர சிரேஷ்டனே! நில், நில், ஓடாதே. என் பிரிய பாரியையான சீதையை அபகரித்து என் கோபத்திற்காளான பிறகு, எங்கே போய் தப்புவாய்? இந்திரன், யமன், சூரியன், பிரம்மா, அக்னி, சங்கரன் முதலியவர்களை அண்டினாலும் பத்துத் திக்குகளிலும் ஓடி ஒளிந்தாலும் என் கண்ணில் பட்ட பிறகு உன் உயிர் தப்புமா? உனக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மித்ருவைப் போன்ற என் தம்பி இதோ வந்துவிட்டான். நீ அவனைச் சக்தியால் அடித்துக் கொல்லப் பார்த்தாயோ? அவனை மூர்ச்சை அடையும்படி செய்தோமென்று துள்ளாதே. லட்சுமணன் என்னை அடிக்க முடியவில்லையே, உன்னால் ஆகுமா? என்றால் இதோ இருக்கும் அற்புதமான பாணங்களால் ஜனஸ்தானத்தில் வசித்த பதிநான்காயிரம் ராக்ஷஸ வீரர்களையும் கரன், தூஷனன், த்ரிசிரஸ் முதலியவர்களையும் ஒரு முகூர்த்தத்தில் சம்*ஹரித்ததை அறியாயோ?" என்றார். அதைக்கேட்டு லங்கேச்வரன் மஹாவீரியவானான ஆஞ்சனேயரைக் காலாக்னியின் கொழுந்துகளைப் போன்ற கூர்மையான பாணங்களால் அடித்தான். தன்னைக் குத்தித் தள்ளிவிட்டு ராமனைச் சுமந்து வருகிறானென்று கோபம் கொண்டு ராவணன் பாணங்களால் மாருதியைத் துளைக்க துளைக்க, அவருடைய சுபாவமான தேஜஸ் விருத்தியாயிற்று. தசமுகனால் தேகமெங்கும் காயம்பட வாயுபுத்திரனைப் பார்த்து ராமனுக்கு அடங்காத கோபமுண்டாயிற்று. உடனே ராவணனுடைய ரதத்தையும், சக்கரங்களையும், த்வஜத்தையும், குடையையும், கொடிகளையும், ஸாரதியையும், ஆயுதங்களையும், பாணங்களால் நாசம் செய்தார். இந்திரன் வஜ்ராயுதத்தால் மேருபர்வதத்தை இடிப்பது போல், ரகுனாதன் வஜ்ரத்தையும் இடியையும் போன்ற ஒரு பாணத்தால் ராவணனுடைய அகன்ற அழகான மார்பில் அதிவேகமாய் அடித்தார். முன்பு வஜ்ரத்தாலும் இடியாலும் கலங்காமல் அசையாமல் இருந்த தசக்ரீவன், ராம பாணத்தால் அடி பட்டு மிகவும் வருந்தி, நடுங்கி, வில்லை நழுவ விட்டான். அவன் மூர்ச்சை அடைவதைக் கண்டு, ராமன் ஓர் அர்த்த சந்திர பாணத்தைப் பிரயோகித்து, சூரியனைப் போல் ஜொலிக்கும் அவனுடைய கிரீடத்தை அறுத்துத் தள்ளினார். (தன்னை அதுவரையில் ரக்ஷித்து வந்த வில்லை எறிந்து, தானே தன்னை ரக்ஷிக்க முடியுமென்ற அகம்பாவத்தைவிட்டு, ரகுனாதனே தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்றும் தனக்கு வேறு அடைக்கலமில்லை என்றும் ராவணன் நினைப்பதை அவனுடைய ஸ்திதியால் பகவான் அறிந்து கொண்டார். அவன் அப்படி வார்த்தைகளால் சொல்லவில்லை. ஆகையால் பரம தயாளுவான ஜகதீசன் அவன் உயிரை வாங்காமல் மானபங்கத்தை மாத்திரம் செய்து விட்டார். தலைக்கு வந்தது, தலப்பாகையுடன் போயிற்றென்ற வசனம் சரியாயிற்று. ஒருவன் தன்னை ரக்ஷித்துக் கொள்வதற்கு யாதொரு பிரயத்தனமும் செய்யாமல் பகவானை நம்பி இருப்பதே அவர் அவனை ரக்ஷிப்பதற்கு ஹேதுவாகும்.) விஷமற்ற சர்ப்பத்தைப் போலும் அணைந்த நெருப்பைப் போலும் வில்லை விட்டு எறிந்து, அணைந்த கிரணங்களையுடைய சூரியனைப் போல் பிரகாசமற்று, லட்சுமியின் களையற்று, கிரீடம் அறுபட்டுத் தீனமாய் நிற்கும் ராவணனைப் பார்த்து ராமன், "ராவண! நீ இன்று பிறரால் செய்ய முடியாத வீர செயல்களைச் செய்திருக்கிறாய். பல வானர சிரேஷ்டர்களையும் என் தம்பியையும் அடித்துத் தள்ளியிருக்கிறாய். ஆகையால் ஆயுதங்களைத் தரித்து யுத்தம் செய்வதற்கு முடியாமல் கொஞ்சம் கலைத்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். நெடு நேரம் யுத்தம் செய்து களைத்தவனைக் கொன்றாய் என்ற அபவாதத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்கே இப்பொழுது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். 'சத்துரு எதிரில் நிற்கையில் நான் எப்படிப் போவேன்' என்றால், நான் சம்மதித்து உனக்கு உத்திரவு கொடுக்கிறேன். கபட யுத்தம் செய்பவனே! உன் மாயை எல்லாம் தர்ம யுத்தம் செய்யும் என்னிடத்தில் பலிக்கவில்லையே. ராவன! யுத்தம் செய்து களைத்திருக்கிற நீ இலங்கையில் போய் இளைப்பாறி, வேறு ரதத்தையும் ஆயுதங்களையும் சம்பாதித்துக் கொண்டு நாளைக்கு வா" என்றார். அதைகேட்டு ராவணன் கர்வமும் சந்தோஷமுமற்று, வில்லொடிந்து, குதிரைகளும் சாரதியும் மடிந்து, பாணங்களால் துளைக்கப் பட்டு, கிரீடம் பிளக்கப்பட்டு, அதிவேகமாய் லங்கையில் பிரவேசித்தான்.

தேவாசுரர்களுள் பயங்கரனும் நிகரற்ற பலவானுமான தசமுகன் போன பிறகு, தேவர்களும், தானவர்களும் சந்தோஷித்துக் கொண்டாடினார்கள். பிறகு, ராமன் லட்சுமணன் மேலும், வானரர்கள் மேலும் பாய்ந்திருக்கும் பாணங்களை எடுத்துக் காயங்களை ஆற்றி சேனையை வேறிடத்திற்கு நடத்திக் கொண்டு போனார். தேவர்களுக்கு நித்ய சத்ருவான தசாணன் முறிபட்டு ஓடுவதைப் பார்த்து, தேவர்கள், பூதங்கள், திக்பாலர்கள், ஜலத்தில் வசிப்பவர்கள், ரிஷிகள், உரகர்கள் மற்றும் பூமியில் வசிப்பவர்கள் முதலிய யாவரும் கவலையற்று "மஹாபாபியான ராவணன் ராமனால் தோல்வி அடைந்தான். இனி அவனுக்கு மரணமும், நமது கஷ்டங்கள் தீரும் காலமும் சமீபித்துவிட்டது" என்று ஆனந்தித்தார்கள்.

தஸ்மிந்த் ப்ரபிந்நே த்ரிதசெந்த்ர சத்ரௌ
ஸூராஸூரா பூதகணா திசச்ச
ஸஸாகரா: ஸர்ஷி மஹோரகாச்ச
ததைவ பூம்யம்பு சராச்ச
ததைவ பூம்யபு சராச்ச ஹ்ருஷ்டா: !!

யுத்த காண்டம் சர்க்கம்  59   நிறைவு பெற்றது.


(((((((((((((((((((((((((((( ஸ்ரீ ராம ராம ராம ))))))))))))))))))))))))))) 

Friday, May 6, 2011

3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க


=================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம்: ஸர்க்கம் 73
=================================================================


உமா ஸம்ஹிதா

கன்யார்தீ ச வடு: கன்யாப்யனுருப வரார்த்தி நீ !
ஸீதாவிவாஹ ஸர்கம் து படேத் ப்ராத: ப்ரயத்னத: !!
கவ்யம் நிவேதயேத் க்ஷிரம் ஸத்யோ துக்தம் ஸீசிஸ்தலே!




கல்யாணமாகாமலிருப்பது, கல்யாணமான தம்பதிகள் மனக்கசப்பினால் பிரிந்திருப்பது, நியாயமான முறையில் வாழ்க்கைக்கு இன்றியமையாத சில சுகண்கள் கிட்டாமற்போவது போன்றவை நீங்கி, தம் கோரிக்கை பூர்த்தியாவதற்கு, 'ஸீதா கல்யாண' கட்டமுள்ள பால காண்டம் 73-வது ஸர்க்கத்தைக் காலையில் பாராயணம் செய்யவேண்டும்.


நிவேதனம்: அப்போது கறந்த பசும்பால்.


ஸங்கல்பம்
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதசத்ருக்ன ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாதேன
...நாம்ன்யா:கன்யாயா: ...நாம்ன: வரஸ்ய
சீக்ரமேவ விவாஹஸித்யர்த்தம் ஸ்ரீ ஸீதா
விவாஹாத்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட
பாராயணம் அஹம் கரிஷ்யே!


ஸர்க்கம் 73
ஸீதா விவாஹம்


யஸ்மிம்ஸ்து திவஸே ராஜா சக்ரே கோதானமுத்தமம்!
தஸ்மிமஸ்து திவஸே ஸூரோ யுதாஜித் ஸமுபேயிவாந்!!


எந்தத் தினத்தில் தசரதர் தன் புத்திரர்களுக்கு விரத ஸமாவர்த்தனம் செய்தாரோ அன்று கேகய ராஜபுத்திரனும் பரதனுக்கு மாமனுமான யுதாஜித் மிதிலைக்கு வந்து தசரதரைக் கண்டு க்ஷேமம் விசாரித்து, "மஹாராஜா! தாமும் இன்னும் யாருடைய க்ஷேமத்தைக் கோருகின்றிர்களோ அவர்களும் சௌக்கியமென்று கேகயாதிபதி வெகுப்பிரீதியுடன் தெரிவிக்கிறார். என் சகோதரியின் மகனைப் பார்க்கவிரும்பி அயோத்யைக்கு வந்தேன். நீங்களெல்லோரும் விவாஹ காரியமாய் மிதிலைக்கு போனதாகக் கேள்விப்பட்டு இங்கே மிக வேகமாக வந்தேன்" என்றார். தனக்கு வெகு பிரியமான தன் மைத்துனனைக் கண்டு தசரதர் சந்தோஷித்துத் தகுந்தபடி உபசரித்தார்.


மறு நாள் காலையில் அவர் நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு பந்து பரிவார மந்திரவர்க்கங்களுடன் மஹரிஷிகளை முன்னிட்டுக் கொண்டு யாகசாலைக்கு சமீபத்திலுள்ள விவாஹ மண்டபத்திற்கு போனார். அவருடைய குமாரர்கள் விவாஹத்திற்குப் பூர்வாங்கமான வைதிக லௌகிக காரியங்களை முடித்து வஸ்திராபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வசிஷ்டர் முதலிய மஹரிஷிகளை முன்னிட்டுத் தசரதருடைய சமீபத்தில் உட்கார்ந்தார்கள். பிறகு வசிஷ்டர் ஜனகரிடத்தில் வந்து, "ராஜசிரேஷ்ட! அயோத்யாதிபதி தன் புத்திரர்களுக்கு சகல விவாஹ பூர்வாங்கங்களை முடித்து, கன்யாதானம் செய்யும் உமது சௌகரியத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். கொடுக்கிறவரும் பெற்றுக்கொள்ளுகிறவரும் எவ்விதத்திலும் உத்தமமானவர்களாகையால் சகல க்ஷேமங்களும் உண்டாகும். இந்த சிலாக்யமான விவாஹத்தைச் செய்து உமது வார்த்தையை நிறைவேற்றும்" என்றார். உத்தம தர்மங்களை அறிந்தவரும், வெகு கம்பீர சுபாவமுள்ளவருமான ஜனகர் அதைகேட்டு, "என் அரண்மனை வாசலில் தங்களைத் தடுக்கும் காவளாளி யார்? இங்கே வருவதற்கு யாருடைய உத்தரவைக் கேட்கவேண்டும்? தங்களுடைய கிருஹத்தில் இஷ்டப்படி சஞ்சரிக்க தடையென்ன? அயோத்யை உங்களுக்கு எவ்வளவு ஸ்வாதீனமோ அவ்வளவு இந்த மிதிலையும் ஸ்வாதீனமல்லவா? விவாஹ சம்பந்தமான சகல மங்கள காரியங்களையும் என் புத்திரிகளுக்குச் செய்து முடித்தேன். கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலைகளைப்போல், அவர்கள் சகல வஸ்திராபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மங்கள வேஷத்துடன் அக்னி வேதிக்கு சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நான் சித்தமாக இருக்கிறேன். உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரண்மனையின் வாசலில் ஏன் தங்கவேண்டும்? காலதாமதமில்லாமல் வந்து விவாஹத்தை நடத்த வேண்டும்" என்றார். தசரதர் புத்திரமித்திர பந்து மந்திரி புரோகித மஹரிஷி பரிவாரங்களுடன் விவாஹ மண்டபத்தில் பிரவேசித்தார்.


ஜனகர் அவர்களுக்குத் தகுந்தபடி மரியாதை செய்து ஆஸனம் கொடுத்து, வஸிஷ்ட மஹரிஷியே! சகல லோகங்களுக்கும் பரமானந்தத்தைக் கொடுக்கும் ராமனுடைய விவாஹ மஹோத்சவத்தை தர்ம ஸ்வரூபியான தாங்களும் மற்ற ரிஷிகளும் நடத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றார். வஸிஷ்டர் அப்படியே ஆகட்டுமென்று, விசுவாமித்திரரையும், சதானந்தையும் மற்ற மஹரிஷிகளையும் முன்னிட்டுக் கொண்டு விவாஹ மண்டபத்தின் நடுவில் விதிப்படி வேதியை அமைத்து, அதைச் சந்தனம், புஷ்பம், தங்கப் பாலிகைகள், கிண்டிகள், சங்கப்பாத்திரங்கள், முளைத்த விதைகளுள்ள மடக்குகள், தூபத்தால் நிறைந்த பாத்திரங்கள், ஸ்ருக், ஸ்ருவம், மஞ்சள் கலந்த அக்ஷதைகள், நெல் பொரிகளும் அர்க்கிய ஜலமும் நிறைந்த பாத்திரங்கள் முதலியவைகளால் அலங்கரித்தார். பிறகு அதன்மேல் ஒரே அளவுள்ள  தர்பங்களைப் பரப்பி மந்திரங்களுடன் அக்னிப் பிரதிஷ்டை செய்து தம்பதிகளின் க்ஷேமத்திற்காக ஹோமம் செய்தார்.


பிறகு ஜனக மஹாராஜா சர்வாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீதையை அக்னிக்கு சமீபத்தில் ராமனுக்கெதிரில் நிறுத்தி, கௌசல்யையின் ஆனந்தத்தை விருத்தி செயும் ரகுவீரனைப் பார்த்து, "இவள் பூமியிலிருந்து கிடைத்ததால் சீதை என்று பெயருள்ளவள். நான் வெகுப் பிரீதியுடன் இவளை என் பெண்ணாக வளர்த்து, சகல தர்மங்களையும் உபதேசித்திருக்கிறேன். நீ எந்த தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புகிறாயோ அதைத் தானும் கூட இருந்து அனுஷ்டிப்பாள். இவளை நான் உனக்குப் பார்யையாகக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும். உன் கையால் இவளுடைய கையைப் பிடி. இவள் மஹா பதிவிரதையாக இருப்பாள். மஹா பாக்யசாலி: உன் நிழலைப் போல் உன்னை விட்டு பிரியாதவள்" என்று மந்திரங்களால் பரிசுத்தமான ஜலத்தை அவருடைய கையில் வார்த்தார். அப்பொழுது தேவர்களும் மஹரிஷிகளும் 'நல்லது, நல்லது' என்று கொண்டாடினார்கள். தேவதுந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின. ஆகாசத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.


பிறகு ஜனக, "லக்ஷ்மண! என்னால் கொடுக்கப்படும் ஊர்மிளையைக் காலதாமதமில்லாமல் பாணிக்கிரஹணம் செய். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும்" என்றார். பிறகு சத்ருக்கனனைப் பார்த்து, "பராக்கிரமசாலியே! சுருதகீர்த்தியைப் பாணிக்கிரஹணம் செய். நீங்களெல்லோரும் பிரம்மச்சரிய விரதத்தைப் பூர்ணமாய் அனுஷ்டித்தவர்கள். மதுரமான சுபாவமுள்ளவர்கள். கிருஹஸ்தாசிரமத்தை அனுஷ்டியுங்கள். காலதாமதம் வேண்டாம்" என்றார்.


உடனே அந்த நான்கு ராஜ புத்திரர்களும் வசிஷ்டருடைய அனுமதியால் அந்த நான்கு ராஜ புத்திரிகளைப் பாணிக்கிரஹணம் செய்தார்கள். பிறகு அவர்கள் அக்னியையும் ஜனகரையும் ரிஷிகளையும் பிரதக்ஷினம் செய்து தங்களுடைய ஸூத்திரப்படி தனியாய் அக்னிப் பிரதிஷ்டை செய்து விவாஹ ஹோமத்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் தேவதைகள் புஷ்பமாரி பெய்தார்கள். துந்துபி முதலிய வாத்தியங்களை முழங்கினார்கள். கந்தர்வகளும் அப்ஸரஸ்களும் மதுரமாய்ப் பாடினார்கள். மங்கள  வாத்தியங்களை வாசித்தார்கள். ஆனந்தமாய் நர்த்தனம் செய்தார்கள். ரகுகுல சிரேஷ்டர்களான அந்த ராஜகுமாரர்களுடைய விவாஹ காலத்தில் இவ்விதமான ஆச்சர்யங்கள் நடந்தன. இப்படி வாத்திய கோஷங்களுடன் ராஜபுத்திரர்கள் அக்னியை மூன்று தடவை பிரதக்ஷிணம் செய்து விவாஹ ஹோமத்தை முடித்து, பத்தினிகளுடன் தங்களுடைய அரண்மனைக்குப் போனார்கள். தசரத மஹாராஜா தன் பரிவாரங்களோடும் மஹரிஷிகளோடும் அவர்களைப் பார்த்துக் கொண்டே ஆனந்தப் பரவசராய்ப் பின் சென்றார்.


அதோகார்யம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகுனந்தனா: !
ராஜாப்யனுயௌ பச்யந் ஸர்ஷிஸங்க: ஸபாந்தவ: !!




பாலகாண்டம்: ஸர்க்கம் 73 நிறைவுபெற்றது.


மங்கள சுலோகத்தைக்கூறி நிறைவு செய்யவும்


ஸ்ரீராம ராம ராம

Monday, May 2, 2011

2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக



ஸ்ரீ ராமசந்த்ராய நம:
2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக
=======================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
    ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும்  ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற  யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது  போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே  கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி  வரும்  வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி,  குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை  போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய  விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து  இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும்  அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி  நிறைவு செய்யவும்.

((((((((((((((((((((((((((((((((ஸ்ரீ ராம ராம ராம))))))))))))))))))))))))))))))))

மங்கள சுலோகங்கள்

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II

காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ

சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா  I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II

Saturday, April 30, 2011

ஸர்க்கம் 25 கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸர்க்கம் 25
கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸாபநீய தமாயஸம் உபஸ்ப்ருச்ய ஜலம் ஸூசி: !
சகார மாதா ராமஸ்ய மங்களாநி மநஸ்விநீ: !!

தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு, தான் அதுவரையில் அழுது கொண்டிருந்ததால் உண்டாண அசுத்தத்தைப் போக்க ஆசமனம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு கௌசல்யை, "ரகுகுல திலக, காட்டிற்குப் போகாமல் உன்னைத் தடுக்க முடியவில்லையே. ஆகையால் போய் வா. பதிநான்கு வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வந்து முன்னோர்களின் ஆசாரப்படி ராஜ்யாபிஷேகம் செய்து கொள். எந்த தர்மத்தை நீ ப்ரீதியுடன் பூர்ணமாக அனுஷ்டிக்கிறாயோ, அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றட்டும். நாற்சந்திகளிலும் தேவாலயங்களிலும் நீ நமஸ்கரிக்கும் தேவதைகளும் மஹரிஷிகளும் காட்டில் உன்னை ரக்ஷிக்கட்டும். விசுவாமித்திர மஹரிஷியால் உனக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்திரங்கள் யாவும் உத்தம குணங்களுள்ள உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். நீ பெற்றோர்களுக்குச் செய்யும் சிச்ரூஷையும் நீ பேசும் சத்தியமும் உன்னைக் காப்பாற்றட்டும். உனக்குத் தீர்க்காயுசைக் கொடுக்கட்டும். சமித்துகள், தர்பங்கள், அக்னி குண்டங்கள், தேவ பூஜாஸ்தானங்கள், குன்றுகள், மரங்கள், செடிகள், குட்டையான மரங்கள், மடுக்கள், பக்ஷிகள், சர்ப்பங்கள்,சிம்மங்கள் உன்னைக் காப்பாற்றட்டும். சாத்யர்கள், விச்வேதேவர்கள், மருத்துவர்கள், மஹரிஷிகள், தாதாவிதாதா பூஷா பகன் அர்யமா முதலிய பன்னிரண்டு ஆதித்யர்கள், இந்திரன், யமன், வருணன், குபேரன் முதலிய லோகபாலர்கள், பக்ஷங்கள், மாஸங்கள், ருதுக்கள், வருஷங்கள், பகல், ராத்திரி, முகூர்த்தங்கள் முதலியவைகளின் அதிஷ்டான தேவதைகளும் உனக்கு எப்பொழும் மனகளைச் செய்யட்டும். தியானமும் யோகமும் வேத சாஸ்த்திரங்களில் சொல்லப்படும் தர்மமும் உன்னை நான்கு புறங்களிலும் காப்பாற்றட்டும். சனத்குமாரரும் சோமனும் பிருஹஸ்பதியும் சப்த ரிஷிகளும் நாரதரும் உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். மஹாப்பிரசித்தியுள்ள திக்பாலர்களும் நான் செய்யும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷித்து உன்னைக் காப்பாற்றட்டும். கடற்கரையில் இருக்கும் மலைகளும் சமுத்திரமும் குபேரனும் வருணனும் சொர்க்கமும் ஆகசமும் பூமியும் நதிகளும் நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் கிரஹதேவதைகளும் ராத்திரி பகல்களுக்கு அபிமானி தேவதைகளும் இரண்டு சந்தியா தேவதைகளும் உன்னைக் காப்பாற்றட்டும். ருதுக்கள், மாதங்கள், வருஷங்கள் கலைகள், காஷ்டைகளின் அதிஷ்டான தேவதைகள் உனக்கு ஷேமத்தைக் கொடுக்கட்டும். காட்டில் நீ தபஸ்வீயாக வசிக்கும் பொழுது ஆதித்யர்களும் சாத்யர்களும் உனக்குச் சுகத்தைக் கொடுக்கட்டும். ராக்ஷர்களாலும், பிசாசங்களாலும், குரூர நடத்தை உள்ளவர்களாலும், மாம்சத்தைப் புசிக்கும் ஜந்துக்களாலும் உனக்கு பயமுண்டாக வேண்டாம். வானரங்கள், தேள்கள், காட்டு ஈக்கள், கொசுக்கள், ஊரும் ஜந்துக்கள், புழுக்கள் காட்டில் உனக்குக் கெடுதி செய்யாமல் இருக்கட்டும். பெரிய யானைகள், சிம்மங்கள், புலிகள், கரடிகள், பன்றிகள், எருமைகள், பயங்கரமான காட்டுமாடுகள் இவை உனக்குத் தீங்கு செய்ய வேண்டாம். நரமாமிசத்தை தின்னும் மற்ற பிராணிகளும் நான் செய்யும் பூஜையால் திருப்தி அடைந்து உனக்குக் கெடுது செய்ய்யாமலிருக்கட்டும். நீ போகும் வழிகளில் உனக்கு க்ஷேமமுண்டாகட்டும். உன் பராக்கிரமம் வீணாகாமல் நீ உத்தேசித்த பிரயோஜனத்தை அடைவாய். நீ விரும்பும் சகல பொருள்களும் உனக்கு வனத்தில் கிடைக்கட்டும். பூமியிலும் ஆகாசத்திலும் உனக்கு உனக்கு விரோதிகளாக இருக்கும் தேவதைகளும் உனக்கு க்ஷேமத்தை உண்டாக்கட்டும். பிருஹஸ்பதி, சோமன், சுரியன், குபேரன், யமன், அக்னி,வாயு, ஹோமப்புகை, ரிஷிகளிடத்திலிருந்து நீ அப்ஸியத்த மந்திரங்கள் இவையெல்லாம் வனத்தில் நீ ஸ்*நானம் செய்யும் காலத்தில் உன்னைக் காப்பாற்றட்டும். சகல லோகத்திற்கும் பிரம்மாவும், சகல பிராணிகளையும் போஷிக்கும் நாராயணனும், மற்ற ரிஷிகளும் வனத்தி உன்னை ரக்ஷிக்கட்டும்," என்று சொன்னபின் மாலைகளாலும் கந்தங்களாலும், அவர்களுக்குத் தகுந்த ஸ்தோத்திரங்களாலும் தேவதைகளைப் பூஜித்தாள்.

பிறகு மஹாத்மாவான ஒரு பிராம்ணனால் அகியை மூட்டி ஹோமத்திற்காக நெய், சமித்துகள், வெள்ளைக் கடுகு, வெள்ளை மாலைகள் முதலியவைகளை சம்பாதித்து, ராமனுக்கு க்ஷேமம் உண்டாவதற்காக அதில் விதிப்படி ஹோமம் செய்தாள். உபாத்தியாயரும் ராமனுக்கு சகல உபத்திரவங்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாக வேண்டுமென்று ஹோமம் செய்து, மிகுந்த ஹவிஸால் ஹோமகுண்டத்திற்கு வெளியில் லோகபாலர் முதலியவைகளுக்கு பலி வைத்தார். பிராம்மணர்களுக்குத் தேன், நெய், தயிர், அக்ஷதை முதலியவைகளைக் கொடுத்து, ராமனுக்கு வனத்தில் க்ஷேம உண்டாகும்படி ஸ்வஸ்தி வாசனம் செய்வித்தாள். பிறகு உபாத்தியாயருக்கு வேண்டியவரையில் தக்ஷிணையைக் கொடுத்துக் கௌசல்யை, "குழந்தாய், தேவந்திரன் விருத்ராஸூரனைக் கொன்று சகல தேவதைகளாலும் வணங்கப்பட்ட பொழுது, அவனுக்கு உண்டான க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். கருடன் அமிருதத்தைக் கொண்டு வரப் புறப்பட்ட பொழுது அவருடைய தாயான வினதை அவருக்கு எந்த க்ஷேமத்தைப் பிரார்தித்தாளோ அது உனக்கு உண்டாகட்டும். அமிருதத்திற்காக சமுத்திரத்தைக் கடையும்பொழுது தைத்யர்களை நாசம் செய்யும் பொருட்டு இந்திரனுக்கு அதிதி எந்த க்ஷேமத்தை அனுக்ரஹித்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவற்ற தேஜஸூள்ள மஹாவிஷ்ணு லோகங்களை மூன்றடியால் அளக்கப் போகையில் அவருக்கு நேர்ந்த க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். ருதுக்களும் சமுத்திரங்களும் உனக்குப் பரம மங்களத்தைச் செய்யட்டும்", என்று அவருடைய தலையில் அக்ஷதைகளைப் போட்டு, நேர்த்தியான கந்தத்தை அவருடைய தேகத்தில் பூசி, பிரசித்தமான வீரியத்துடன் கூடின விசல்யகரணி என்ற மூலிகையை ரக்ஷையாகக் கையிற்கட்டி, அதற்குத் தகுந்த மந்திரங்களை ஜபித்தாள்.

மனத்தி மிகுந்த துக்கமிருந்தாலும் சந்தோஷித்தவளைப் போல் காட்டிக் கொண்டு, ராமனைத் தன் அருகில் அழைத்து உச்சி முகர்ந்து ஆலிங்கனம் செய்து தழதழத்த வார்த்தைகளால், "நீ உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற சௌக்கியமாகப் போய் வா. உன் எண்ணங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து நோயில்லாமல் மறுபடியும் அயோத்யைக்கு வந்து நீ நமது முன்னோர்கள் அனுஷ்டித்த க்ஷத்திரிய தர்மத்தைக் கைக்கொண்டு நீ சுகமாய் இருப்பதைப் பார்ப்பேன். காட்டில் என் மகனுக்கு என்ன நேருமோ என்ற கவலை தீர்ந்து, உன்னை மறுபடியும் பார்த்த சந்தோஷத்தால் முகம் மலர்ந்தவளாக, உதயமான பூர்ண சந்திரனைக் காண்பது போல் உன்னை மறுபடியும் காண்பேன். தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, காட்டிலிருந்து வந்து, சிம்மாசனத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதையும் பார்ப்பேன். வனவாசம் செய்து திரும்பி வந்து உன் பதவிக்குத் தகுந்த அலங்காரங்களுடன் எனக்கும் சீதைக்கும் சகல மனோரதங்களையும் பூர்த்தி செய். என்னால் பூஜிக்கப்பட்ட தேவதைகளும் சிவன் முதலியவர்களும், மஹரிஷிகளும் பூதங்களும் அஸூரர்களும் உரகர்களும் திக்குகளும் நீ வனத்திற்குப் போகும்பொழுது உனக்கு சகல மங்களங்களையும் கொடுக்கட்டும்," என்று கண்களில் நீர் ததும்ப விதிப்பிரகாரம் ஆசிர்வாதம் செய்து முடித்து, ராமனுக்கு ரக்ஷையாக அவரைப் பிரதிக்ஷணம் செய்து, மிகுந்த பிரீதியுடன் அடிக்கடி ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

ராமன் ஸ்வபாவத்திலேயே மஹாதேஜஸ்வி. கௌஸல்யையின் ஆசிர்வாதத்தாலும் ரக்ஷையினாலும் அவருடைய தேஜஸ் விருத்தியாயிற்று. பிறகு எந்த ஆபத்திலும் தர்மம் தவறாமல் நடந்து கொண்டதனால் மஹா கீர்த்தியை அடைந்த ராமன், தாயின் பாதங்களில் அடிக்கடி நமஸ்கரித்து, சீதைக்கு அந்த சமாசாரத்தைத் தெரிவிக்கத் தன் அந்தப் புரத்தை நோக்கி வந்தார்.

ததா து தேவ்யா ஸ க்ருத ப்ரதக்ஷிணோ
நீபீட்ய மாதுச்சரணௌ புந: புந: !
ஜகாம ஸீதாநிலயம் மஹாயஸா
ஸ ராகவ: ப்ரஜ்வலித: ஸ்வயா ஸ்ரியா !!




ஸர்க்கம் 25 நிறைவு பெற்றது.

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு, மங்கள சுலோகங்களை படித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


(((((((((ஸ்ரீ ராம ராம ராம)))))))))

Friday, April 29, 2011

கௌசல்யை சம்மதித்தது ஸர்க்கம் 24

ஸர்க்கம் 24
கௌசல்யை சம்மதித்தது

தம் ஸ்மீக்ஷ்ய த்வவஹிதம் பிதுர் நிர்தேச பாலனே !
கௌஸல்யா பாஷ்பஸம்ருத்தா வசோ தர்மிஷ்ட மபரவீத் !!


"ராமன் தர்மத்திலிருந்து விலகமாட்டான். அவனுடைய தந்தையின் வார்த்தைப்படி நடப்பான் என்பதில் சந்தேகமில்லை," என்று கௌசல்யை நிச்சயமகத் தெரிந்து கொண்டு, அந்த சமயத்தில் கண்ணீர் விடுவது அபசகுனம் என்றெண்ணி அடக்கிக் கொண்டு, "எனக்கும் தசரதருக்கும் அருமைக் குழுந்தையாகப் பிறந்த நீ, இதுவரையில் துக்கத்தையே அறியாதவன்.காட்டிற்கு போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் நெல்லுகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கித் தின்று எப்படிப் பிழைப்பாய்?. உன் வேலைக்காரர்களும் பரிசாரர்களும் நேர்த்தியான அன்னத்தைப் புசித்து சுகமாக இருக்கிறார்களே. அவர்களுக்கு தலைவனான நீ, காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் தின்று எப்படிப் பிழைப்பாய்?. "ராமன் தசரதனுக்கு மூத்த புதல்வன். அவனிடத்தில் அவருக்கு எல்லையற்ற அன்பு. உத்தம குணங்கள் யாவும் பொருந்தியவன். அப்படியும் அவனை அவர் ராஜ்யத்திலிருந்து துரத்திவிட்டார்",என்று ஒருவன் கேட்டால் அதை அவன் நம்புவனா? அப்படியே நம்பினாலும், ராமனுக்கே ஆபத்து நேரும் பொழுது நமது கதி என்ன ஆகுமோ என்று திகிலடைய மாட்டானா? எல்லாப் பிராணிகளுக்கும் ஆனந்த்தத்தை உண்டுபண்ணும் நீயே காட்டிற்குப் போகும்படி நேர்ந்ததை நினைத்தால், எல்லோருக்கும் சுக துக்கங்களைக் கொடுக்கும் சக்தி தெய்வமே. அதை விட மேலானது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. உன்னை விட்டுப் பிரிவதால் உண்டாகும் சோகமென்ற நெருப்பு, கோடை காலத்தில் வனத்திலிருக்கும் புல் பூண்டுகளைக் காட்டுத் தீ எரிப்பது போல, என்னை எரிக்கிறது. அதற்கு என் தேகமே இருப்பிடம். உன்னைப் பார்க்காமல் இருப்பதென்ற காற்றால் அது அது வளர்க்கிறது. உன்னை நினைத்து பிரலாபித்ததால் உண்டாகும் துக்கமே அதைப் போஷிக்கும் ஸமித்துகள். ஆறாகப் பெருகும் கண்ணீரே அதில் ஹோமம் செய்யப்படும் ஆஹூதிகள். உன்னைப் பற்றி கவலையால் உஷ்ணமே இதிலிருந்து கிளம்பும் புகை. இவைகளைச் சேர்த்து வைக்கும் புருஷப் பிரயத்தினமே என் பெரு மூச்சுகள். அதை அணைக்கும் தண்ணீரைப் போன்றவனே நீ. அந்த தண்ணீரில்லாமல் இந்த பாழும் நெருப்பு வர வர வளர்ந்து என்னை நாசம் செய்யப் போகிறது. தன் கன்றையும் பசு பின் தொடர்வது ஆச்சரியமா? நீ எங்கே போகிறாயோ அங்கே நானும் வருவேன்", என்றாள்.


ராமன்,"அம்மா! தாங்கள் ஒன்றை யோசிக்கவேண்டும். நானும் காட்டிற்குஒ போய், தாங்களும் என்னுடன் வந்து, கைகேயியால் வஞ்சிக்கப்பட்ட என் தந்தையை கை விட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பது நிச்சயம். சாதாரணமான பெண்களுக்கே பர்த்தாவைக் கை விடுவது வெகுக் குரூரமான செய்கை. தாங்களோ அதை மனதால் நினைப்பது பிசகு. என் தந்தையான சக்கரவர்த்தி உயிரோடுடிருக்கும் வரையில் தாங்கள் அவருக்கு பணிவிடை செய்யவேண்டும். இதுவே நமது முன்னோர்களின் நித்தியமான தர்மம்", என்றார்.


கௌசல்யை மஹா தர்ம சிந்தையுள்ளவள். ஆகையால் ராமனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்படியே செய்வதால் ஒப்புக் கொண்டாள். பிறகு அவர் அவளுடைய மனத்தில் குடி கொண்ட துக்கத்தை நீக்கி, புத்தியை ஸ்திரப் படுத்துவதற்காக "தாங்களும் நானும் மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டியதால்லவா? அவர் நம்மை ஆளும் அரசன் . நம்மைக் காக்கும் பிரபு. நமக்கு தர்மத்தை உபதேசிக்கும் குரு. குணங்களால் எல்லோரைக் காட்டிலும் மேலானவர். எல்லோருக்கும் அதிபதி. பதினான்கு வருஷங்களை ஒரு கணத்தைப் போல காட்டில் விளையாட்டாகக் கழித்துவிட்டு, மறுபடியும் தங்களுடைய பாதங்களில் பணிவிடை செய்வேன்," என்றார்.


கௌசல்யை ராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்கும் தான் அயோத்யையில் இருப்பதற்கும் சம்மதித்தாள். ஆனால் அவரிடத்தில் தான் வைத்திருக்கும் அன்பையும் தன் சக்களத்திகளின் துஷ்ட ஸ்பாவத்தையும் நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக, "ராமா! இந்த துஷ்ட ஸ்த்ரீகளின் நடுவில் நான் இருக்கவே மாட்டேன். காட்டிலிருக்கும் மிருகங்களைப் போல் உன்னுடன் ஆனந்தமாகக் காலம் கழிப்பேன். என்னால் உனக்குக் கொஞ்சம் கூடக் கஷ்டம் நேராது. உன் தந்தையின் உத்தரவுப்படி காட்டிற்குப் போகவேண்டுமென்று உனக்கு இஷ்டமிருந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போ," என்றாள்.


பிறருக்கு ஏதாவது துக்கம் நேர்ந்தால் ராமனுடைய மனமும் துக்கத்தால் மிகவும் தவிக்கும். ஆனால் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதென்ற தர்மத்திற்கு எங்கே குறைவு வருமோ என்று பயந்து, கௌசல்யையின் துக்கத்தைப் பார்த்து தானும் துக்கப்படாமல், மனோதைரியத்தால் தன் துயரத்தை அடக்கிக் கொண்டார். அப்பொழுது தன் தாய் தான் வனத்திற்குப் போக சம்மதித்தவுடன் அவளுடைய துக்கத்தைச் சற்று ஆற்றுவதற்காகத் தன் துக்கத்தை வெளியிட்டு அழுது கொண்டு, "பெண்கள் பிழைத்திருக்கும் வரையில் கணவனே அவர்களுக்குதி தெய்வம். அவரே பிரபு. பூமண்டாலதியான அவர் நம்மை ரக்ஷிக்கும் பொழுது நாம் அனாதைகளல்ல. மேலும் சக்களத்திகள் தங்களுக்குக் கொஞ்சமாவது கெடுதி செய்ய நியாயமில்லை. எனக்குப் பதிலாக இந்த ராஜ்யத்தை ஆளப்போகிற பரதன் தர்மாத்மா. தர்மத்தை அனுஷ்டிப்பதிலேயே பிரியமுள்ளவன். எல்லோரிடத்திலும் பிரியமாகப் பேசுகிறவன். அப்படியிருக்க, தங்களிடத்தில் விசேஷ பக்தியுடன் பணிவு செய்வான். நான் காட்டிற்கு போன பிறகு மஹாராஜா என்னைவிட்டுப் பிரிந்த துக்கத்தால் கொஞ்சம்கூட வருத்தமடையாமல் இருக்கும்படி தாங்கள் வெகு ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரோ வயது முதிர்ந்தவர். இந்தக் கொடிய சோகத்தால் அவர் இறந்து போகாதபடி எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகத் தாங்கள் நடந்து கொள்ள வேண்டும். பெண்கன் விரதங்களையும் உபவாசங்களையும் அனுஷ்டித்து மஹா புண்ணியங்களை சம்பாதித்தாலும், கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால், பாவிகளின் கதியை அடைவார்கள். தேவ பூஜைகளைச் செய்யாவிட்டாலும், பெரியோர்களை நஸ்கரிக்காமல் போனாலும், விரதங்கலை அனுஷ்டிக்காமல் இருந்தாலும் கணவருக்கு பணிவிடையைச் செய்து வந்தால், அவர்களுக்கு உத்தம லோகங்கள் கிடைக்கும். தங்களுடைய கணவனுக்கு பணிவிடை செய்வதே பெண்களுக்கு மேலான தர்மமென்று சுருதிகளும், ஸ்மிருதிகளும் உபதேசிப்பதற்கு இதுவே காரணம். முன்னோர்களின் ஆசாரமும் இதுவே.


"புத்தியைச் செலுத்த வேறு விஷயமில்லாமல் தாங்கள் சும்மா இருந்தால் துக்கம் மேலிடும். ஆகையால் பிராம்மண சிரேஷ்டர்களை முன்னிட்டு நான் நலமாய்ப் போய் வருவதற்காகச் சாந்தி ஹோமம், புஷ்டி ஹோமம் இன்னும் மற்ற மங்கள காரியங்களைச் செய்யுங்கள். சந்தனம், தாம்பூலம், புஷ்பம் முதலியவைகளால் தேவதைகளையும் பிராம்மணர்களையும் ஆராதியுங்கள். ஸ்னானம்,ஜபம்,உபவாஸம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துக் கொண்டு சுத்தமான அன்னத்தைப் புசித்து, தங்களுடைய நாதனுக்குப் பணிவிடை செய்வதில் கவனத்தைச் செலுத்துங்கள். நான் திரும்னி வருங்காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். இப்படிச் செய்தால் தர்மாத்மாக்களில் சிரேஷ்டரான என் தந்தை பிழைத்திருப்பதையும், நான் இங்கே திரும்பி வருவதையும் பார்க்கும் பாக்கியத்தை அடைவீர்கள்", என்றார்.


புத்திரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற துக்கத்தால் கண்ணீர் பெருகக் கௌசல்யை, "காட்டிற்குப் போகவேண்டுமென்ற புத்தி உனக்கு உறுதியாக உண்டாயிருக்கிறது. என்னால் அதை மாற்ற முடியவில்லை. காலபலத்தை யாரால் ஜெயிக்க முடியும்? குழந்தாய், சாவதானமாகப் போய் வா. உனக்கு எப்பொழுதும் க்ஷேமமுண்டாகட்டும். ஜயமுண்டாகட்டும். நீ திரும்பி வந்தாலென்றி என் சோகம் தீராது. உன் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, உன் இஷ்டத்தையும் பூர்த்தி செய்து மஹா கீர்த்தியடைந்து நீ திரும்பி வந்த பிறகே நிகரற்ற சுகத்தை அனுபவிப்பேன். என் வார்த்தையையும் தள்ளிவிட்டுக் காட்டிற்குப் போகவேண்டுமென்று நீ ஒரே பிடிவாதமாக இருக்கும்படி உன்னைத் தூண்டிவிடும் விதியின் பலத்தை யாரால் அறிய முடியும்? மஹாபராக்கிரமசாலியே, க்ஷேமமாகப் போய் வா. சீக்கிரத்தில் திரும்பி வந்து மதுரமான வார்த்தைகளால் என் மனத்தை சந்தோஷப்படுத்து. ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய என் மனம் சஹிக்கவில்லையே? நீ காட்டிலிருந்து மான் தோல்,மரவுரி ஜடைகளுடன் திரும்பி வரும் காலம் இந்த கணமாகவே இருக்கக் கூடாதா?" என்று சொல்லித்துக்கித்தாள். பிறகு ராமன் காட்டிற்குப் போகத் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு, மிக்கப் பிரீதியுடன் அவருடைய க்ஷேமத்தை உத்தேசித்துச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.


ததா ஹி ராமம் வனனாஸ நிச்சிதம்
ஸமீக்ஷ்ய தேவீ பரமேண சேதஸா !
உவாச ராமம் ஸூப லக்ஷணம் வசோ
பபூவ ச ஸ்வஸ்த்யயநாபிகாங்க்ஷிணீ !!

ஸர்க்கம் 24  நிறைவு பெற்றது...

ஸ்ரீ ராம ராம ராம  

Wednesday, April 27, 2011

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது ஸர்க்கம் 23

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
ஸர்க்கம் 23
லட்சுமணன் ராமனைத் தடுத்தது
இதி ப்ருவதி ராமே து லக்ஷ்மணோ தஷிரா முஹூ: !
ச்ருத்வா மத்யம் ஜகாமேவ மநஸா துக்க ஹர்ஷயோ: !!


ராமன் இப்படிச் சொல்ல லட்சுமணன், தான் அதற்கு சம்மதிக்காததற்கு அடையாளாமாகத் தலையைக் கீழே குனிந்து கொண்டு "நமது தமையன் தர்மத்தை அனுஷ்டிப்பதில் உறுதியாய் இருக்கிறாரே" என்று சந்தோஷத்தையும், ராஜ்யத்தை விட்டுப் போகிறாரே என்று துக்கத்தையும் அடைந்தார். ஆனால், அந்த அபிப்பிராயத்தை வார்த்தையால் தெரிவிக்கவில்லை. அந்த எண்ணமும் அடுத்த கணத்தில் மாறிவிட்டது. அதிக கோபம் கொண்ட சிங்கம் புருவத்தை நெறிப்பது போல தன் புருவங்களை நெறித்துப் பெட்டியில் அகப்பட்ட சர்ப்பத்தைப் போல சீறிக் கொண்டு மனத்திலுள்ள கோபத்திற்கு அடையாளமாகத் தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு , யானையின் துதிக்கை போன்ற தன் கையை ஆட்டிக் கொண்டு, குறுக்குப் பார்வையாக ராமனைப் பார்த்து , "தந்தையின் வார்த்தையை நிறைவேற்றாவிட்டால் தர்மத்திற்குக் குறைவு நேரும். நான் தர்மத்தை அனுஷ்டிக்காவிட்டால் பிறரும் அதைக் கைவிடுவார்கள். தந்தையின் கட்டளையை நிறைவேற்றாதவன், நம்மை காப்பாற்றுவானோ என்று மக்கள், என்னிடத்தில் சந்தேகப்படுவார்கள் என்று நினைத்துக் காட்டிற்குப் போவதில் தாங்கள் இவ்வளவு பரபரப்புடன் இருப்பது சரியல்ல. வீரீயம் இல்லாதவர்களும் சித்தபிரமை உள்ளவர்களும் ஷத்திரியர்களில் கீழ்பட்டவர்களுமே உண்மையில் சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுபடுவார்கள். தாங்கள் சத்திரிய சிரேஷ்டர். விதியை விலக்கும் சக்தியை இயற்கையாகவே உடையவர். கலங்காத புத்தி உடையவர். இப்படியிருக்க விதியை ஒருவராலும் வெல்ல முடியாது என்று, அந்த கையாலாகாத பதார்த்தத்தை மெச்சுவது நியாயமல்ல. மனோபலமில்லாதவர்களுக்கு விதி என்பது பிழைப்புக்கு வழியென்று பிருஹஸ்பதி சொல்லிருக்கிறார். ஆகையால், கையாலாகாதர்களே விதியை அனுசரிக்க வேண்டும். புருஷப்பிரயத்தனத்தை விதி வெல்லாது. அதை கொண்டாடலாமா?

"தந்தையின் வார்த்தயை நிறைவேற்றாமலிருந்தால் அதர்மம் நேருமென்று பயப்படுகிறீர்கள். தங்களுக்கு துரோகம் நினைத்த அந்தப் பாவிகளான கைகேயி, தசரதர் இவர்களிடத்தில் தங்களுக்கு ஏன் சந்தேகம் உண்டாகவில்லை?. அவர்கள் தர்மத்தை அனுஷ்டிக்கவில்லையா என்றால், தர்ம அனுஷ்டானமென்ற வேஷத்தால் தங்களுடைய துர்குணங்களையும், கெட்ட நடத்தைகளையும் மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமுள்ள எவ்வளவோ மக்கள் இவ்வுலகத்தில் உள்ளார்கள். தாங்கள் தர்மாத்மாவானதால் அவர்களித்தில் தங்களுக்கு சந்தேகம் உண்டாகவில்லை. அவர்களைத் தங்களைப் போல் நினைக்கிறீர்கள். தங்களுடய அபிஷேகத்தைத் தடுக்க அவர்கள் நன்றாக யோசித்து, அவர்கள் இப்படி நடக்கிறார்களென்று தங்களூக்கு ஏன் தெரியவில்லை?. வெகு காலத்திற்கு முன்பாகவே அவர்களிப்படிக் கலந்து யோசனை செய்யாவிட்டால் எப்பொழுதோ கொடுத்த வரங்களைக் கைகேயி இதுவரையில் மறந்து கேட்காமலிருப்பாளா? ராமன் எனக்கு மூத்த புதல்வன். இந்த ராஜ்யம் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வெண்டியது. ஆனால், எனக்கு, உன் புதல்வனனான பரதனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். அவன் ராமனுக்கு இளையவன். ஆகையால் அப்படிச் செய்ய மக்கள் சம்மதிக்கமாட்டார்கள். ஆகையால், அதற்கு ஒரு உபாயம் செய்வோம். ராமனுக்கு அபிஷேகம் செய்வதாக எல்லா மக்களுக்கும் மத்தியில் நான் அறிவிக்கை செய்கிறேன். பிறகு நீ முன் காலத்தில் கொடுத்த வரங்களைப் பூர்த்தி செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்து. நான் அதற்கு இஷ்டமில்லாதவன் போலும், நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக்கொள்வதாகக் காட்டிக் கொண்டு சம்மதிக்கிறேன். அப்பொழுது ராமனைப் பல வருஷங்கள் வரையில் காட்டிற்கு அனுப்பி, நமது குழந்தை பரதனுக்கு அபிஷேகம் செய்வோம்," என்று நமது தந்தை கைகேயியுடன் கலந்து துரோகமாகச் செய்த யோசனை என்று தங்களுக்கு ஏன் இன்னும் தோன்றவில்லை?. மூத்த புதல்வனிருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்வது இவ்வுலகத்தில் எவனுக்காவது இஷ்டமாகுமா? அதிலும் நான் சம்மதிப்பேனா? பொறுத்துக் கொண்டிருக்கமாட்டேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

"தாங்கள் மஹா புத்திமானல்லவா? தர்ம அனுஷ்டானமென்ற ஒரு காரணத்தால், அபிஷேகம் செய்து கொள்ள மாட்டேன். வனத்திற்கே போவேன். அப்படிச் செய்யாவிட்டால் மஹாபாவம் நேரும்" என்று பிசகான அபிப்பிராயம் கொண்டிருக்கிரீர்கள்.அந்தத் தர்மம் எனக்கு விரோதி. கைகேயியின் வார்த்தைக்குக் கட்டுபட்டு தர்ம விரோதமாயும் அனைத்து மக்களும் நிந்திக்கும் வார்த்தைகளை, நமது தந்தை சொல்லவும், ஒருவராலும் தடுக்கக் கூடாத சக்தியையுடைய தாங்கள் அவைகளை நிறைவேற்றுவதாக நிச்சயிப்பதும் எப்பொழுதாவது நேருமா?ஆகையால் தங்களுக்குச் புத்தி கலங்கியிருக்கிறதென்றி வேறல்ல. அவர்கள் கபடமாகத் தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்துவதற்காகச் செய்த ஏற்பாட்டை, உண்மை என்றெண்ணி மோசம் போகிறீர்கள் என்பதை நினைக்க நினைக்க எனக்குத் துக்கம் மேலிடுகிறது. தர்மத்தை இப்படி அனுஷ்டிப்பதில் இவ்வுலகத்தில் ஒருவருக்கும் சம்மதம் இருக்காது. அவர்கள் பெயருக்கு மட்டுமே நமக்கு தாய் தந்தையர்களே ஒழிய வேறல்ல. சத்ருக்கள் என்பதே உண்மை. நமக்கு கெடுதியைத் தேடுகிறவர்கள் காமத்திற்கு அடிமைகள். ஆகையால் அவர்களுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று எவனாவது நினைப்பானா?

"அவர்களுடய இப்படிப்பட்ட புத்தி தோன்றியது விதியால் நேர்ந்தது. கைகேயியின் குற்றமல்லவே" என்று சொன்னால் அந்த சமாதானத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? எனக்கும் சரியாகத் தோன்றவில்லை. பயந்தவர்களும் வீரியமில்லாதவர்களுமே தெய்வத்தைப் பின் பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதியுள்ளவர்களும் அதை லட்சியம் செய்யமாட்டார்கள். தன் பலத்தால் விதியை வெல்லக் கூடியவனிடத்தில் அதன் ஆட்டம் கொஞ்சமேனும் பலிக்காது. அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தையும் அது கெடுக்காது. விதியைக் காட்டிலும் புருஷப் பிரயத்தனம் பலமுள்ளதென்பதைக் காட்ட இன்று பிரத்யக்ஷமாக ஓர் உதாரணத்தைப் பாருங்கள். விதியின் பலமும் புருஷப்பிரயத்தனத்தின் பலமும் இன்று நன்றாக விளங்கும். அவைகளுக்குள்ள பேதத்தையும் தாரதம்யத்தையும் எல்லோரும் தெளிவாக அறிவார்கள். விதியே தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்ததென்று தாங்களும் இன்னும் பலரும் மக்களும் எண்ணி கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தெய்வம் என் பலத்தால் இன்று ஜயிக்கப்பட்டு என்ன பாடுபடுமென்பதை எல்லோரும் பார்ப்பீர்கள். மதம் பிடித்துச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு மாவெட்டியால் குத்துவதையும் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி ஓடும் யானையைப் போல், தடையில்லாமல் செல்லும் தெய்வத்தை, என் புத்தி என்ற பாசத்தால் அடக்கித் திருப்பிக்கொண்டு வருகிறேன். லோகபாலர்கள் ஒன்று சேர்ந்தாலும், இந்த மூன்று லோகங்களில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தாலும், தங்களுடைய அபிஷேகத்தைத் தடுக்க முடியாது. அப்படியிருக்க, தமது தந்தை தடுக்கப் போகின்றாரோ? தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்து, தங்களைக் காட்டிற்கு அனுப்பவேண்டுமென்று ரகசியமாக யோசனை செய்தவர்களையே இந்த ராஜ்யத்திலிருந்து துரத்தி அந்தக் காட்டில் பதி நான்கு வருஷங்கள் வசிக்கும்படி செய்கிறேன். தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்த வேண்டுமென்றும் அவர்களுடைய புத்திரனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கொண்டிருக்கும் ஆசையை இன்று வேரறுக்கிறேன். தெய்வத்துடன் விரோதிதுக் கொண்டு ஒருவன் தப்பினாலும் தப்பலாம். என்னை விரோதித்துக் கொண்டு உயிரோடு இருக்கமுடியுமா?

"தாங்கள் வனத்திற்கா போகவேண்டும்? போவது நிச்சயமே. ஆனால் இப்பொழுது அல்ல. இந்தக் காரணத்திற்காக அல்ல. நமது முன்னோர்களான ராஜரிஷிகள் வெகுகாலம் வரையில் ராஜ்யத்தை ஆண்டு, வயது சென்ற பிறகு வானப்பிரஸ்தாசிரமத்தைக் கைகொண்டு ராஜ்யத்தைப் புத்திரர்களிடத்தில் ஒப்புவித்து, "நமது குடிகளை உன் குழந்தையைப் போல் பரிபாலிக்க வேண்டும்", என்று கட்டளையிட்டு, வனத்திற்குப் போய்த் தவம் செய்வது வழக்கம். அப்படியே தாங்களும் அனேகமாயிரம் வருஷங்கள் வரையில் ராஜ்ய பரிபாலனம் செய்து விட்டுப் பிறகு வனத்திற்குப் போவீர்கள். அப்பொழுது தங்களூடைய புத்திரர்கள் ராஜ்யத்தை ஆள்வார்கள்."

நமது தந்தை நிலையான சிந்தனை உடையவர் அல்ல. ராஜ்யம் அடிக்கடி மாறுமென்று தங்களுக்கு சந்தேகமுண்டாகி, தங்களுக்கு ராஜ்யம் வேண்டாமென்றால், கடலை அதன் கரை காப்பது போல நான் இந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவேன். இப்படியே பிரதிக்ஞை செய்வேன். தவறினால் வீரர்கள் அடையவேண்டிய சொர்க்கம் கிடைக்காமல் போகட்டும்.

ஆகையால், இப்பொழுது தயாராயிருக்கும் பதார்த்தங்களால் அபிஷேகம் செய்து கொள்ளும் விஷயத்தில் தங்கள் மனத்தைச் செலுத்த வேண்டும். அதைத் தடுக்கும் அரசர்களை நெருங்க விடாமல் துரத்த நான் ஒருவனே போதும். இந்தக் கைகள் வெறும் அழகுக்கோ? என் வில்லும் இடுப்பில் கட்டியிருக்கும் கத்தியும் என் அம்பறையில் நிறைந்திருக்கும் பாணங்களும் வெற்ம் அலங்காரத்திற்கோ? விளையாடவோ அல்லது பெருமைக்கோ? இந்த நான்கும் நமது சத்ருக்களை வேரறுக்க போதுமானவையல்லவா? எனக்குச் சத்ருவென்று ஒருவன் ஏற்பட்டால் அவன் உயிரோடுருக்கப் பொறுக்கமாட்டேன். அவன் வஜ்ராயுதத்தைத் தரித்த இந்திரனாயிருந்தாலும் சரி, மின்னலைப் போல் பிரகாசிக்கும் என் கத்தியால் அவனுடைய பிராணனை வாங்கி விடுவேன். பாருங்கள், இன்றைக்கு என் கையால் வெட்டப்பட்ட யானைகள், குதிரைகள், மனிதர்களுடைய கைகால்கள், தலைகள் பூமியில் விழுந்து, அடர்ந்த காட்டைப் போல் சஞ்ச்சரிக்க முடியாமல் செய்து விடும். என் கத்தியால் வெட்டித் தள்ளப்பட்ட யானைகள்,கொஃஸுந்து விட்டெரியும் மலைகளைப் போலவும், மின்னல்களுடன் கூடிய மேகங்களைப் போலவும், பூமியில் விழும். நான் கையில் வில்லை எடுத்து யுத்தம் செய்ய நின்றால் இந்த உலகத்திலுள்ள புருஷர்களுக்குள் எவனாவது தன்னைச் சூரனென்றும் ஆண்பிள்ளை என்றும் சொல்லிக் கொள்ள துணிவானா? எல்லோரும் பெண்களைப் போல் ஓடி ஒளிந்து கொள்வார்களல்லவா? ஒரே சமயத்தில் ஒரே பாணத்தால் அல்ப வீரியமுள்ள பல சத்ருக்களை அடிப்பேன். இப்படி யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் மர்ம ஸ்தானங்களில் பாணங்களால் துளைப்பேன். "நீ ஒருவனாய்ப் பலரை எப்படி ஜெய்ப்பாய்?", என்றுத் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நான் உபதேசம் பெற்ற அஸ்த்திரங்களின் மஹிமை இன்று வெளிப்படும். நமது தந்தையின் அதிகாரத்தைப் பிடிங்கித் தங்களுக்கு கொடுக்கப் போகிறேன். என் இரண்டு கைகளும் சந்தனம் பூசிக் கொள்ளவும், ஆபரணங்களைத் தரிக்கவும், தானங்களைக் கொடுக்கவும், மித்திரர்களைக் காப்பாற்றவும் இதுவரையில் உபயோகப்பட்டன. அவை இன்றைக்குத் தங்களுடைய அபிஷேகத்திற்குத் தடை செய்கிறவர்களை அழிப்பதில் உபயோகப்படும். ஆகையால், தங்களுடைய விரோதியான எவனுடைய உயிரையும்,கீர்த்தியையும்,மித்திரர்களியயும் நாசம் செய்ய வேண்டும்?. நான் தங்களுடைய ஊழியன். தங்களுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பூமண்டலம் தங்களுடைய ஆளுகைக்குள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?." என்றார்.

ரகுகுலத் திலகன்,"குழந்தாய், நமது பெற்றோர்கள் பிழைத்திருக்கும் வரையில் அவர்களுடைய கட்ட்ளைப்படி நடக்க வேண்டும். அவர்கள் இறந்த பிறகு ஒவ்வொரு வருஷத்திலும் அதே திதியில் பல பேர்களுக்கு அன்னம் இடவேண்டும். கயாஷேத்திரத்தில் அவர்களை உத்தேசித்துப் பிண்டம் போட வேண்டும். இம்மூன்று காரியங்களைச் செய்வதால் ஒருவனுக்குப் புத்திரனென்று பெயர் கிடைக்கிறது. ஸ்மிருதிகள் இதையே உபதேசிக்கின்றன. ஆகையால், நமது தந்தையின் வார்த்தையை மீறமாட்டேன். எப்படியானாலும் அதை நிறைவேற்றப் போகிறேன். உலகத்தில் சாதுக்கள் அனுஷ்டிக்கும் மார்க்கம் இதுவே", என்று தான் முன்பு விஸ்தாரமாக உபதேசித்த தர்மத்தை இப்பொழுது சுருக்கமாகச் சொல்லி, லட்சுமணனுடைய கண்ணீரைத் துடைத்து, அடிக்கடி சமாதானம் செய்தார்.

விம்ருஜ்ய பாஷ்பம் பரி ஸாந்த்வ்ய சாஸக்ருத்
ஸ லக்ஷ்மணம் ராகவ வம்ஷவர்தன:!
உவாச பித்ர்யே வசனே வ்யவஸ்திதம்
நிபோத மாமேவ ஹி சௌம்ய ஸத்பதே !!

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது சர்க்கம் 23  நிறைவு பெற்றது.

ஸ்ரீ ராம ராம ராம

Tuesday, April 26, 2011

22:எடுத்த தர்ம காரியம் நிறைவேற (ஸ்ரீமத் ராமாயணம் ஸர்க்கம் 22)

ஸர்க்கம் 22
ராமன் லட்சுமணனை சமாதானம் செய்தது

அத தம் வ்யதயா தீநம் ஸவிஷேச மமர்ஷிதம் !
ச்வசந்தமிவ நாகேந்த்ரம் க்ரோத விஸ்பாரிதேக்ஷணம் !!


ராமனுடைய மனம் அவருக்கு வசப்பட்டது. சகல பிராணிகளிடத்திலும் அவர் செலுத்தும் சக்தி அந்த சமயத்தில் அவருடைய வார்த்தைகளால் வெளிப்பட்டது. லட்சுமணன் ராமனுக்கு அந்தரங்கமானவர்களில் மேலானவர். அதிகப் பொறுமையில்லாதவர். கோபத்தால் அவருடைய கண்கள் பரந்து இருந்தன. அப்படியிருந்தும் தனக்கு மித்திரனும் தம்பியும் பிரியமானவனுமான காரணத்தால் ராமன் எல்லாவற்றையும் மறந்து அவருக்கெதிரில் நின்று கொண்டு, லட்சுமணா!, நீ சுபாவத்தில் அதிக தைரியசாலி அல்லவா? அரசனிடத்திலுள்ள கோபத்தையும் என்னைப் பற்றின வருத்தத்தையும் உனக்குள் அடக்கு. அபிஷேகத்திற்காக எல்லாம் தயாராயிற்றே, இப்பொழுது அது நடக்காவிட்டால் நமக்கு அவமானமல்லவா என்றால் அது நமது பலவீனத்தால் ஏற்படவில்லையே. மேலும், நமது தந்தை செய்த பிரதிக் ஞையை நிறைவேற்றி அவர் உத்தம கதியை அடையும்படி செய்கிறோம் என்று மிகவும் சந்தோஷப்பட வேண்டும். ஆகையால் என் அபிஷேகத்திற்காகச் செய்யப் பட்ட ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு , நமது தந்தையின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய். எனக்கு அபிஷேகம் நடக்கவில்லையே என்று என் தாய்க்கு மிகுந்த வருத்தம். நான் திரும்பி வருவேனா, வரமட்டேனா என்ற பெரிய சந்தேகம். ராமன் தந்தையின் கட்டளையை வெகு சுலபமாக நிறைவேற்றி அதி சீக்கிரத்தில் வனத்திலிருந்து திரும்பி வருவான். இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாமென்று நீ அவளுக்குச் சொல்லி அவள் வருத்தப்படாமல் செய்ய வேண்டும். இந்த சந்தேகத்தால் அவள் துக்கப் படுவதை ஒரு கணம்கூட நான் பார்க்கப் பொறுக்கமாட்டேன்.

நான் இதுவரையில் தெரிந்தாவது தெரியாமலாவது என் தாய்களுக்கும் தந்தைக்கும் எந்த விஷயத்திலும் பிரியமில்லாமல் நடந்தது இல்லை. நமது தந்தை எப்பொழுதும் உண்மையை பேசுகிறவர். கொடுத்த வாக்கினை தவறாதவர். வீணாகாத பராக்கிரமம் உடையவர். இப்பொழுது தமக்கு உத்தம கதி கிடைக்காதோ என்ற பயம் அவருக்கில்லாமல் நாம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் தடுக்கப்படாமலிருந்தால் தான் கொடுத்த வரங்கள் வீணாகுமே என்று அவருடைய மனம் தவிக்கும். அதைப் பார்த்து நானும் தவிப்பேன். ஆகையால், என் அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நிறுத்தி இப்பொழுதே காட்டுக்குப் போகிறேன்.

கேகய ராஜருடைய புத்திரி தன் எண்ணம் நிறைவேறித் தன் புதல்வனான பரதனை யாதொரு கவலையுமில்லாமல் அபிஷேகம் செய்யட்டும். நான் மான் தோல், மரவுரி, ஜடை முதலியவைகளைத் தரித்துக் கொண்டு வனத்திற்குப் போனால் கைகேயியின் மனம் சந்தோஷப்படும். ராஜ்யத்தை விட்டு வனத்திற்குச் செல்லவேண்டும் என்கிற புத்தி எனக்கு உறுதியாக ஏற்பட்டிருக்கிறது. அதை மாற்ற முடியாது. ஆகையால் நீ என்னை வருத்தப்படுத்துவது சரியல்ல. நான் வனத்திற்குப் போகிறேன். தாமதம் செய்யாதே.

நான் இப்படி செய்வதற்கு தர்மமே முக்கிய காரணமென்று இதுவரையில் சொன்னேன். ஆனால் அதைவிட மேலான காரணம் ஒன்றுண்டு.நான் காட்டிற்குப் போவதற்கும் பெற்ற ராஜ்யத்தை இழப்பதற்கும் காரணம் ஈஸ்வரனே. கைகேயி அல்ல. வீணாக அவளைத்தூற்றுவதில் லாபமென்ன? கைகேயிக்கு இவ்விதமான எண்ணம் உண்டானதற்குக் காரணமும் ஈஸ்வரனே. இல்லாவிட்டால் நீ எண்ணுகிறபடி அவளுக்கு என்னை நோகடிக்க வேண்டுமென்ற புத்தி ஏன் உண்டாக வேண்டும்? எனக்கு என் தாய்களிடத்தில் எந்த பேத பாகுபாடும் இல்லை என்று உனக்குத் தெரியாதா? அதே போன்றுதான் கைகேயிக்கு என்னிடத்திலும் பரதனிடத்திலும் பேத பாகுபாடு பார்க்கும் புத்தியில்லை என்று உனக்கே தெரியுமே? அப்படியிருக்க என் அபிஷேகத்தை நிறுத்த வேண்டும் என்றும், என்னை காட்டிற்கு அனுப்ப வெண்டுமென்றும் வெகு குரூரமான கொடிய வார்த்தைகளை அவள் சொல்வதை யோசித்தால் ஈசுவரனால் அவளுடைய புத்தி மாற்றப்பட்டிருக்கிறதென்ற காரணத்தைத் தவிர வேறு எனக்குத் தோன்றவில்லை. அவளோ, நல்ல சுபாவமுள்ளவள். உத்தமமான ராஜகுலத்தில் பிறந்தவள். அதற்குத் தகுந்த தயை, பெருந்தன்மை முதலிய சிரேஷ்டமான குணங்களை உடையவள். அப்படிப்பட்ட கைகேயி கெட்ட சுபாவத்தைக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்து, நற்குணங்கள் ஏதுமில்லாத அற்ப பெண்போல் ஏன் நடக்க வேண்டும்?. வேறு யாரிடத்திலாவது சொன்னாலும் பாதகமில்லை. தன் கண்வனிடத்திலேயே ஏன் சொல்ல வேண்டும்?, தோழிகளிடத்தில் சொல்லி அனுப்பினால் பாதகமில்லை. தானே ஏன் நேரில் சொல்லவேண்டும்?. அந்த கணம் வரையில் தானும் மஹாராஜாவும் எல்லையற்ற பிரீதி வைத்திருந்த எனக்கு மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கும் வார்த்தைகளைச் சொல்லுவாளா?. ஜாடையாகச் சொல்லவும் இல்லை. நேரிடையாகப் பல தடவை சொல்லியிருக்கிறாள். இந்த விஷயங்களை யோசித்தால் இவ்வளவும் ஈசுவரனுடைய செயல் என்றே நிச்சயமாகிறது. எண்ண முடியாத சக்தியுள்ள ஈசுவரனுடைய சங்கல்பத்தை எந்தப் பிராணியும் தடுக்க முடியாதென்பதில் சந்தேகமில்லை. என் கையில் கிடைத்த ராஜ்யம் தவறிப் போனதும், என்னிடத்தில் அவளுக்கு இதுவரையிலிருந்த பிரியம் முற்றிலும் மாறினதும் இந்தக் காரணத்தாலேயே.

ஆனால், தெய்வச் செயலை மனித முயற்சியால் வெல்லமுடியாதோ என்றால், அது கொடுக்கும் பயன் களால் அதன் சொரூபத்தை அறியவேண்டுமே தவிர, அதை நேரில் பார்த்தவர்கள் உண்டா?. எவனாவது தெய்வத்தை எதிர்க்க முடியுமா? சுகம்,துக்கம்,சாந்தி,கோபம்,லாபம்,நஷ்டம்,உற்பத்தி,நாசம் முதலிய காரணம் தெரியாத யாவற்றிற்கும் தெய்வமே காரணம். கடுமையான தவம் செய்து கொண்டிருந்த விசுவாமித்திரர் முதலிய ரிஷிகளும் தெய்வத்தால் பீடிக்கப்பட்டுக் காமகுரோதங்களை அடக்க முடியாமல் சமாதி குலைந்து தங்களுடைய மேன்மையான பதவியிலிருந்து நழுவியிருக்கிறார்கள். நாம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது அதைத் தடுத்து நாம் எண்ணாத வேறோரு காரியத்தை நடத்தி வைப்பது தெய்வச் செயலே. இந்த நிச்சயத்தை உடையனாய் எனக்கு எது நேர்ந்தாலும் மனம் கலங்காமலிருப்பதால் இப்பொழுது இந்த அபிஷேகம் தடைப்பட்டாலும் அதனால் எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் உண்டாகவில்லை.

நீயும் வருத்தப்படாமல் என்னைப்போல நடந்து கொண்டு என் அபிஷேகக் காரியங்களை நிறுத்து. அதற்காகக் கொண்டு வந்திருக்கும் குடங்களிலுள்ள நீரால் நான் தபஸ்வீயாவதற்கு முந்திச் செய்ய வேண்டிய விரத ஸ் நானம் நடக்கட்டும். வேண்டாம்,ஒருவேளை நான் இந்த ராஜ்யத்திற்காக ஆசைப்பட்டுக் கபடமாக அபிஷேகம் ஏய்து கொண்டேன் என்று கைகேயிக்குத் தோன்றினாலும் தோன்றலாம். ஆகையால் அபிஷேகத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ராஜத்திரவியம் எனக்கு அவசியமில்லை. நானே நதியிலிருந்து நீர் கொண்டு வந்து ஸ் நானம் செய்கிறேன்.

லட்சுமணா,நமக்கு ராஜ்யம் கிடைக்கவில்லையே, ஐஸ்வர்யத்தை   இழந்தோமே என்று கொஞ்சம்கூட வருத்தப்படாதே. ராஜ்யத்தை ஆளுவதும் காட்டிலிருப்பதும் எனக்கு ஒன்றே. அப்படியுமல்ல, யோசித்துப் பார்த்தால் ராஜ்ய பரிபாலனத்தால் உண்டாகும் கவலையும் கஷ்டமும் பாபமும் வனவாசத்தில் இல்லை. இதுவரையில் பார்க்காத பொருள்களைப் பார்க்கலாம். ஆகையால் அரசாட்சியைக் காட்டிலும் வனவாசமே மேலானது.

லட்சுமணா, ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். தெய்வத்தின் சக்தி எல்லையற்றதென்று உனக்குத் தெரியுமே. அந்த தெய்வத்தால் ஏவப்பட்டிருப்பதால் கைகேயி நமக்கு இதமில்லாத வார்த்தைகளைச் சொல்லுகிறாள். அப்படியிருக்க என் அபிஷேகத்தை அவள் தடுத்தாளென்று நாம் சந்தேகப்படுவது நியாயமில்லை, என்றார்.

ந லக்ஷ்மணாஸ்மிந் கலு கர்மவிக்நே
மாதா யவீயஸ் யதிசங்கிதவ்யா !
தைவாபிபந்நா ஹி வதத்யநிஷ்டம்
ஜாநாஸி தைவம் ச ததாப்ரபாவம் !!

ஸர்க்கம் 22 நிறைவு.